வீட்டில் மறந்தும் கூட இந்த சில விஷயங்களை செய்யாதீர்கள், தரித்திரம் பிடிக்க வாய்ப்பு உண்டாம்! குடும்பத்திற்கு ஆகவே ஆகாத செயல்கள் என்ன?

fire-adi-piditha-pathiram
- Advertisement -

வீட்டில் சில விஷயங்களை மறந்தும் கூட செய்யக்கூடாது. இந்த செயல்கள் செய்வதால் வீட்டில் தரித்திரம் பிடிக்கவும், பீடைகள் வந்து குடியேறவும் வாய்ப்புகள் உண்டு என்று சாஸ்திரங்கள் கூறுகிறது. குடும்பத்திற்கு ஆகாத சில செயல்கள் உண்டு. அதை செய்வதால் பல பிரச்சனைகளை நம்மை அறியாமலேயே எதிர் கொள்ள வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுவோம். அப்படியான சில விஷயங்கள் என்னென்ன? என்பதை தான் இந்த ஆன்மிகம் சார்ந்த இந்த பதிவின் மூலம் நாம் தொடர்ந்து அறிந்து கொள்ள இருக்கிறோம்.

எந்த காரணத்தைக் கொண்டும் வீட்டில் சமையல் செய்யும் பொழுது அடிப்பிடிக்க கூடாது. அடி பிடித்தால் தரித்திரம் உண்டாகும் என்று கூறுவார்கள். அது மட்டுமல்லாமல் நாம் பயன்படுத்தும் கடாய் என்னும் வாணலி தீய்ந்து போகும் அளவிற்கு நாம் சமையலில் கவனம் இல்லாமல் இருக்கக் கூடாது. இது அன்னபூரணியின் கோபத்திற்கு ஆளாகி தரித்திரத்தை உண்டு பண்ணிவிடும். இப்படி அடிபிடித்த உணவுகளை உட்கொள்ளவும் கூடாது. அது உடல் நலத்திற்கு கேடாக இருக்கும். சமைக்கும் பொழுது கவனமுடன் இருப்பது தான் நல்லது. அசைவ சமையலில் இந்த விஷயத்தில் மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டும். அசைவம் மட்டுமல்லாமல் சைவ சமயலிலும் கூட இதே நிலை தான்.

- Advertisement -

அதே போல குடும்பத்தில் இருப்பவர்கள் தங்களுடைய தலை முடியை எரித்துக் கொள்ள கூடாது. தெரியாமல் கூட தலைமுடி எறிய கூடாது. சிலர் முடியை உலர வைக்கிறேன் என்கிற பெயரில் கேஸ் ஸ்டவ்வில் கொண்டு போய் தலையை காண்பிப்பார்கள். அதில் தெரியாமல் ஒன்றிரண்டு முடிகள் எரியக்கூடும். இப்படி வீட்டில் முடி எரிந்து அந்த வாசத்தை முகர நேர்ந்தால் உங்களுக்கு தரித்திரம் பிடிக்கும்.

நகம், தோல், தலை முடி போன்றவற்றை நெருப்பில் போட்டு கருகும் வாடையை எப்பொழுதும் முகரக் கூடாது. காடுகளில் கூட இந்த வாசனையை முகர்ந்து பார்க்கக் கூடாது என்று நம் முன்னோர்கள் கூறுவது உண்டு. எனவே நகத்தை வெட்டி நெருப்பில் போடுவது அல்லது நெருப்பை கொண்டு கையில் வைத்து விளையாடுவது போன்றவை செய்யவே கூடாது. இது குடும்பத்திற்கு ஆகாத செயல்கள் ஆகும்.

- Advertisement -

இந்த சில விஷயங்களில் எல்லாம் கவனமாக இல்லாவிட்டால் வறுமை நிலையில் இருப்பவர்கள் மீண்டும் மீண்டும் வறுமை நிலைக்கே தள்ளப்படுவார்கள். எனவே வாழும் வீட்டில் அறியாமல் கூட இந்த சில விஷயங்களை செய்து விடாதீர்கள். கணவன் மனைவிக்குள் சண்டை வந்தால் கூட சிலர் மண்ணெண்ணெய் எடுத்து ஊற்றி எரித்துக் கொள்வேன் என்று மிரட்டுவார்கள். இது போல தீயை உண்டாக்கக்கூடிய விஷயத்தில் அலட்சியம் கூடாது. விளையாட்டு வினையாகிவிடும் என்று சொல்லுவார்கள். அது போல சொல்லும் சொல்லே நம்முடைய வாழ்க்கையை சீரழித்து விடும் அபாயம் உண்டு.

இதையும் படிக்கலாமே:
தரித்திரங்கள் விலகி தயக்கமே இல்லாமல் மகாலட்சுமி உங்கள் வீட்டிற்குள் காலடி எடுத்து வைக்க வேண்டுமா? இந்த தண்ணீரில் முகத்தை கழுவுங்கள் போதும்.

பேச்சில் எப்பொழுதும் இனிமை இருக்க வேண்டும். அமங்கள வார்த்தைகளை பேசுவது, அசுப சொற்களை உதிர்ப்பது, கெட்ட வார்த்தைகளை பிரயோகிப்பது போன்றவை வீட்டில் கூடவே கூடாத செயல்களாகும். இதெல்லாம் குடும்பத்திற்கு ஆகாது, தரித்திரத்தை ஏற்படுத்தும். கணவன் மனைவிக்குள் பிரிவை உண்டாக்கும். குழந்தைகளின் எதிர்காலத்தையும் பாதிக்க கூடிய வாய்ப்புகளை நீங்களே உருவாக்கக் கூடாது. நம்மை அறியாமல் நாம் செய்யும் இந்த சில தவறுகளால் குடும்பத்தில் உண்டாக கூடிய சுபிட்சம் தடுக்கப்படுகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

- Advertisement -