இந்த திரிபோட்டு தினமும் வீட்டில் தீபம் ஏற்றினால், வாழ்நாள் முழுவதும் பணம் கஷ்டம் என்பதே வராது. உங்கள் வாழ்க்கை சுகமாக இனிமையாக இருக்கும்.

mahalakshmi-vilakku
- Advertisement -

வாழ்நாள் முழுவதும் நாம் எந்த கஷ்டமும் இல்லாமல் வாழ வேண்டும் என்றால் தோல்வியை கண்டு என்றைக்குமே அஞ்சக்கூடாது. பலமுறை முயற்சி செய்து தோற்றுப் போனாலும் அதில் தவறு கிடையாது. ஒரு முறை கூட முயற்சி செய்யாமல் வாழ்க்கையில் அதே நிலையில் இருப்பதுதான் தவறு. தோல்வியடைந்த விஷயத்தில் மீண்டும் மீண்டும் முயற்சி செய்து தோற்று போவதால் ‘நீ எந்த விதத்திலும் தாழ்ந்து போவதாக அர்த்தம் இல்லை’. ஏதோ ஒரு விஷயத்திற்காக உன்னை அந்த கடவுள் பக்குவப்படுத்தி வருகின்றான் என்பது இதற்கான அர்த்தம். தோல்வியைக் கண்டு பயப்படாமல் எவனொருவன் விடாமுயற்சின் பின்னால் செல்கின்றனோ அவனுடைய வாழ்க்கையின் இறுதியில், அவனுக்கு பெரிய வெற்றி காத்துக்கொண்டிருக்கிறது என்ற இந்த ஒரு நல்ல தகவலோடு இன்றைய பதிவிற்குள் செல்வோம்.

வாழ்நாள் முழுவதும் பணக்கஷ்டம் இல்லாமல் வாழ வேண்டும் என்றால் உங்களுக்கு இறைவனால் கொடுக்கக்கூடிய வாய்ப்புகளை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எதையுமே என்னால் முடியாது என்று சொல்லி வாய்ப்புகளை தவற விடக்கூடாது. முயற்சி செய்து பார்க்கவேண்டும். மீண்டும் ஒருமுறை நினைவு கூறுகின்றோம். முயற்சியில் தோற்றுப் போகலாம். தவறு கிடையாது. முயற்சிக்காமல் விட்டுவிடாதீர்கள்.

- Advertisement -

உங்களுடைய முயற்சியில் எந்த தடையும் இருக்கக் கூடாது என்றால், உங்களுடைய முயற்சிக்கு ஒரு ஊன்றுகோலாக தூண்டுகோலாக இருக்க ஆன்மீக ரீதியாக ஒரு சிறிய பரிகாரம். வீட்டில் தினமும் தீபம் ஏற்றி இறை வழிபாடு செய்து இறைவனை ஆத்மார்த்தமாக வேண்டிக் கொள்ளுங்கள். முயற்சியில் முழு வெற்றி கிடைக்கும்.

விளக்குத் திரியை கடையிலிருந்து வாங்கி வீட்டில் வைத்துக் கொள்ளுங்கள். ஒரு சிறிய பாத்திரத்தில் தேவையான அளவு பன்னீரை ஊற்றிக் கொள்ள வேண்டும். அந்த பன்னீரில் கொஞ்சமாக சந்தனம் போட்டு நன்றாக கரைத்து விடுங்கள். இப்போது இந்த தண்ணீரில் நீங்கள் வாங்கி வைத்திருக்கும் விளக்கு திரியை போட்டு நன்றாக நினைத்துவிட வேண்டும்.

- Advertisement -

அதன் பின்பு இந்த விளக்கு திரிகளை எடுத்து வெய்யிலில் உலர வைத்தாலும் சரி அல்லது நிழலிலேயே வீட்டுக்குள்ளேயே வைத்து நன்றாக உலர வைத்தாலும் சரி, திரியில் இருக்கும் ஈரம் சுத்தமாக காய்ந்து விடும். ஆனால் திரியில் வாசம் நிறைவாக இருக்கும். வாசம் நிறைந்த இந்த திரியை போட்டு உங்கள் வீட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி வரும் பட்சத்தில், இந்த வாசத்திற்கு உங்கள் வீட்டில் எதிர்மறை ஆற்றல் என்பது தங்காது. உங்களுடைய முயற்சிக்கு தடையாக நிற்கும் எல்லா விஷயங்களையும் அழிக்கக் கூடிய சக்தி இந்த வாசத்திற்கு உண்டு.

காலை ஏற்றிய விளக்கு அப்படியே நாள் முழுவதும் உங்கள் வீட்டில் எரிந்தாலும் தவறு கிடையாது. இரவு தூங்க செல்லும் முன்பு விளக்கை மலை ஏற்றிவிட்டு தூங்குங்கள். உங்களுடைய வீட்டில் பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு இந்த தீபச்சுடர் கூடியவிரைவில் நிலையான ஒரு தீர்வை கொடுக்கும்.

பணப் பிரச்சினைகள் தீர தாந்திரீக ரீதியாக சொல்லப்பட்டுள்ள சுலபமான பரிகாரங்களில் இதுவும் ஒன்று. நம்பிக்கை உள்ளவர்கள் உங்களுடைய முயற்சியோடு இதையும் சேர்த்துக்கொள்ளுங்கள். சீக்கிரம் வெற்றி காண்பீர்கள் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -