கடன் தீர கல் உப்பு பரிகாரம்

cash2
- Advertisement -

வாங்கிய கடனை திருப்பித் தர முடியாமல் அவதிப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு தான் தெரியும். கடன் என்ற 3 எழுத்தில் மறைந்திருக்கும் கஷ்டம். நிம்மதியாக சாப்பிட முடியாது. கையில் இருக்கும், கைபேசி அடித்தால் கூட, கடன் கொடுத்தவர் தான் கூப்பிடுகிறாரோ என்ற பயம் வரும்.

சில பேர் எல்லாம் தெரியாத எண்களில் இருந்து கைபேசியில் அழைப்பு வந்தால் எடுக்கக்கூட மாட்டாங்க. அந்த அளவுக்கு கடன் கொடுத்தவர்களை பார்த்து பயப்படுவார்கள். அப்படிப்பட்ட மீள முடியாத கடன் தொல்லையில் இருப்பவர்களுக்காக எளிமையான ஆன்மீகம் சொல்லும் பரிகாரம் இதோ உங்களுக்காக.

- Advertisement -

கடன் தீர செவ்வாய்க்கிழமை பரிகாரம்

இந்த பரிகாரத்தை செவ்வாய்க்கிழமை காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் செய்து முடிக்க வேண்டும். ஒரு தாம்பூல தட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் மூன்று கைப்பிடி அளவு உப்பை போட்டு பரவலாக பரப்பி விடுங்கள். பிறகு உங்களுடைய வலது கை, ஆள் காட்டி விரலால் அந்த உப்பில் நீங்கள் வாங்கிய கடன் தொகையை எழுத வேண்டும்.

உங்களுக்கு எவ்வளவு கடன் இருக்கிறது. 50,000 ரூபாய் கடன் இருக்கிறதா. 1,00,000 ரூபாய் கடன் இருக்கிறதா. கடன் தொகையை நம்பராகவே அந்த உப்பின் மேலே  எழுதி விடுங்கள். பிறகு அந்த உப்புக்கு முன்பாகவே அமர்ந்து குலதெய்வத்தையும் முருகப்பெருமானையும் மனதார பிரார்த்தனை செய்யுங்கள்.

- Advertisement -

நான் வாங்கிய கடனை எப்பாடுபட்டாவது திருப்பி அடைத்து விட வேண்டும் கடன் பிரச்சனையிலிருந்து சீக்கிரம் என்னை விடுவித்துக் விடு இறைவா என்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். உண்மையான நம்பிக்கையோடு இந்த பிரார்த்தனையை கண்களை மூடி செய்யவும். பிறகு இந்த உப்பை ஒரு ஜாடியில் கொட்டிக் கொள்ளவும், அல்லது சின்ன மண் குடுவை இருந்தால் அதிலும் கொட்டிக் கொள்ளலாம்.

ஒரு மூடி போட்டு, அந்த உப்பை மூடி இதை பூஜை அறையில் ஏதோ ஒரு இடத்தில் ஓரமாக வைத்து விடுங்கள். அடுத்த செவ்வாய் கிழமை இந்த உப்பை எடுத்து நீரில் போட்டு கரைத்து விட வேண்டும். ஒரு பிளாஸ்டிக் பக்கெட் அல்லது ஏதாவது ஒரு பாத்திரம் எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அதில் குடிக்கின்ற நல்ல தண்ணீரை ஊற்றி இந்த உப்பை உங்கள் கையாலேயே எடுத்து அந்த தண்ணீரில் கரைத்து விடுங்கள். இந்த உப்பு கரைவது போல என் கடனும் கண்ணுக்குத் தெரியாமல் கரைந்து போக வேண்டும் முருகா என்று சொல்லி கல்லுப்பை கரைத்து விடுங்கள்.

இந்த பரிகாரத்தை செய்து முடித்த ஒரு சில நாட்களிலேயே உங்களுடைய கடன் சுமை படிப்படியாக குறைய தொடங்கிவிடும். ஒரு வாரம் இந்த கல்லுப்பு பரிகாரத்தை செய்தீர்கள் அடுத்த ஓரிரு மாதங்களில் உங்களுக்கு கடன் சுமை ஓரளவுக்கு குறைந்துவிட்டது என்றால் மீண்டும் ஒரு செவ்வாய் கிழமை இதேபோல இந்த பரிகாரத்தை செய்யலாம்.

இதையும் படிக்கலாமே: செல்வத்தை ஈர்க்கும் உணவுப் பொருட்கள்

முழுமையாக உங்களுடைய கடன் அடையும் என்பது நம்பிக்கையாக சொல்லப்பட்டுள்ளது. முருகப்பெருமானை நம்பி இந்த பரிகாரத்தை செய்பவர்கள் நிச்சயம் கைவிடப்பட மாட்டீர்கள். நம்பிக்கையுடன் செய்தால் நல்லது நடக்கும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -