கடலை மாவுடன் இந்த 1 பொருளை சேர்த்து வாரம் ஒரு முறை மசாஜ் செய்தால் இவ்வளவு பலன்கள் கிடைக்குமா? இது தெரிஞ்சா இனி பார்லருக்கே போக மாட்டீங்களே!

kadalai-maavu-face
- Advertisement -

பியூட்டி பார்லருக்கு சென்று முகத்தை பளபளப்பாக வைக்க பல ஆயிரம் ரூபாய் செலவு செய்பவர்களுக்கு இந்த ஒரு விஷயம் தெரிந்தால் இனி அந்த செலவே உங்களுக்கு இருக்காது. சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கவும், இளமையுடன் ஜொலிக்க செய்யவும் கூடிய ஆற்றல் இந்த ஒரு பொருளுக்கு உண்டு. அதை கடலை மாவுடன் சேர்த்து பயன்படுத்தும் பொழுது தொட்டுப் பார்த்தால் பட்டுப் போல பஞ்சென்ற மேனி நமக்கும் உருவாகுமே! செலவில்லாத எளிதான ஃபேசியல் பேக் வீட்டிலேயே செய்வது எப்படி? என்கிற அழகு குறிப்பு ரகசியத்தை தொடர்ந்து இந்த பதிவை படித்து தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

சிலருடைய சருமத்தை தொட்டு பார்த்தாலே ஹார்டாக இருக்கும். இந்த கடினமான முரட்டு தன்மை உள்ள சருமத்தை சிறு பிள்ளைகளின் சருமம் போல பஞ்சென்று மென்மையாக்க செய்யக்கூடிய ஆற்றல் இந்த ஒரு பொருளுக்கு உண்டு. இது பாதாமில் இருந்து எடுக்கப்படுகிறது. ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்ஸ் நிறைந்துள்ள பாதாமில் இருந்து எடுக்கப்படும் இந்த எண்ணெய் பாதாம் எண்ணெய் என்று அழைக்கப்படுகிறது.

- Advertisement -

வெறுமனே பாதாம் ஆயிலை நீங்கள் முகத்திற்கு தொடர்ந்து இரவு தூங்கும் முன்பு தடவி காலையில் எழுந்து குளித்து வந்தாலே சருமம் எத்தகைய பிரச்சனையிலிருந்தும் எளிதாக தப்பித்துக் கொள்ளும். அப்படி இருக்க ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு சுத்தமான பாதாம் எண்ணெயுடன், ஒரு டேபிள்ஸ்பூன் அளவிற்கு கடலை மாவு சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதை ஒரு பேஸ்ட் போல குழைத்து அதை உங்களுடைய விரல்களால் சர்குலர் மோஷனில் வட்டமாக சுழற்றி மசாஜ் செய்ய வேண்டும்.

நெற்றிக, கண்ணம், உதடுக்கு கீழ் இருக்கும் பகுதி, மூக்கு, மூக்கு இடுக்குகள் போன்ற எல்லா இடங்களிலும் இது போல ஜென்டிலாக மென்மை தன்மையுடன் நீங்கள் மசாஜ் செய்து கொள்ள வேண்டும். குறைந்தது 15 நிமிடங்களில் இவ்வாறு மசாஜ் செய்த பின்பு நீங்கள் வெதுவெதுப்பாக இருக்கும் தண்ணீரில் முகத்தை கழுவிக் கொள்ளுங்கள். பிறகு மெல்லிய காட்டன் துணியால் முகத்தை ஒற்றி எடுங்கள். எப்பொழுதும் முகத்தை துடைக்கும் பொழுது அழுத்தம் கொடுத்து துடைக்க கூடாது.

- Advertisement -

மெல்ல ஒற்றி எடுக்க வேண்டும். அவ்வளவுதான், முகப்பருக்கள் இருப்பவர் கண்டிப்பாக இந்த ஒரு முறையை கையாள வேண்டும். முகத்தை ஒற்றி எடுப்பதால் முகப்பருக்கள் வேறு ஒரு இடங்களுக்கு பரவாமல் பாதுகாக்கப்படுகிறது. இது போல நீங்கள் வாரம் ஒரு முறை அல்லது பத்து நாட்களுக்கு ஒரு முறை செய்து வந்தால் கூட உங்களுடைய சருமத்திற்குள் எந்த விதமான பிரச்சனைகளும் வந்து ஊடுருவாது.

இதையும் படிக்கலாமே:
எவ்வளவுதான் சுத்தமாக வைத்திருந்தாலும் அடிக்கடி தலையில் அழுக்கு சேர்கிறதா? இதனால் உதிரும் முடி உதிர்தலை உடனடியாக சரி செய்ய இப்படி பண்ணினா போதுமே!

கடலை மாவு மூடி இருக்கும் முக துவாரங்களை திறக்க செய்யும். மேலும் இது சரும துளைகளுக்குள் இருக்கும் அழுக்குகளை வெளியேற்றும். இறந்த செல்களை நீக்கி புதிய செல்களை உருவாக்க செய்யும். இதனுடன் சேர்க்கப்படும் பாதாம் எண்ணெய் நம்முடைய சருமத்தை சுத்தம் செய்து ஈரப்பதமாக வைத்துக் கொள்ளவும் உதவுகிறது. வறண்ட தன்மை இல்லாமல் ஈரப்பதத்துடன் எப்போதும் இருக்க செய்யக்கூடிய இந்த ஒரு எளிய குறிப்பை நீங்கள் தவிர்க்காமல் செய்து பாருங்கள், இனி அடிக்கடி இதை கடைபிடிக்க ஆரம்பித்து விடுவீர்கள்.

- Advertisement -