குழந்தைகள் நன்றாக படிக்க விநாயகர் வழிபாடு

pillaiyar
- Advertisement -

நாளைய தினம் புதன்கிழமையோடு சேர்ந்து சதுர்த்தி திதி வந்திருக்கின்றது. புதன் புத்தி காரகன். சதுர்த்தி திதி விநாயகருக்கு உரியது. உங்களுடைய குழந்தை படிப்பில் அதிகமாக ஆர்வம் காட்டாமல் எப்போதுமே சோர்வாக, துவண்டு போய் இருக்கிறதா. மந்தமான குழந்தையை கூட சுறுசுறுப்பாக மாற்றப்போகும் ஒரு விநாயகர் வழிபாட்டை தான் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

நாளைய தினம் தொடங்கி, தொடர்ந்து 11 நாட்கள் விடாமல் இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள் சோர்ந்து போய், துவண்டு போய், படிப்பில் ஆர்வம் இல்லாமல் இருக்கும் உங்கள் குழந்தை சுறுசுறுப்பாக, துறுதுறுன்னு படிக்க தொடங்கிவிடும். அறிவாற்றலில் சிறப்பான குழந்தையாக மாறிவிடும். எதிலியுமே ஆர்வம் காட்டாமல் எப்போதுமே சோர்வாக இருக்கும் உங்கள் குழந்தை எல்லா விஷயத்திலும் ஆர்வம் காட்ட தொடங்கிவிடும். உங்கள் குழந்தையின் வாழ்க்கையை முன்னேற்றப் போகும் அந்த வழிபாடு என்ன பதிவை தொடர்ந்து படியுங்கள்.

- Advertisement -

குழந்தை நன்றாக படிக்க

நாளைய தினம் உங்கள் குழந்தையை கூட்டிக்கொண்டு பிள்ளையார் கோவிலுக்கு செல்ல வேண்டும். இப்படி பிள்ளையார் கோவிலுக்கு போகும் போது உங்களுடைய பிள்ளையின் கையால் அருகம்புல்லை வாங்கிக் கொண்டு போய் பிள்ளையாருக்கு கொடுக்க வேண்டும். கடையிலிருந்து காசு கொடுத்து அருகம்புள்ளை நீங்க வாங்கிருங்க.

வாங்கி அருகம்புல்லை உங்கள் பிள்ளைகளின் கையில் கொடுங்க. உங்க குழந்தையே அந்த அருகம்புல்லை தன் கையால் கொண்டு போய் பிள்ளையாருக்கு கொடுக்கணும். அதாவது அந்த கோவிலில் இருக்கும் அர்ச்சகர் கையில் கொடுக்க வேண்டும். இன்னும் சிறப்பாக சொல்ல போனால், அரச மரத்தடியில் இருக்கும் பிள்ளையார், அல்லது உங்க வீட்டு தெரு முனையில் வைத்திருக்கக்கூடிய பிள்ளையார், அல்லது உங்க அப்பார்ட்மெண்டிலேயே பிள்ளையார் இருந்தால், உங்கள் குழந்தையின் கையாலேயே இந்த அருகம்புல்லை பிள்ளையாருக்கு சூட்டலாம்.

- Advertisement -

அப்படி வாய்ப்பு இருந்தால் உங்கள் குழந்தையின் கையாலேயே பிள்ளையாரது தொந்தியின் பக்கத்தில் இந்த அருகம்புல்லை வைக்கச் சொல்லுங்கள். அது இன்னும் சிறப்பு வாய்ந்த பலனைத் தரும். நாளை தினம் தொடங்கிய இந்த வழிபாட்டை அதோடு நிறுத்தக்கூடாது. 11 நாள் தொடர்ந்து உங்கள் பிள்ளை கையாலேயே பிள்ளையாருக்கு அருகம்புல்லை சாத்தி வர, அந்த குழந்தையின் நடவடிக்கையில் நல்ல மாற்றங்கள் தெரிய தொடங்கிவிடும்.

குறிப்பாக இந்த பரிகாரம் சிறிய குழந்தைகளுக்காக சொல்லப்பட்டுள்ள பரிகாரம். அடித்தளம் சரியாக இருந்தால் தானே குழந்தைகள் வளர வளர நன்றாக படிப்பார்கள். ஆகவே என்னுடைய பிள்ளை இப்போதுதான் எல்.கே.ஜி படிக்குது யு.கே.ஜி படிக்குது அப்படிங்ற போது இந்த பரிகாரத்தை செய்யுங்கள்.

இதையும் படிக்கலாமே: கடன் தீர மாசி மாதத்தின் கடைசி நாள் செய்ய வேண்டிய பரிகாரம்

நான்காம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கக்கூடிய குழந்தைகளுக்கு இந்த பரிகாரம் உடனடியாக ஒரு பலனை கொடுத்து விடும். எல்லா குழந்தைகளுக்கும் பிடித்த கடவுள் பிள்ளையார். பிள்ளையாருக்கு ரொம்ப பிடித்தது குழந்தைகள். ஆகவே இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவு சூப்பரா ஒர்க் அவுட் ஆகும். நம்பிக்கை உள்ளவர்கள் இந்த பரிகாரத்தை செய்து பலன் பெறலாம்.

- Advertisement -