அதிர்ஷ்டத்தை வாரி வழங்கக்கூடிய அற்புதமான வேர்

maathulai veer
- Advertisement -

வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற எண்ணம் யாருக்கு தான் இல்லை. அனைவரும் ஏதாவது ஒரு ரூபத்தில் முன்னேறிக்கொண்டே இருக்க வேண்டும் என்று தான் ஆசைப்படுவார்கள். அப்படி முன்னேற்றத்தை நோக்கி செல்லும் பொழுது திடீரென்று தடைகள்கள் ஏற்படும். அப்படிப்பட்ட தடைகளை போக்குவதற்கு எந்த வேரை பயன்படுத்த வேண்டும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

பொதுவாக மூலிகைகளுக்கு என்று தனி மகத்துவம் இருக்கின்றது. எந்த அளவுக்கு உடலில் இருக்கக்கூடிய நோய்களை போக்குவதற்கு மூலிகைகள் உதவுகிறதோ அதே போல் தான் நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய பிரச்சனைகளை தீர்ப்பதற்கும் அவை உதவி புரிகின்றன. ஒவ்வொருவருக்கும் அவருடைய தேவைகள் மாறிக்கொண்டே இருக்கும். அப்படி பட்டவர்கள் தங்களிடம் எந்த பொருளை வைத்துக் கொண்டால் அவர்களின் தேவைகள் நிறைவேறும் என்று பார்ப்போம்.

- Advertisement -

பொதுவாக மகாலட்சுமியின் அம்சமாக கருதப்படுவது தான் மாதுளை மரம். எந்த வீட்டில் மாதுளை மரம் இருக்கிறதோ அந்த வீட்டில் மகாலட்சுமி தாயார் குடியிருப்பார் என்று கூறப்படுகிறது. மேலும் மாதுளம் பழத்தை மகாவிஷ்ணுவிற்கு நாம் நெய்வேத்தியமாக வைக்கும் பொழுது அவர் நாம் விரும்பியது அனைத்தையும் தருவார் என்றும் கூறப்படுகிறது. அப்படிப்பட்ட மாதுளை மரத்தில் இருக்கக்கூடிய இலை, பூ, காய், கனி, வேர், பட்டை என்று அனைத்துமே மருத்துவமிக்க பொருளாக திகழ்கிறது.

அப்படிப்பட்ட இந்த மாதுளம் மரத்தில் இருந்து நாம் ஒரு சிறிய வேரை எடுத்து நம்முடன் வைத்துக் கொண்டால் நம்முடைய தேவைகள் என்னவோ அதை இந்த வேர் பூர்த்தி செய்யும் என்று கூறப்படுகிறது. நிறைந்த அமாவாசை அன்று இந்த மரத்திற்கு தண்ணீர் ஊற்றி, ஊதுபத்தி, தூபம், கற்பூரம் காட்டி “உன்னிடம் இருந்து ஒரு சிறிய வேரை நான் எடுக்கிறேன். எனக்கு நல்ல வழி காட்டுவாயாக” என்று மனதார வேண்டிக் கொண்டு எந்த பக்கம் செல்கின்ற வேராக இருந்தாலும் பரவாயில்லை அந்த வேரை லேசாக மண்ணைத் தோண்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

இப்பொழுது அந்த வேரை மஞ்சள் கலந்த தண்ணீரில் சுத்தம் செய்து கொண்டு அதை கழுத்தில் டாலராகவோ அல்லது பிரேஸ்லெட் ஆகவோ போட்டுக் கொள்ளலாம். இவ்வாறு செய்ய இயலாதவர்கள் தங்களுடன் ஏதாவது ஒரு ரூபத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். வேரை அப்படியே வைத்துக் கொள்ளலாம் அல்லது வெள்ளை நிற துணியில் அதை வைத்து சுருட்டியும் வைத்துக் கொள்ளலாம். யார் இந்த வேரை வைத்திருக்கிறார்களோ அவர்களின் தேவைகளை இந்த வேர் பூர்த்தி செய்யும் என்று கூறப்படுகிறது.

படிக்கும் மாணவர்களாக இருந்தால் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். வேலை தேடுபவர்களாக இருந்தால் அவர்களுக்கு வேலை கிடைக்கும். பண வரவிற்காக முயற்சி செய்பவர்களாக இருந்தால் அவர்களுக்கு பணவரவு ஏற்படும். கடன் பிரச்சினையை தீர்ப்பதற்கு முயற்சிப்பவர்களுக்கு கடன் பிரச்சனை தீரும் என்று அடுக்கிக் கொண்டே செல்லலாம்.

இதையும் படிக்கலாமே: வீட்டில் தெய்வ சக்தியை அதிகரிக்க இதுவரை யாருக்கும் தெரியாத ஆன்மீக குறிப்பு

இந்த எளிமையான வேர் பரிகாரத்தை நாமும் நம் வீட்டில் இருக்கும் அனைவருக்கும் சேர்ந்து செய்து மகிழ்ச்சியுடனும் நிம்மதியுடனும் வாழ்வோம்.

- Advertisement -