உங்களை சுற்றிக் கொண்டிருக்கும் தரித்திரம் விலகி, நீங்கள் நினைத்த அனைத்தும் நல்லபடியாக நடந்தே இந்த பரிகாரங்கள் உங்களுக்கு துணை புரியும்

uppu
- Advertisement -

சோம்பேறித்தனம், என்ன செய்வதென்றே தெரியாத விரக்தி நிலை நேரம் தவறுதல், வேகமின்மை தொடர்ந்து துரத்தும். எதிர்மறை எண்ணங்கள், கோபம் அல்லது அது போன்ற வேறு உச்சக்கட்ட உணர்ச்சிகள் மன அழுத்தம், திடீர் உடல் நிலை கோளாறுகள், திருஷ்டியால் ஏற்படும் பல கஷ்டங்கள், செய்வினை கோளாறுகள், மல்டி பெர்சனாலிட்டி டிஸார்டர் பேய் அல்லது ஆவிகள் அல்லது துர்ஆத்மாவினால் பயம். மேற்கண்ட துன்பங்கள் நம்மை துரத்தும் பொழுது கீழ்காணும் சக்தி வாய்ந்த “உப்பு நீர்” பரிகார முறையை பின்பற்றஅனைத்து கஷ்டங்களும் விலகி ஓடும். இதை தினமும் செய்யலாம். இவ்வாறு ஒவ்வொரு விதமான பிரச்சினைகளுக்கும் தனிப்பட்ட பரிகாரங்கள் சிறந்த பலனை கொடுக்கின்றன அவ்வாறு பலன் தரக்கூடிய சில பரிகாரங்களை பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

sleeping

தேவையானவை :
1. ஒரு பெரிய அளவு பக்கெட், 2.தண்ணீர், 3.ராக் சால்ட்

- Advertisement -

பக்கெட் நிரம்ப தண்ணீர் எடுத்து, ஒரு பாக்கெட் ராக் சால்ட் போட்டு, முட்டிக்கு சற்று கீழே வரை நினையுமாறு கால்களை உள்ளே விட்டு உட்காரவும். பின்பு கண்களிரண்டும் மூடி கொண்டு நீரில் உள்ள இரண்டு கால்களையும் தேய்து சுத்தப்படுத்துங்கள். இதை செய்யும் பொழுது மனதிற்குள் ‘உங்கள் உடம்பில் மன்தில் உள்ள அனைத்து எதிர் மறை சக்திகளும் வெளியேற வேண்டுமென பிரார்த்தித்துக் கொண்டே செய்யவும். ]

water

15 நிமிடங்கள் வரை செய்து விட்டு பின்பு நீரை பார்த்தால், சிலருக்கு நீர் மிகவும் கருத்து போயிருக்கும், சிலருக்கு நீரில் நாற்றம் எடுக்கும், சிலருக்கு ஏதும் இல்லாமலும் போகலாம். சிலர் இது முடிந்ததும் மிகவும் களைப்பாகவும் உணரலாம்..இது உங்களை சுற்றிஇருந்த எதிர்மறை கரும் சக்திகள் விரட்டி அடிக்கப்பட்டதை குறிக்கும். இதை தினமும் தொடர நல்ல செயல்கள் நடக்க, நல்ல சிந்தனைகள் வளர ஆரம்பிக்கும்.

- Advertisement -

வேலை மாற்றத்திற்கு :
அதிகாலை எழுந்து குளித்து புதிய ஆடைகள் அணிந்து 11 சிவப்பு மிளகாய்களை எடுத்து கொண்டு வேலை மாற்றத்திற்காண வேண்டுதலை சூரியனை பார்த்தபடி கூறிக்கொண்டே எறிந்து விடவேண்டும். இதை தொடர்ந்து 43 நாட்கள் செய்து வர வேண்டும். இதற்கிடையில் வேலை மாற்றம் ஏற்பட்டுவிட்டால் நிறுத்தி விடவும்.

pachai_payaru

வேலை இல்லாமல் தொடர்ந்து வரும் பண பிரச்சனைகளுக்கு :
சிறிய மூடியுடன் கூடிய செம்பு கிண்ணம் அல்லது பாத்திரத்தில் பச்சை பாசிப்பருப்பை நிரப்பி ஓடும் நீரோடையில் விடவும். சுத்தமான நீரோடையாக இருக்க வேண்டும். வலது கையில் வெள்ளி வளையம் அணியவும். ஆஞ்சநேய வழிபாடு செய்யவும். உப்பு,சக்கரை,கடலை பருப்பு,சுத்தமான நெய், கோதுமை மாவு முடிந்த அளவு கோவில் மடப்பள்ளியில் தானம் செய்யவும். காய்ச்சாத பசும் பாலை ஆலமரத்திற்கு 7 நாட்கள் ஊற்றி வரவும்-முடிந்த அளவு. குளிக்கும் போது கெட்டி தயிர் சிறிதளவு நீரில் சேர்த்து பின்பு குளிக்கவும்-7 நாட்கள் மட்டும் இதை செய்ய வேண்டும்.

- Advertisement -