தீராத துன்பத்தை தரும் பிரம்மஹத்தி தோஷத்தால் தினம் தினம் துயரப்படுகிறீர்களா? அப்படியானால் உடனே இதை செய்து இந்த தோஷத்தில் இருந்து விரையில் விடுபட்டு நிம்மதியாக வாழுங்கள்.

navagraha
- Advertisement -

வாழ்க்கையில் எதைத் தொட்டாலும் அதில் தோல்வி, நிலையான வேலை இல்லாமல் இருப்பது, வேலை கிடைத்தாலும் அதற்கான ஊதியம் கிடைக்காமல் போவது, சமூகத்தில் அந்தஸ்து இல்லாமல் எப்போதும் பின் தங்கியே இருப்பது, உறவினர்களுக்குள்ளேயே ஒதுக்கப்படுவது இப்படி ஒரு மனிதன் வாழ்க்கையில் சந்திக்க கூடாத அனைத்து துன்பங்களையும் சந்திக்கிறான் என்றால் அவர்களை நிச்சயம் பிரம்மஹத்தி தோஷம் தாங்கி இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

இந்த பிரம்மஹத்தி தோஷம் என்பது பெரிய பாவங்களை செய்தவர்களை தான் தாக்கும் என்று சாஸ்திரங்கள் சொல்கிறது. தாய் தந்தையருக்கு உணவளிக்காமல் இருப்பது, உடன் இருப்பவர்களுக்கு துரோகம் செய்வது, தெய்வ சொத்தை அபகரிப்பது, கடவுள் படைத்த உயிரினங்களை சுயநலத்திற்காக வதைப்பது இப்படியான பெரிய பாவங்களை செய்பவர்கள் நிச்சயம் இந்த தோஷத்தின் பலனை அனுபவிப்பார்கள்.

- Advertisement -

அதுமட்டுமின்றி ஜாதக ரீதியாகவும் பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. ஒருவருடைய ஜாதகத்தில் குரு சனியின் சேர்க்கை இருக்கும் போது இந்த பிரம்மஹத்தி தோஷம் தொடரும். குறிப்பாக ஜாதகத்தில் ஒன்பதாம் கட்டத்தில் குரு சனியின் சேர்க்கை இருக்கும் போது பிரம்மஹத்தி தோஷம் கட்டாயமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்த பிரம்மஹத்தி தோஷத்தை எப்படி போக்கிக் கொள்வது என்பதை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் இப்பொழுது நாம் தெரிந்து கொள்ள போகிறோம். இந்த தோஷத்தை நிவர்த்தி செய்து கொள்ள தானம் செய்ய வேண்டும் என்று சொல்லப்படுகிறது.

பிரம்மஹத்தி தோஷ சரியாக பரிகாரம்:
இந்த தானத்தை வியாழன் அல்லது சனி இந்த இரண்டு நாளில் செய்ய வேண்டும். அதாவது வியாழன் குரு பகவானுக்குரிய நாள், சனிக்கிழமை சனீஸ்வரர் குரிய நாள். இந்த நாளில் மூன்று சொம்புகள் வாங்க வேண்டும். ஒன்று பித்தளை, ஒன்று வெள்ளி, இன்னொன்று காப்பர் இந்த மூன்று சொம்பிலும் நிறைவாக பச்சரிசியை போட்டுக் கொள்ள வேண்டும். அதன் பிறகு ஒரு புதிய தாம்பாள தட்டில் இந்த மூன்று செம்பையும் பச்சரிசியுடன் வைத்து அதில் ஒரு வேஷ்டி, துண்டு, மஞ்சள், குங்குமம், பழம், வெற்றிலை, பாக்கு, காணிக்கை என அனைத்தையும் வைத்து ஒற்றை பிராமணருக்கு தானமாக கொடுக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது.

- Advertisement -

இந்த தானத்தை கொடுக்கும் போது பிரம்மஹத்தி தோஷம் என்னை விட்டு நீங்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டு அந்த பிராமணரிடம் ஆசி பெற வேண்டும் என்று சொல்லப்படுகிறது. இது மட்டும் இன்றி இந்த தானம் செய்யும் நேரத்தில் உங்களால் முடிந்த அளவில் பிறருக்கு உணவு தானத்தையும் செய்ய வேண்டும். அது உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப எத்தனை நபர்களுக்கு வேண்டுமானாலும் செய்யலாம்.

இத்துடன் பிரம்மா சிவன் விஷ்ணு மூவரும் இருக்கும் திருத்தலங்களுக்கு சென்று வருவது மேலும் சிறப்பானதாக இருக்கும். இவை எல்லாம் செய்யும் போது நம்முடைய ஜாதகத்தில் இருக்கும் இந்த பிரம்மஹத்தி தோஷமானது முழுமையாக நம்மை விட்டு நீங்கி நமக்கு நல்ல காலத்தை ஏற்படுத்தி கொடுக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: தண்ணீரில் இந்த மூன்று பொருட்களை ஒன்றாக போட்டு பூஜை செய்து இந்த மந்திர வார்த்தை சொல்லி வீடு முழுவதும் தெளித்தால் வீட்டில் நகை பணம் கொஞ்சமும் வற்றாமல் மேலும் மேலும் பெருகிக் கொண்டே செல்லும்.

இந்த எளிமையான பரிகாரத்தின் மூலம் பிரம்மஹத்தி தோஷத்தை சரி செய்து கொண்டு உங்கள் வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகளை எல்லாம் போக்கிக் நிம்மதியாக வாழலாம் என்ற தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

- Advertisement -