நாம ஜெயிச்சிட்டோம். பலே பலே மாஸாக வெற்றியை கொண்டாடிய தவான். என்ன சார் இப்படி பண்றிங்க

dhawan
- Advertisement -

நியூசிலாந்து மற்றும் இந்திய அணிக்கு எதிரான ஐந்தாவது ஒருநாள் போட்டி வெலிங்டன் நகரில் நடந்தது. டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது இந்திய அணி. பேட்டிங்கை முதல் 10 ஓவர்களில் இந்திய அணி சரியாக விளையாடாமல் முதல் 10 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்தது.

hitman

பிறகு பின்வரிசை வீரர்களின் அதிரடியால் இந்திய அணி 252 ரன்கள் அடித்தது. இந்திய அணி சார்பில் ராயுடு 90, ஷங்கர் மற்றும் பாண்டியா 45 ரன்கள் ஷங்கர் நியூசிலாந்து பாண்டியா ஹென்றி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பிறகு நியூசிலாந்து அணி 253 ரன்கள் என்ற இலக்கினை எதிர்த்து விளையாடியது. நியூசிலாந்து அணி 217 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் 35 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

- Advertisement -

வெற்றியை இந்திய அணி வீரர்கள் கொண்டாடிய நிலையில் இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரரான ஷிகார் தவான் மைதானத்தில் நடனமாடி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். பஞ்சாபி முறையில் நடனமாடி ரசிகர்களுடன் தனது மகிழ்ச்சியை உற்சாகத்துடன் பகிர்ந்து கொண்டார்.

- Advertisement -

இந்திய அணியின் இந்த வெற்றியினை உலகின் உள்ள பல்வேறு கிரிக்கெட் வீரர்களும், விமர்சகர்களும் மற்றும் ரசிகர்கள் என அனைவரும் இந்திய அணியை வாழ்த்தி வருகின்றனர். இந்திய அணி தற்போது பாராட்டு மழையில் நனைந்து வருகிறது.

இதையும் படிக்கலாமே :

என்னப்பா இப்படி பண்ணிட்டீங்க. இந்திய அணியை புகழ்ந்து தள்ளிய விராட் கோலி – ட்விட்டர் பதிவு

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்

- Advertisement -