பிரம்ம முகூர்த்த வழிபாட்டில் பிரம்மாண்டமான பலனை உடனடியாகப் பெற இந்த தீபம் ஏற்றி வழிபாடு செய்தாலே போதும்.

- Advertisement -

நம்மில் நிறைய பேருக்கு பிரம்மமுகூர்த்தத்தில் கிடைக்கக்கூடிய நன்மைகள் என்னென்ன என்பது நன்றாகவே தெரிந்திருக்கும். நல்ல நாள், கெட்ட நாள், நல்ல நேரம், கெட்ட நேரம் என்பது எதுவுமே இந்த பிரம்ம முகூர்த்த நேரத்திற்கு கிடையாது. பிரம்ம முகூர்த்த நேரத்தில் நாம் எது செய்தாலும் அது நமக்கு வெற்றியைத் தான் கொடுக்கும். வாழ்க்கையில் இன்று முன்னேறிய பலபேர் இந்த பிரம்ம முகூர்த்த நேரத்தில் கண் விழித்தவர்கள் தான். இன்று பிரம்ம முகூர்த்த நேரத்தில் கண் விழிப்பவர்கள், நாளை நிச்சயமாக பிரம்மாண்ட வெற்றியாளர்களாக வருவார்கள் என்பதிலும் ஒரு துளி அளவும் சந்தேகம் கிடையாது.

நம்முடைய கஷ்டங்கள் எல்லாம் தீர வேண்டுமென்றால் பிரம்ம முகூர்த்த நேரத்தில் எப்படி தீப வழிபாடு செய்வது என்பதை பற்றிய சிறிய ஆன்மீக ரீதியான குறிப்பை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -

பொதுவாக தீப வழிபாடு என்றால் அதில் நல்லெண்ணெய் தீப வழிபாடு மிக மிகச் சிறந்தது. உங்களுடைய வீட்டில் அதிர்ஷ்டமும் ஐஸ்வர்யமும் காரிய சித்தியும் தேவையென்றால் தினம்தோறும் ஒரு மண் அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி திரி போட்டு பிரம்ம முகூர்த்த நேரத்தில் தீபம் ஏற்றி பிரார்த்தனை செய்து வழிபாடு செய்வது சிறப்பு.

இது தவிர நம்முடைய சாஸ்திரத்தில் இன்னொரு வழிபாட்டு முறையும் சொல்லப்பட்டுள்ளது. 5 மண் அகல் தீபங்களை எடுத்துக்கொள்ள வேண்டும். அந்த மண் அகல் தீபத்திற்கு மஞ்சள் குங்கும பொட்டு வைத்து ஒரு தாம்பாளத் தட்டில் அடுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். 5 மண் அகல் விளக்குகளும் வட்ட வடிவில் அடுக்கிக் கொள்ளுங்கள். குத்துவிளக்கு ஏற்றி வைத்தால் வெளிப்பக்கம் பார்த்தது போல தீபம் எப்படி சுடர்விட்டு எரியும், அதேபோல், 5 விளக்குகளையும் அடுக்கி வைத்துவிட்டு இதில் ஐந்து வகையான எண்ணெயை ஊற்ற வேண்டும். ஒவ்வொரு அகல்விளக்கிலும் ஒவ்வொரு எண்ணெய்.

- Advertisement -

நல்லெண்ணெய், இலுப்பெண்ணெய், வேப்பெண்ணெய், விளக்கெண்ணெய், நெய், இந்த ஐந்து எண்ணெய்களை ஊற்றி விட்டு தீபம் ஏற்றி வைத்துவிட்டு இறைவனிடம் பிரம்ம முகூர்த்த நேரத்தில் மனதார பிரார்த்தனை செய்து கொண்டால் உங்களுடைய வேண்டுதல் நிச்சயம் பலிக்கும். அதிகாலை 3 மணியிலிருந்து 5 மணிக்குள் இருக்கக்கூடிய நேரமே சரியான பிரம்ம முகூர்த்த நேரமாக நமக்கு சொல்லப்பட்டுள்ளது.

நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றினால் அதிர்ஷ்டம் ஐஸ்வர்யம் காரிய சித்தி கிடைக்கும். இலுப்பை எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றினால் வீட்டில் குல தெய்வ கடாட்சம் கிடைக்கும். மந்திரம் சீக்கிரத்தில் சித்தியாகும். வேப்பெண்ணை தீபம் ஏற்றினால் எதிரி தொல்லை நீங்கும். நமக்கு வரக்கூடிய ஆபத்துக்கள் அகலும். விளக்கெண்ணெயில் தீபம் ஏற்றினால் வீட்டில் நோய்நொடி அண்டாது. சிலபேருக்கு இரவில் தூக்கம் சரியாக வராது. சுறுசுறுப்பாக செயல்பட மாட்டார்கள். இப்படிப்பட்டவர்கள் இந்த விளக்கெண்ணெய் வழிபாட்டை மேற்கொள்ளலாம். நெய் ஊற்றி தீபம் ஏற்றினால் வீட்டில் லட்சுமி கடாட்சம் நிலைத்திருக்கும். நம்முடைய வாக்குவன்மை அதிகரிக்கும்.

மேலே சொன்ன விஷயங்களில் உங்களுக்கு எந்த விஷயம் மிக மிக அவசியமாக தேவையோ, அந்த விஷயத்திற்கு குறிப்பிட்ட அந்த எண்ணெயை ஊற்றி ஒரு ஒரு மண் அகல்விளக்கு தீபம் ஏற்றி வழிபாடு செய்வதும் சிறப்பு. ஐந்து விஷயங்களும் தேவை என்றால், ஐந்து எண்ணெயை ஊற்றி தீபமேற்றி பிரம்ம முகூர்த்த நேரத்தில் இறைவனை வழிபாடு செய்து வர நிச்சயம் உங்களுடைய வேண்டுதல் சீக்கிரத்தில் நிறைவேறும்.

- Advertisement -