பலருக்கும் பயன்படக்கூடிய பூஜை அறை குறிப்புகள். இதனை தெரிந்து கொண்டால் நீங்களும் இவ்வாறே பூஜை செய்து பயன் பெறலாம்

poojai
- Advertisement -

பூஜை என்பது வாரம்தோறும் ஒவ்வொருவீடட்டின் பூஜை அறையிலும் வெள்ளிக்கிழமை அன்று தவறாமல் செய்யப்படுவதாகும். இவ்வாறு வீட்டில் பூஜை செய்வதன் மூலம் வீட்டிற்கு லட்சுமி கடாட்சம் கிடைக்கும் என்றும், இறைவன் அருள் எப்போதும் நமது வீட்டில் நிறைந்திருக்கும் என்பதும் நமது முழு நம்பிக்கையாகும். அவ்வாறு ஒவ்வொருவரும் ஒருவித வழக்கங்களை பின்பற்றி வருகின்றனர். ஒரு சிலர் தனது தாய்வழி வீட்டு வழக்கத்தையும், ஒரு சிலர் மாமியார் வீட்டு பழக்கத்தையும் பின்பற்றுவார்கள். இவ்வாறு இரண்டு பழக்க வழக்கங்களும் சிலருக்கு குழப்பத்தை ஏற்படுத்தும் எது சரியானது என்று. எனவே இங்கு குறிப்பிட்டுள்ள ஒரு சில குறிப்புகளை நீங்களும் தெரிந்துகொண்டு உங்களுக்கு விருப்பமான முறையை பின்பற்றி இறைவனின் அருளை பெற்றிடுங்கள். வாருங்கள் அவ்வாறு பயனுள்ள பூஜை அறை குறிப்புகளை இந்தப் பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

vilakku-poojai

குறிப்பு: 1
காலம் காலமாகவும் வீட்டில் பூஜை செய்து வந்தாலும் பூஜை பாத்திரங்களை எந்த நாளில் சுத்தம் செய்ய வேண்டும் என்ற குழப்பம் அனைவருக்கும் இருக்கின்ற ஒன்றாகும். எப்பொழுதும் பூஜை பாத்திரங்களை வியாழக்கிழமை அன்று சுத்தம் செய்துவிட வேண்டும். ஏனென்றால் வெள்ளிக்கிழமை அன்று வீடு துடைப்பது, ஒட்டடை அடிப்பது வீட்டை சுத்தம் செய்வது போன்ற விஷயங்களைத் செய்தால் நமது வீட்டின் மகாலட்சுமி வெளியே சென்று விடும் என்பது ஐதீகமாகும். எனவே அந்த நாளில் இது போன்ற வேலைகளை செய்வது என்பதை தவிர்ப்பது தான் அனைவருக்கும் நன்மையாகும்.

- Advertisement -

குறிப்பு: 2
பூஜை அறையில் நாம் வைக்கும் பஞ்சபாத்திரம் தண்ணீரை தினமும் மாற்றவேண்டுமா? என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கிறது. இவ்வாறு இந்த தண்ணீரை தினமும் மாற்றலாம் அல்லது 3 நாட்களுக்கு ஒருமுறை மாற்றிக்கொள்ளலாம். முடிந்தவரை தினமும் மாற்றுவது என்பது மிகவும் நல்லதாகும்.

kamakshi vilakku

குறிப்பு: 3
அதுபோல ஒரு சிலர் வெள்ளிக்கிழமை தீபம் ஏற்றி பூஜை செய்த பின்னர் தினமும் விளக்கு ஏற்ற வேண்டும் என்பதை வழக்கமாக வைத்திருப்பார்கள். ஆனால் ஒரு சிலருக்கு இதிலும் சந்தேகம் இருக்கிறது. அசைவம்சாப்பிடுமம் நாட்களில் எவ்வாறு விளக்கு ஏற்றுவது என்று. ஒரு சிலர் அசைவத்தை ஏற்றுக்கொள்ளும் கடவுள்களை குலதெய்வமாக கொண்டிருப்பார்கள். இவ்வாறானவர்கள் அசைவம் சாப்பிட்டு இருந்தாலும் முகம், கை, கால் மட்டும் கழுவிக்கொண்டு தீபம் ஏற்றலாம். ஆனால் சைவ கடவுளை குலதெய்வமாகக் கொண்டவர்கள் இவ்வாறு செய்தல் கூடாது. அசைவம் சாப்பிட்டடிருந்தால் அன்று விளக்கு ஏற்றுவதை தவிர்க்க வேண்டும். அதுபோல தினமும் காலை வேளையில் குளித்துவிட்டு முதலில் தீபம் ஏற்றி பூஜை செய்து அடுத்த வேலைகளை துவங்குவது என்பது குடும்பத்திற்கு அதிக நன்மையை சேர்க்கிறது.

- Advertisement -

குறிப்பு: 4
அதுபோல தினமும் விளக்கு ஏற்றும் பொழுது விளக்கின் திரிகளை மாற்ற வேண்டுமா அல்லது அதே திரியில் விளக்கேற்ற வேண்டுமா என்ற சந்தேகமும் இருக்கிறது. இந்த திரிகளை தினமும் வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம். அல்லது இரண்டு நாட்களுக்கு ஒரு முறையாவது மாற்றிக்கொள்ளலாம். இந்த திரிகளைப் ஒன்றாக சேர்த்து வைத்து ஞாயிற்றுக்கிழமை தோறும் வீட்டில் உள்ளவர்களை சுற்றிப் போடும் பொழுது அந்த கற்பூரத்தில் இந்த திரிகளையும் சேர்த்து எரித்து விட்டால் திருஷ்டி கழிந்தது என்று அர்த்தமாகும்.

panji-thiri

குறிப்பு: 5
பூஜை பாத்திரங்களுக்கும், சுவாமி படங்களுக்கும் மஞ்சள் குங்குமம் வைக்கும் பொழுது அந்தமஞ்சளளில் சிறிதளவு ஜவ்வாது கலந்து கொண்டு அதன் பிறகு போட்டு வைத்தோம் என்றால் பூஜை அறை முழுவதும் நல்லவாசனையுடனனும், தெய்வ கடாட்சத்துடனும், மங்களகரமாக இருக்கும்.

- Advertisement -