இந்த திலகத்தை தினமும் நெற்றியில் வைத்து வந்தால் அதிர்ஷ்ட தேவதை உங்கள் கண் முன்னே வந்து நிற்பாள்.

thilagam
- Advertisement -

இயற்கையாகவே நமக்கு கிடைக்கக்கூடிய சக்தி வாய்ந்த ஒரு கல் பற்றி தான் இன்று நாம் பார்க்க போகின்றோம். இந்த கல்லை நம் வீட்டில் வைத்துக் கொண்டால் பண கஷ்டம் வராது. கண் திருஷ்டி வராது. கெட்ட சக்தியின் மூலம் எந்த ஒரு பாதிப்பும் வராது. அதிர்ஷ்டம் தானாக நம் வீடு தேடி வரும். நம் வீட்டு கதவை தட்டும். மேலும் மேலும் நம் வாழ்க்கை சிறக்க, அந்த கல்லை நாம் எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் என்பதை பற்றிய ஆன்மீகம் சார்ந்த தகவலை இப்போது தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

அதிர்ஷ்டம் பெற அஞ்சனை கல்லை பயன்படுத்தும் முறை
அந்த கல்லின் பெயரை முதலில் தெரிந்து கொள்வோம். அந்த கல்லின் பெயர் அஞ்சனை கல். இந்த கல்லை பற்றி சில பேருக்கு தெரிந்திருக்கும். சில பேருக்கு தெரிந்திருக்காது. தெரியாதவர்கள் பதிவை படித்து இந்த கல் பற்றின நல்ல தகவலை தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். நிச்சயமாக உங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு இந்த குறிப்பு உதவியாக இருக்கும்.

- Advertisement -

நாட்டு மருந்து கடைகளில் சொல்லி வைத்து இந்த அஞ்சனை கல்லை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். அந்த கல்லை ஒரு அம்மியில் வைத்து நசுக்கி தூள் செய்து கொள்ள வேண்டும். கருப்பு நிறத்தில் பொடியாக நமக்கு கிடைத்துவிடும். இதை ஒரு சிறிய கிண்ணத்தில் போட்டு தேங்காய் எண்ணெய் ஊற்றி குழைத்தால் கருப்பு நிறத்தில் மை போல நமக்கு கிடைத்துவிடும். இதை சிறிய குழந்தைகளுக்கு உள்ளங்காளில் வைத்தால் கெட்ட சக்திகள் கண் திருஷ்டிகள் அண்டாது.

பெரியவர்கள் இதை நெற்றியில் மை போல இட்டுக் கொள்ளலாம் அல்லது உச்சந்தலையில் தடவிக் கொள்ளலாம், அல்லது பெரியவர்களும் இதை உள்ளங்காலில் தடவிக் கொள்ளலாம். இந்த மையை நாம் நெற்றியில் வைத்துக் கொண்டு எந்த வேலையை செய்தாலும் அது நமக்கு வெற்றியை தரும். எனக்கு அதிர்ஷ்டமே இல்லை, நான் தொட்ட காரியம் எல்லாம் துலங்கவே துலங்காது. என்னை ராசி இல்லாதவர்கள் என்று தான் சொல்வார்கள், இப்படி எல்லாம் நிறைய பேர் சொல்லி நாம் கேள்விப்பட்டிருப்போம் அல்லவா. அவர்கள் எல்லாம் கைராசி ஆகவும் அதிர்ஷ்டக்காரர்களாகவும் மாறுவதற்கு இந்த அஞ்சனை திலகம் ஒன்றே போதும்.

- Advertisement -

பெண்கள் மாதவிடாய் நாட்களில் இந்த திலகத்தை வைத்துக் கொள்ளக் கூடாது என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். ஒரு சின்ன அஞ்சனை கல்லை வாங்கி அடர் பச்சை நிற துணியில் வைத்து கட்டி பணம் வைக்கும் பெட்டியில் வைத்தால் பணம் மேலும் மேலும் சேரும். கடன் பிரச்சனை படிப்படியாக குறையும் என்பதும் நம்பிக்கை. இஸ்லாமிய சகோதரர்கள் இந்த கல்லை பயன்படுத்தி தான் கண்ணுக்கு மை வைத்துக் கொள்வார்கள் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

இதையும் படிக்கலாமே: இவர்களை வணங்கி விட்டு நீங்கள் எந்த வேலையை செய்தாலும் அதில் உங்களுக்கு தோல்வியே இருக்காது. வெற்றி மேல் வெற்றிகள் வந்து குவியும்.

இந்த அஞ்சனைக் கல்லில் நிறைய கலப்படங்கள் இப்போது செய்யப்படுகிறது. அஞ்சனை கல்லை தூள் செய்து விட்டு அதன் மேலே காந்தத்தை காட்டுங்கள். அதில் இரும்பு துகள்கள் கலந்திருந்தால் அதெல்லாம் அந்த காந்தம் எடுத்துக் கொள்ளும். அப்போது அந்த அஞ்சனைகள் ஒரிஜினல் இல்லை என்பது அர்த்தம். அதை பரிகாரத்திற்கு பயன்படுத்தினால் முழு பலனை கொடுக்காது. நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன பரிகாரத்தை செய்து பலன் பெறலாம் என்ற கருத்துடன் இந்த பதிவை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -