ஜாதகத்தில் கஷ்டத்தைக் கொடுக்கும் எல்லா தோஷங்களும் விலக, சுக்ர யோகம் அடிக்க, வெள்ளிக்கிழமை வீட்டில் இப்படித்தான் தீபம் ஏற்ற வேண்டும்.

sukkiran
- Advertisement -

சில பேருக்கு நல்ல வருமானம் இருக்கும். ஆனால் வரக்கூடிய பணத்தை சரியான வழியில் செலவு செய்ய முடியாது. கடன் பிரச்சனை இருக்கும். வாங்கிய கடனுக்கு வட்டி கட்டியே பணம் செலவாகும். வாங்கிய கடனை திருப்பிக் கொடுப்பதற்கு வருமானம் சரியாகிவிடும். கையில் வாங்கிய சம்பளத்தை சந்தோஷமாக குடும்பத்திற்காகவோ, தனக்காகவோ செலவு செய்து கொள்ள முடியாத சூழ்நிலை இருக்கும். ஆக கையில் வருமானம் இருக்கிறது. ஆனால் ஜாதக கட்டத்தில் இருக்கும் கண்ணுக்குத் தெரியாத ஏதோ ஒரு தோஷத்தால் அந்த வருமானம் வீண் விரயமாகிறது என்றாலும் இந்த பரிகாரத்தை செய்து பலனடையலாம். கைக்கு வருமானமே வருவதில்லை. சுக்கிர யோகம் எனக்கு வேண்டும் என்பவர்களும் இந்த பரிகாரத்தை செய்து பலனடையலாம்.

இந்தப் பரிகாரத்தை வெள்ளிக்கிழமை அன்று சுக்கிர ஹோரையில் செய்ய வேண்டும். அதாவது இந்த தீபத்தை சுக்கிர ஹோரையில் உங்களுடைய வீட்டில் ஏற்றினாலே போதும். வீட்டில் இருக்கும் பண கஷ்டத்திற்கு சீக்கிரம் விடிவுகாலம் பிறக்கும்.

- Advertisement -

முதலில் ஒரு சிறிய துண்டு வெட்டிவேரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் தீபம் ஏற்றும் திரியை நன்றாக திரித்து விடுங்கள். தீபமேற்றும் திரியையும், இந்த வெட்டிவேரையும் ஒன்றாக இணைத்து சுருட்டி வைத்துக் கொள்ள வேண்டும். பூஜை அறையில் ஒரு மண் அகல் தீபத்தை வைத்து விட்டு அதில் நெய் ஊற்றி தயார் செய்து வைத்திருக்கும் இந்த வெட்டிவேர் திரியை போட்டு தீபம் ஏற்றி வைக்க வேண்டும். இந்த தீபத்திற்கு முன்பாக ஒரு மாதுளை பழம் நிவேதியமாக வேண்டும்.

அதன் பின்பு எப்போதும் போல உங்கள் வீட்டில் இருக்கும் மகாலட்சுமி திருவுருவப்படத்திற்கு அலங்காரம் செய்து மற்ற படங்களெல்லாம் பூக்களால் அலங்காரம் செய்து உங்கள் வீட்டில் எப்போதும் ஏற்றக்கூடிய தீபங்களை ஏற்றி வெள்ளிக்கிழமை வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்.

- Advertisement -

குறிப்பிட்ட இந்த வெட்டிவேர் தீபத்தை ஏற்றி வைத்து விட்டு அதில் எரியும் தீபச்சுடரை பார்த்து, உங்களுடைய வேண்டுதலை வைக்கும்போது, குறிப்பாக பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கான வேண்டுதலை வைக்கும்போது, அந்த வேண்டுதலுக்கு கை மேல் பலன் கிடைக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.

மூன்று வாரம் தொடர்ந்து சுக்கிர ஹோரையில் வெள்ளிக்கிழமை இந்த தீபத்தை ஏற்றி பாருங்கள். நிச்சயம் வாழ்வில் நம்ப முடியாத சில நல்ல மாற்றங்கள் உங்கள் வீட்டு கதவை தட்டும். முடிந்தால் உங்களுடைய வீட்டில் ஒரு துளசி செடியை வைத்து வளர்க்க வேண்டும். அந்த துளசி செடிக்கு அருகில் சிறிய அளவில் மாதுளம்பழச் செடியை வையுங்கள். துளசிச் செடியும், மாதுளை செடியும் அருகில் இருக்கக்கூடிய வீட்டில் பண கஷ்டம் வராது. குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். கணவன் மனைவிக்கு இடையே இருக்கக்கூடிய கருத்து வேறுபாடுகள் அகலும். குடும்பத்தில் சந்தோஷமும் செல்வமும் குறைவில்லாமல் ஊற்றெடுக்கும். நம்பிக்கை உள்ளவர்கள் பரிகாரத்தை செய்து பலன் அடையலாம் என்று கருத்துடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -