இந்த இலையைக் கொண்டு இறைவனுக்கு அர்ச்சனை செய்தால், நீங்கள் சகலகலா வல்லவனாக மாறிவிடலாம். திறமைசாலின்னா அது நீங்களா தான் இருப்பீங்க.

amman6
- Advertisement -

சகலகலா வல்லவன் என்றால், எல்லா விஷயங்களிலும் திறமையாக செயல்படுவது, அதி புத்திசாலித்தனமாக சிந்திப்பது, வரக்கூடிய பிரச்சனைகளுக்கு உடனடியாக தீர்வை கொடுப்பது, பலவிதமான விஷயங்களை தெரிந்து வைத்துக் கொள்வது, எந்த துறையை தேர்ந்தெடுத்து அதிலிருந்து பொதுப்படையான கேள்விகளை கேட்டாலும் அதைப்பற்றி தெளிவாக விளக்கம் அளிப்பது, இப்படி சகல வித்தையையும் தெரிந்து வைத்திருக்கக் கூடிய ஒருவனைத்தான் தான் சகலகலா வல்லவன் என்று சொல்லுவார்கள்.

இது ஆண்களுக்கும் பொருந்தும். பெண்களுக்கும் பொருந்தும். பெண்களாக இருந்தால் நீங்கள் சகலகலாவல்லி என்று நினைத்துக் கொள்ளலாம். ஆண் பெண் யார் வேண்டும் என்றாலும் இந்த பரிகாரத்தை செய்யலாம். இந்த பரிகாரத்தை செய்ய தொடங்கினால் உங்களுடைய மந்தத்தன்மை நீங்கும். சோம்பேறித்தனம் உடம்பை விட்டு நீங்கும். சுறுசுறுப்பாக செயல்பட்டு புத்தி கூர்மையோடு ஞாபக சக்தியுடன் உங்களுடைய வேலையை செய்வீர்கள்.

- Advertisement -

குறிப்பாக படிக்கின்ற குழந்தைகள் இந்த பரிகாரத்தை செய்தால் அவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். மங்கி போன புத்தி கூட மீண்டும் சுறுசுறுப்பாக செயல்பட தொடங்கும். சரி பரிகாரத்தை பார்த்து விடுவோம். இந்த பரிகாரத்திற்கு நமக்கு முதலில் தேவைப்படக்கூடிய இலை அத்திமர இலை. அத்தி மரத்திற்கு நேர்மறை ஆற்றலை ஈர்க்கக்கூடிய சக்தி அதிகமாக உள்ளது. நாம் எதை நினைத்துக் கொண்டு இந்த இலையால் இறைவனுக்கு அர்ச்சனை செய்கின்றோமோ அது உடனடியாக நடக்கும்.

புத்திசாலித்தனத்திற்கு உரிய கிரகம் சந்திர பகவான். சந்திர பகவானுக்கு உரிய சமித்து இந்த அத்தி மரம். அத்தி மர இலை. பரிகார பூஜைக்கு தினமும் இந்த அத்தி மர இலைகள் தேவைப்படும். ஆகவே தெரிந்த இடத்தில் சொல்லி வைத்து அத்தி மர இலைகளை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

காலையில் எழுந்து சுத்த பத்தமாக குளித்துவிட்டு பூஜை அறையில் உள்ள எந்த ஒரு சுவாமி படத்தை வேண்டும் என்றாலும் நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். சிவன், பெருமாள், அம்மன் என்ற எந்த சுவாமி படம் உங்கள் வீட்டில் இருந்தாலும் சரி, அந்த தெய்வத்திற்கு அத்தி மர இலையால் மாலை கட்டியும் போடலாம். அப்படி இல்லை என்றால் அத்திமர இலைகளை வைத்து அர்ச்சனையும் செய்யலாம்.

இப்படி தினந்தோறும் அத்திமர இலைகளைக் கொண்டு வீட்டில் இருக்கக்கூடிய இறைவனுக்கு வழிபாடு செய்து வந்தால், உங்களுடைய திறமை மேலோங்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. மறைந்திருக்கும் திறமை வெளிப்பட தொடங்கி விடும். இறுதியாக அத்தி மரத்தை பற்றிய மற்றொரு சுவாரசியமான விஷயம் இதோ உங்களுக்காக.

அத்தி மரத்தைக் கொண்டு சிறிய முக்காலியாக செய்து கொள்ளுங்கள். அதாவது தீபம் ஏற்றுவதற்கு பயன்படுத்துவார்கள் அல்லவா முக்காலி. அதுபோல சிறிய முக்காலி ஒன்றை தயார் செய்து கொள்ளுங்கள். இதன் மேலே தினமும் அகல் விளக்கு ஏற்றி பூஜையறையில் அம்பாளை வழிபாடு செய்து வந்தால் உங்களுக்கு இருக்கும் கடன் சுமை குறையும். பண வரவு அதிகரிக்கும். நம்பிக்கை உள்ளவர்கள் முயற்சி செய்து பார்த்து பலன் பெறலாம் என்று கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -