தினமும் பணம் வேண்டும் என்று, உங்கள் வாயால் இப்படி கேட்டால், பணம் பல மடங்கு உங்களை தேடி வரத் தொடங்கி விடும். பிறகு பணக்கஷ்டத்திற்கு வீட்டில் இடம் இருக்காது.

panam
- Advertisement -

கேட்காமல் யாருக்கும் எதுவும் கிடைக்காது. வாய்விட்டு கேட்டால் தான் நமக்குத் தேவையானதை அந்த கடவுளும், இந்த பிரபஞ்சமும் கொடுக்கும். வாயுள்ள பிள்ளை தான் பிழைத்துக் கொள்ளும் என்ற ஒரு பழமொழியே இருக்கிறது. இன்று நாம் பணம் வேண்டும் என்று பிரபஞ்சத்திடம் கேட்கப் போகின்றோம். எப்படி கேட்க போகின்றோம். எந்த நேரத்தில் கேட்க போகின்றோம். எந்த பொருளை வாயில் வைத்து கேட்டால், நாம் கேட்கக்கூடிய பணம் நம் கையை வந்து சேரும் என்பதை பற்றிய விரிவான தகவல்களைத்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகின்றோம். பணம் வேண்டும் என்பவர்கள், பண தேவையை பூர்த்தி செய்து கொள்ள வேண்டும் என்பவர்கள், பதிவை படித்து பலன் பெறலாம்.

தினம் தினம் பணம் பெற பரிகாரம்:
தினமும் இந்த பரிகாரத்திற்கு நீங்கள் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து தான் ஆக வேண்டும். வேறு வழி கிடையாது. சூரிய உதயத்திற்கு முன்பு இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். காலையில் எழுந்து சுத்தபத்தமாக குளித்து விடுங்கள். அதுதான் முதல் வேலை. தீட்டு இல்லாத சமயத்தில் சாதாரணமாக உடம்புக்கு குளித்துவிட்டு பூஜை அறையில் விளக்கு ஏற்றி கிழக்கு பார்த்தவாறு அமர்ந்து கொள்ளுங்கள். (காலை 5:30க்கு முன்பாகவே இந்த வேண்டுதலை பிரபஞ்சத்திடம் வைத்து விட வேண்டும்.)

- Advertisement -

உங்களுடைய கையில் ஒரே ஒரு கிராம்பு எடுத்துக் கொள்ளுங்கள். கிழக்கு பார்த்தவாறு அமர்ந்து உங்களுடைய வாய்க்குள் இந்த கிராம்பை அடக்கிக் கொள்ள வேண்டும். பல்லில் கடித்துக் கொண்டால் கூட போதும். இப்போது உங்களுக்கு என்ன பண தேவை இருக்கிறது. அதை இந்த பிரபஞ்சத்திடம் கேளுங்கள். மாதம் தோறும் 50 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்க வேண்டுமா.  இல்லை என்னுடைய ஐந்து லட்ச ரூபாய் கடனை அடைக்க தேவையான பணம் சீக்கிரம் சம்பாதிக்க வேண்டுமா.

இப்படி எல்லாம் சொல்லி வேண்டுதல் வைக்கலாம். வேண்டுதல் என்பது உங்களுடைய விருப்பம். எவ்வளவு பண தேவை இருக்கிறது என்பதை மட்டும் வாயார சொல்ல வேண்டும். அதாவது சத்தம் எழுப்பி சொன்னால் தவறு கிடையாது.

- Advertisement -

அந்த நேரத்தில் வீட்டில் எல்லோரும் தூங்கிக் கொண்டிருப்பார்கள். உங்களுக்காக தனி அறை இருந்தால் கூட அந்த இடத்தில் இந்த தியானத்தை மேற்கொண்டு, இப்படி சத்தம் போட்டு வார்த்தைகளை உச்சரிக்கலாம். ஆனால் நீங்கள் பேசுவது வீட்டில் இருப்பவர்களுக்கு எல்லோருக்கும் கேட்கும். டிஸ்டர்ப் ஆகும் எனும் பட்சத்தில் கொஞ்சம் மெதுவாக வார்த்தைகளை சொல்லி இந்த பிரபஞ்சத்திடம் பணத்தைக் கேளுங்கள். தினமும் இதே போல வாயில் லவங்கத்தை வைத்துக்கொண்டு பிரம்ம முகூர்த்த நேரத்தில் பிரபஞ்சத்திடம் பணம் கேட்டால் உங்களுக்கு அந்த பணம் கிடைக்கும். பிரார்த்தனையை முடித்துவிட்டு வாயில் இருக்கும் இலவங்கத்தை கீழே துப்பி விடலாம். தினமும் இதே போல பிரம்ம முகூர்த்த நேரத்தில் வாயில் இலவங்கத்தை வைத்து தினமும் ஒரே வேண்டுதலை வையுங்கள் நிச்சயம் அந்த வேண்டுதல் பலிக்கும்.

இதையும் படிக்கலாமே: 10-07-2023 வரும் திங்கட்கிழமை தேய்பிறை அஷ்டமி! திங்கட்கிழமை இந்த விளக்கை ஏற்றினால் தீராத கடன் தீரும், திக்கு முக்காட வைக்கும் பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்.

ஆனால் பரிகாரத்தோடு சேர்த்து பணத்தை சம்பாதிக்க நீங்கள் முயற்சி எடுக்க வேண்டும். இன்றைக்கு உங்களுக்கு சம்பளம் 10,000 இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். இந்த வேண்டுதலை தொடர்ந்து வைக்க வைக்க உங்களுடைய சம்பளம் படிப்படியாக 20,000 30,000 என்று உயரும். ஓரிரு ஆண்டுகளில் நீங்கள் நிச்சயம் மாதம் 50 ஆயிரம் சம்பாதிக்கக்கூடிய நிலை வரும். படிப்படியான முன்னேற்றத்தை கொடுத்து உங்களை வாழ்க்கையில் ஒரு நல்ல நிலைமைக்கு கொண்டு வரக்கூடிய வேலையை இந்த எளிமையான சின்ன பரிகாரம் செய்யும். நம்பிக்கை இருந்தால் மட்டும் முயற்சி செய்து பாருங்கள். நன்மை மட்டுமே தரக்கூடிய இந்த பரிகாரத்தை யாரும் அலட்சியம் செய்யாதீர்கள் என்ற இந்த தகவலோடு இன்றைய ஆன்மீகம் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -