அதிர்ஷ்டத்தையும் வெற்றியையும் தரும் 2 பொருள்

pillaiyar2
- Advertisement -

ஒருவர் அதிர்ஷ்டசாலி என்பதை எதை வைத்து சொல்லுவோம். அவர்கள் கையில் நிறைய பணம் இருக்கிறது. பெரிய பங்களா இருக்கிறது. 100 பவுன் நகை இருக்கிறது என்றால் அவன் அதிர்ஷ்டசாலி. அப்படித்தானே, அப்படி கிடையாதுங்க, ஒரு மனிதனுக்கு நல்ல அப்பா, நல்ல அம்மா, நல்ல குடும்பம், நல்ல மனைவி, நல்ல கணவன் நல்ல பிள்ளைகள், ஆரோக்கியம், மன நிம்மதியான வாழ்க்கை கிடைத்தால் அவன் தான் அதிர்ஷ்டசாலி.

இதை நாம் என்றாவது சிந்தித்து இருக்கிறோமா. இதையும் தாண்டி இரண்டு கண்ணு நல்லா தெரியுது. வாய் நல்லா பேசுது. ரெண்டு காலால நல்லா நடக்குறோம். உடலில் உள்ள உறுப்புகள் எல்லாம் சரியாக வேலை செய்கிறது. அப்ப நீங்க அதிர்ஷ்டசாலி தானே. ஏன் அடுத்தவர்களை பார்த்து நாம் பொறாமை பட வேண்டும்.

- Advertisement -

நமக்கு அதிர்ஷ்டம் இல்லை என்று நாம் ஏன் நினைக்க வேண்டும். எப்போதுமே அப்படி நினைக்காதீங்க. நீங்க எப்போதுமே அதிர்ஷ்டசாலிகள் தான். முயற்சிகளை மேற்கொண்டால் வெற்றி தானாக உங்கள் பின்னால் வரும். இந்த தகவலை முன் நிறுத்தி இன்றைய பதிவிற்குள் பயணம் செய்வோம்.

சரிங்க நீங்க என்ன சொன்னாலும் எங்களுடைய மனது திருப்தி அடையாது. அதிர்ஷ்டத்தை எங்களுடன் கூட்டிச்செல்ல நாங்கள் செய்யக்கூடிய முயற்சிகள் எங்களுக்கு வெற்றியை மட்டுமே கொடுக்க கண்டிப்பாக ஏதாவது ஆன்மீகம் பரிகாரம் தேவை என்று சொல்பவர்கள் நிச்சயம் இருப்பீங்க. அவர்களுக்காக இந்த பதிவு.

- Advertisement -

அதிர்ஷ்டம் பெற நம் கையில் இந்த இரண்டு பொருட்களை எடுத்துச் செல்ல வேண்டும். மஞ்சள் நிறத்தில் இருக்கக்கூடிய எலுமிச்சம்பழம். பச்சை நிறத்தில் வாடாமல் இருக்கக்கூடிய அருகம்புல். இன்னைக்கு ரொம்ப ரொம்ப முக்கியமான வேலைக்காக வெளியே போகப் போறீங்க. இதுல சக்ஸஸ் ஆனீங்கன்னா, வாழ்க்கையில டாப்ல போய்ட்டிங்க.

அப்ப அதிர்ஷ்டம் உங்க பக்கத்தில் இருக்கணும். வெற்றியும் உங்கள் பக்கத்தில் இருக்கணும். அதற்கு இந்த இரண்டு பொருட்களும் உங்களோடு இருக்கணும். காலையில் எழுந்து சுத்தபத்தமாக குளித்துவிட்டு சூரியனை நமஸ்காரம் செய்துவிட்டு, 2 உள்ளங்கைகளை ஏந்தி, ஒரு கையில் எலுமிச்சம் பழம், ஒரு கையில் அருகம்புல் இந்த இரண்டு பொருட்களும் உங்கள் உள்ளம் கைகளில் இப்போது இருக்கிறது.

- Advertisement -

அப்படியே இரண்டு கையை ஏந்திய படி இறைவனிடம் வரம் கேளுங்கள். இன்றைக்கு நான் மேற்கொள்ளும் காரியம் எனக்கு சாதகமாக அமைய வேண்டும். எனக்கு அதிர்ஷ்டம் தேவை எனக்கு வெற்றி தேவை என்று பரிபூரணமாக வேண்டுதல் வைத்து, இந்த இரண்டு பொருட்களையும் ஒரு மஞ்சள் துணியில் வைத்து கட்டி, பேகில் வைத்து எடுத்துட்டு போங்க.

நீங்க செல்லக்கூடிய காரியம் நிச்சயம் சக்சஸ் ஆகிடும். மஞ்சள் நிறத்தில் இருக்கக்கூடிய எலுமிச்சம் பழம் குரு பகவான். வெற்றியையும் அதிர்ஷ்டத்தையும் உங்களோடு அழைத்து வருவார். அருகம்புல் விநாயகருக்கு உரியது. இந்த அருகம்புல் உங்கள் கையில் இருந்தால் எடுக்கும் முயற்சியில் எந்த தடையும் வராது.

இதையும் படிக்கலாமே: வற்றாத பண வரவுக்கு மகாலட்சுமி தாயார் வழிபாடு

உங்களுக்கு குறுக்கே உங்களுக்கு எதிரே எவனும் வாயை திறந்து பேசவே மாட்டார்கள். பிறகு தடைகள் வருவதற்கு வாய்ப்பு எங்கே இருக்கிறது? தடைகள் இல்லை என்றால் வெற்றி உங்களுக்கு கிடைத்துவிடும். அவ்வளவு தாங்க பரிகாரம். நம்பிக்கை உள்ளவர்கள் ஆன்மீகம் சார்ந்த இந்த பரிகாரத்தை பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -