பிரம்ம முகூர்த்த நேரத்தில் இந்த ஒரு விளக்கை ஏற்றினால் போதும். எவ்வளவு பெரிய கடன் சுமையும் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து செல்வச்செழிப்பு அதிகரிக்கத் தொடங்கும்.

brammamuhoortham
- Advertisement -

நம்முடைய வேண்டுதல் கூடிய சீக்கிரத்தில் பலிக்க வேண்டும் என்றால் அந்த வேண்டுதலை இறைவனிடமும், இந்த பிரபஞ்சத்திடமும் நாம் பிரம்ம முகூர்த்த நேரத்தில் தான் வைக்கவேண்டும். அந்த ஆண்டவன் மனிதர்களுக்கு வரப்பிரசாதமாக கொடுத்துள்ள நேரம்தான் இந்த பிரம்ம முகூர்த்த நேரம். வாழ்க்கையில் கூடிய சீக்கிரத்தில் முன்னேற வேண்டும் என்று நினைப்பவர்கள், வெற்றி காண வேண்டும் என்று நினைப்பவர்கள் நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், கடன் தொல்லையிலிருந்து விடுபட வேண்டும் என்று நினைப்பவர்கள், இந்த பிரம்ம முகூர்த்த நேரத்தை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

பிரம்ம முகூர்த்த நேரம் என்பது ஒவ்வொருவர் ஒவ்வொரு மாதிரி சொல்லுவார்கள். அதிகாலை 4.30 மணியிலிருந்து 5.00 மணிக்குள் இந்த தீபத்தை ஏற்றினால் போதும். அதுவும் பிரம்ம முகூர்த்த நேரத்தில் தான் சேரும். காலையில் எழுந்து குளித்து விட்டுதான் கட்டாயம் இந்த தீபத்தை ஏற்ற வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். வீட்டில் இருக்கும் ஆண்கள் பெண்கள் யார் கையால் வேண்டுமென்றாலும் இந்த விளக்கு ஏற்றலாம்.

- Advertisement -

தொடர்ந்து 48 வெள்ளிக் கிழமைகள் இந்த தீபத்தை ஏற்றி பாருங்கள். அதி காலையிலேயே எழுந்து சுத்தமாக குளித்துவிட்டு, பூஜை அறைக்கு வந்து 2 குத்து விளக்குகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் இலுப்பை எண்ணெயை ஊற்றி 5 முகங்களிலும் சிவப்பு நிறத்தில் திரி போட்டு குலதெய்வத்தை நினைத்து கடன் தீர வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்து கொண்டு தீபம் ஏற்றினால் உங்களுடைய கடன் பிரச்சினைக்கு சீக்கிரத்தில் ஒரு விடிவு காலம் பிறக்கும். (வியாழக்கிழமை அன்றே குத்து விளக்கை எடுத்து தேய்த்து சுத்தப்படுத்தி மஞ்சள் குங்கும பொட்டு வைத்து வெள்ளிக்கிழமை காலை தீபம் ஏற்ற தயாராக வைத்துக் கொள்ளுங்கள்.)

அதே குத்துவிளக்கில் இலுப்பெண்ணெய் ஊற்றி வெள்ளை திரி போட்டு, வெள்ளிக்கிழமை அன்று பிரம்ம முகூர்த்த நேரத்தில் தீபம் ஏற்றினால் அஷ்டலட்சுமிகளின் ஆசீர்வாதத்தை முழுமையாகப் பெற முடியும். வீட்டில் இருக்கும் வறுமை நீங்கும்.

- Advertisement -

வெள்ளிக்கிழமை பிரம்ம முகூர்த்த நேரத்தில் குத்துவிளக்கில் இலுப்பெண்ணை ஊற்றி மஞ்சள் நிற திரி போட்டு தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் குபேர பகவானின் அருளை முழுமையாகப் பெறலாம். இதோடு மட்டுமல்லாமல் வீட்டிலிருக்கும் மங்களகரமான காரியத்தடை நீங்கும். உங்களுக்கு என்ன கோரிக்கை நிறைவேற வேண்டுமோ அதற்கான திரியைப் போட்டு தீபம் ஏற்றிக் கொள்ளலாம்.

இதோடு மட்டுமல்லாமல் காமாட்சியம்மன் விளக்கில் பசு நெய் ஊற்றி தாமரைத் தண்டு திரி போட்டு வெள்ளிக்கிழமை அன்று தீபம் ஏற்றி, பூஜை செய்தால் நம்முடைய வீட்டில் மகாலட்சுமி கடாட்சம் நிலைத்திருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். கடன் பிரச்சனையில் இருந்து வெளியே வர, வறுமையை வீட்டில் இருந்து விரட்டி அடிக்க, வீட்டிற்குள் லட்சுமிகடாட்சம் நிறைந்து இருக்க, விடாமுயற்சியுடன் சேர்ந்த மேல் சொன்ன ஆன்மீக ரீதியான சின்ன சின்ன குறிப்புகளை பின்பற்றினாலே போதும். வாழ்வில் நல்ல மாற்றம் தெரியும். நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையோடு முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -