பாய் வீட்டு பிரியாணி மசாலா அரைக்கும் முறை

bai veettu briyani masala
- Advertisement -

இப்போதெல்லாம் ஒரு விருந்து விசேஷமான சாப்பாடு என்றாலே அனைவரின் தேர்வும் பிரியாணியாகத் தான் இருக்கிறது. முன்பெல்லாம் இந்த பிரியாணி அத்தனை பிரபலமாக இருக்க வில்லை. இப்போது தினம் தினம் சாப்பிட்டாலும் கூட பிரியாணிக்கு இருக்கும் மவுசு கொஞ்சமும் குறைவதில்லை. அந்த பிரியாணியிலும் பலவகை இப்போது வந்து விட்டது.

என்ன தான் வகை வகையான பிரியாணிகள் இருந்தாலும் கூட பாய் வீட்டு பிரியாணி என்றால் அன்றிலிருந்து இன்று வரை அதற்கென தனி ரசிகர் பட்டாலும் இருக்கத் தான் செய்கிறார்கள். இதற்கு காரணம் அவர்கள் பிரியாணியில் சேர்க்கும் ஒரு வகை மசாலா தான். அந்த மசாலாவை எப்படி அரைப்பது என்கிற சீக்ரெட்டை சமையல் குறிப்பு குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

பாய் வீட்டு பிரியாணி மசாலா அரைக்கும் முறை

இந்த பிரியாணி மசாலா செய்ய நமக்கு மூன்றே பொருள் தான் தேவை. அது பட்டை கிராம்பு ஏலக்காய் இவைகள் தான். இவற்றை வாங்கும் போதே தரமானதாக பார்த்து வாங்கிக் கொள்ளுங்கள். ஏலக்காயில் விதைகள் அதிகமாக இருப்பதாக வாங்க வேண்டும்.

அதே போல் பட்டையும் சாயம் பூசியது தற்போது விற்பனையில் உள்ளது. அதை வாங்கும் போதே சரி பார்த்து வாங்குங்கள். கிராம்பின் மேலே இருக்கும் கொம்பு போன்ற பகுதி உடையாமல் இருப்பதாக பார்த்து வாங்குங்கள். இவற்றையெல்லாம் தரமாக பார்த்து வாங்கினாலே சுவை பிரமாதமாக இருக்கும்.

- Advertisement -

மசாலா பொருட்களின் அளவு

கிராம்பு – 20 கிராம்,
ஏலக்காய் – 30, கிராம்
பட்டை 50 கிராம்.

இதில் முதலில் ஏலக்காவை போட்டு அத்துடன் ஒன்னரை ஸ்பூன் சர்க்கரை சேர்த்துக் கொள்ளுங்கள். இதை சேர்ப்பதன் மூலம் ஏலக்காய் நன்றாக அரைபடுவதுடன், சர்க்கரை சுவையுடன் சேர்க்கும் போது பிரியாணியும் நன்றாக இருக்கும். ஏலக்காவை நல்ல ஃபைன் பவுடராக அரைக்க வேண்டும்.

- Advertisement -

அடுத்ததாக பட்டையை சேர்க்க வேண்டும். பட்டையை நன்றாக தூள் செய்து சேர்த்துக் கொள்ளுங்கள். இத்துடன் கிராம்பையும் சேர்த்துக் கொள்ளுங்கள். இதை சேர்த்த பிறகு ஒரு ஸ்பூன் கல் உப்பை இதில் சேர்க்க வேண்டும். இப்போது அனைத்தையும் சேர்த்து நல்ல பைன் பேஸ்ட் ஆக அரைத்துக் கொள்ளுங்கள்.

அரைத்த இந்த மசாலாவை காற்று போகாத டப்பாவில் போட்டு வைக்க வேண்டும். டப்பாவில் வைக்கும் போது ஒரு பாலீத்தீன் கவரில் போட்டு அதை கட்டி அதன் பிறகு வையுங்கள். இப்படி வைத்து எடுப்பதனால் இதன் மனம் வெகு நாட்கள் வரை குறையாமல் இருக்கும். உப்பு சேர்த்து இருப்பதால் மசாலா சீக்கிரத்தில் கெட்டும் போகாது.

நீங்கள் ஒரு கிலோ அளவிற்கு பிரியாணி செய்வதாக இருந்தால் அரைத்த இந்த மசாலாவில் இருந்து இரண்டு ஸ்பூன் மட்டும் போட்டாலே போதும். வேறு எந்த வித மசாலாக்களையும் சேர்க்க வேண்டாம் சுவை அட்டகாசமாக இருக்கும் மனமும் ஆளை தூக்கும்.

அதுமட்டுமின்றி இந்த மசாலாவை மற்ற அசைவ வகைகள் சமைக்கும் போதும் சேர்த்து சபைக்கு எல்லாம் அதேபோல் சைவ குருமா வறுவல்கள் செய்யும் பொழுது இதை சேர்த்தால் சுவை அட்டகாசமாக இருக்கும். அளவு மட்டும் கால் ஸ்பூன் அல்லது அரை ஸ்பூனுக்கு மேல் சேர்க்க வேண்டாம்.

இதையும் படிக்கலாமே: எள்ளு சாதம் செய்முறை
ஒரு முறை இதில் குறிப்பிட்டுள்ள அளவுகளின் படியும் இதில் சேர்த்துள்ள பொருட்களின் படியும் பிரியாணி மசாலா அரைத்து பாருங்கள். பிறகு நீங்களே பிரியாணி சமைத்தாலும் பாய் வீட்டில் இருந்து வந்ததா என்று கேட்பார்கள் அந்த அளவிற்கு சுவை அட்டகாசமாக இருக்கும் செய்து சுவைத்து மகிழுங்கள்.

- Advertisement -