தினமும் காலையில் எழுந்து இந்த 1 பொருளை தொட்டுவிட்டால் போதும். பிறகு அந்த நாளில் நீங்கள் தொட்டதெல்லாம் துலங்கும்.

manjal
- Advertisement -

நம் கையால் தொட்டதெல்லாம் துலங்க வேண்டும். நாம் மேற்கொள்ளக்கூடிய முயற்சிகள் எல்லாம் வெற்றி அடைய வேண்டும் என்றால், நம் கை ராசியாக இருக்க வேண்டும். நம்முடைய முகம் ராசியாக இருக்க வேண்டும். நாமும் ராசியான மனிதர்கள் ஆக மாற வேண்டும். இதற்கு காலையில் எழுந்தவுடன் இந்த ஒரு வேலையை நாம் செய்ய வேண்டும். இதை செய்தால், அதாவது இந்த ஒரு பொருளை நீங்கள் தொட்டுவிட்டு உங்களுடைய நாளை தொடங்கினால், நீங்கள் அந்த நாளில் செய்யக்கூடிய முயற்சிகள் எல்லாம் வெற்றி அடையும். நீங்கள் தொட்டதெல்லாம் துலங்கும் என்று வைத்துக் கொள்ளுங்கள். விடியா மூஞ்சி, நீங்கள் தொட்டதெல்லாம் துலங்கவே துலங்காது, நீ ஒரு அதிர்ஷ்டம் கெட்டவன் என்ற பெயரை மாற்றி தரக்கூடிய பரிகாரம் இது. அவ்வளவுதான்.

அதிர்ஷ்டத்தை பெற காலை எழுந்தவுடன் தொடவேண்டிய பொருள் என்ன?
காலையில் எழுந்து காலைக்கடன்களை முடித்துவிட்டு சுத்தபத்தமாக குளித்துவிட்டு, பூஜை அறைக்கு வரவும். வழக்கம் போல குல தெய்வத்தை நினைத்து விளக்கு ஏற்றுங்கள். எந்த பரிகாரம் செய்வதற்கு முன்பும் குலதெய்வத்தின் ஆசிர்வாதம் மிக மிக முக்கியம். பூஜை அறையில் ஒரு கிண்ணத்தில், ஒரு குண்டு மஞ்சள் வைத்துக் கொள்ளவும். தினமும் இந்த குண்டு மஞ்சளை குரு பகவானையும் குலதெய்வத்தையும் நினைத்து கையில் எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

கிழக்கு பார்த்தவாறு அமர்ந்து இந்த குண்டு மஞ்சளை சிறிது நேரம் கையில் வைத்து, இன்றைய நாள் இனிய நாளாக அமைய வேண்டும். இன்று நல்லது மட்டுமே நடக்கும் என்று, நான் செய்யக்கூடிய காரியங்கள் எனக்கு வெற்றியைத் தரும் என்றும், நான் தொட்டதெல்லாம் துலங்கப் போகின்றது என்றும் பாசிட்டிவாக எல்லா விஷயங்களையும் ஐந்து நிமிடங்கள் நினையுங்கள். எல்லாம் நல்லபடியாக நடந்ததாக நினைத்துக் கொண்டு அந்த விரலி மஞ்சளை உச்சந்தலையில் படும்படி வைத்து ‘ஓம் நமசிவாய’ என்ற மந்திரத்தை 27 முறை சொல்லிவிட்டு பிறகு அந்த குண்டு மஞ்சளை கிண்ணத்திலேயே வைத்துவிட்டு, ஒரு நமஸ்காரம் செய்து கொண்டு உங்களுடைய தினசரி வேலையை தொடங்குங்கள். அவ்வளவு தான்.

காலையில் எழுந்து நீங்கள் இந்த குண்டு மஞ்சளை தொட்டு செய்த பிரார்த்தனை எல்லாம் நல்லபடியாக நிறைவேறும். நீங்கள் தொட்ட காரியங்கள் எல்லாம் துலங்கும். நீங்கள் உங்கள் கையால் கடையில் முதல் வியாபாரம் செய்தால், முதல் போனி என்று சொல்லுவார்கள் அல்லவா, அந்த கடையில் அன்றைய நாள் முழுதும் ஓஹோ என வியாபாரம் நடக்கும் என்றால் பாருங்கள். நீங்கள் அதிர்ஷ்டசாலிகள் என்ற பெயரை பெறுவதற்கு இந்த ஒரு எளிமையான பரிகாரம் போதும்.

- Advertisement -

கிண்ணத்தில் இருக்கும் குண்டு மஞ்சளை ஒரு மாதத்திற்கு ஒருமுறை மாற்றினால் போதும். பழைய மஞ்சளை செடி, கொடிகளுக்கு கீழே போட்டு விட்டு மீண்டும் புதிய மஞ்சலை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். ஆண்களும் இந்த பரிகாரத்தை செய்யலாம். பெண்கள், பள்ளிக்கூடம் செல்லும் குழந்தைகள் என்று எல்லோரும் இந்த பரிகாரத்தை செய்யலாம். பெண்கள் மட்டும் மாதவிடாய் நாட்களில் அந்த ஐந்து நாட்கள் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டாம் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

இதையும் படிக்கலாமே: என்ன நினைத்தாலும் அப்படியே நடக்க 7 சனிக்கிழமைகளில் பிள்ளையாருக்கு செய்ய வேண்டியது என்ன தெரியுமா? வீட்டு வாசல்ல பிள்ளையார் இருக்கா அப்போ இதை செய்ய மறக்காதீங்க!

எளிமையான ஆன்மீகம் சொல்லும் இந்த பரிகாரத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் மட்டும் செய்து பலன் பெறலாம் என்ற கருத்துடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -