செவ்வாய்க்கிழமை முருகர் வழிபாடு

murugan7
- Advertisement -

ஒருவருடைய ஜாதக கட்டத்தில் செவ்வாய் ரொம்பவும் பலவீனமாக இருந்தால் அவர்களால் வாழ்க்கையில் முன்னேறவே முடியாது‌. நல்ல குடும்பம் அமையாது. நல்ல வேலை அமையாது. இருக்கக்கூடிய இடம் சௌகரியமாக இருக்காது. இப்படி பல பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை உண்டாகும்.

செவ்வாய் பகவானை சரி கட்ட வேண்டும் என்றால் முருகப்பெருமானை வழிபாடு செய்ய வேண்டும். செவ்வாய்க்கிழமை முருகர் கோவிலுக்கு சென்று இந்த வழிபாட்டை செய்பவர்களுடைய வாழ்க்கையில் முருகப்பெருமான் உடனே ஒரு பிரகாசத்தை கொடுத்து விடுவார். அது என்ன வழிபாடு ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

- Advertisement -

செவ்வாயை பலப்படுத்தும் முருகன் வழிபாடு

உங்க வீட்டு பக்கத்தில் இருக்கக்கூடிய ஏதாவது ஒரு முருகன் கோவிலை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். செவ்வாய்க்கிழமை காலையில் அந்த முருகன் கோவிலுக்கு போயிட்டு மூன்று வெற்றிலையை வைத்து அதற்கு மேலே ஒரு மண் அகல் விளக்கை வைத்து, நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றி முருகா என்னை காப்பாற்று, என்று முதலில் அவர் பாதத்தை சரணடையுங்கள்.

அந்த முருகன் கோவிலிலேயே நவகிரக சன்னிதானம் இருக்க வேண்டும். அந்த இடத்தில் செவ்வாய் பகவான் இருப்பாரு. செவ்வாய்க்கு சிவப்பு நிறத்தில் வஸ்திரம் சாத்தி வைத்திருப்பார்கள். இல்ல அங்கேயே பெயர் எழுதி இருக்கும் பாருங்க. இல்லை என்றால் குருக்களிடம் கேட்டு செவ்வாய் எது என்று தெரிந்து கொள்ளுங்கள்.

- Advertisement -

அந்த செவ்வாய்க்கு விளக்கு போட வீட்டிலேயே இந்த முடிச்சை தயார் செய்து கோவிலுக்கு எடுத்துட்டு போங்க. சிவப்பு நிறத்தில் சதுர வடிவில் துணியை எடுத்துக் கொள்ளவும். அதில் 1/2 ஸ்பூன் துவரம் பருப்பு வச்சி முடிச்சாக கட்டிக் கொள்ள வேண்டும். சனி பகவானுக்கு எள்ளு தீபம் போல, செவ்வாய் பகவானுக்கு இது துவரம் பருப்பு தீபம். சிவப்பு நிறத்தில் காட்டன் துணியை வாங்கி தண்ணீரில் நனைத்து காய வைத்து பிறகு இந்த முடிச்சை தயார் செய்யவும்.

தயார் செய்த இந்த முடிச்சை ஒரு மண் அகல் விளக்கில் போட்டு, நல்லெண்ணெயை அதன் மேலே ஊற்றி இந்த முடிச்சை ஏற்றி விட வேண்டும். இது செவ்வாய் பகவானுக்காக ஏற்றக்கூடிய தீபம். செவ்வாய் பகவானே என் வாழ்க்கையில் கொஞ்சம் நல்லதை செய்யப்பா என்று வேண்டி இந்த தீபத்தை ஏற்றி நவகிரக சன்னிதானத்திற்கு முன்பு, முடிந்தால் செவ்வாய் பகவானுக்கு முன்பு வைத்துவிட்டு, செவ்வாய் பகவானுக்கு பூக்களை வாங்கிக் கொடுத்து, உங்கள் பெயரைச் சொல்லி அர்ச்சனை செய்து கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: பண வரவை தரும் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு

9 வாரம் செவ்வாய்க்கிழமை இந்த வழிபாட்டை நீங்கள் செய்தால் செவ்வாய் உங்களுக்கு சூப்பராக வேலை செய்யும். முருகர் பாதங்களை பிடித்து விட்டு, பிறகு வந்து செவ்வாய் பகவானை வழிபாடு செய்ய வேண்டும். முருகரை கும்பிட்டால், செவ்வாய் உங்களுக்கு சரண்டர் ஆவார். இதுதான் இந்த வழிபாட்டில் இருக்கும் சூட்சமம். நம்பிக்கை உள்ளவர்கள் பின்பற்றி பலன்கள்.

- Advertisement -