தினமும் குளிக்கின்ற தண்ணீரில் இந்த பொருளைப் போட்டு குளித்தால் போதும். துஷ்ட சக்திகள் நம் உடம்பை அண்டாமல் இருக்கும்.

bathing
- Advertisement -

அந்த காலத்தில் வாழ்ந்த நம்முடைய முன்னோர்கள் எல்லாவற்றுக்கும் கால நேரத்தோடு ஒரு வரையறையை வகுத்து வைத்து வாழ்ந்தார்கள். குறிப்பிட்ட இந்த நேரத்தில்தான் வெளியே சென்று வேலை பார்க்க வேண்டும். குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாக வீட்டிற்கு வந்து விட வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் அந்த காலத்தில் இருந்தது. ஆனால் இந்த காலம் அது போல கிடையாது. நேரம் காலம் இல்லாமல் வெளியே செல்ல வேண்டிய சூழ்நிலை. நடு இரவில் கூட வேலையை முடித்துவிட்டு வீடு திரும்பும் நிலைமை. உச்சிப் பொழுது பொழுது பொழுது சாய்ந்த நேரம் எல்லாம் நாம் பார்ப்பதே கிடையாது. குழந்தைகள் பெண்கள் ஆண்கள் யாராக இருந்தாலும் நேரம் காலம் இல்லாமல் வெளியே செல்கின்றோம். இப்படி செல்லும் போது கண்ணுக்கு தெரியாத துர்சக்திகளின் நடமாட்டம் நிச்சயம் இருக்கும். மனது பலவீனமானவர்களுக்கு இப்படிப்பட்ட எதிர்மறை ஆற்றல்கள் எதிர்பாராத கெட்ட விளைவுகளை உண்டு பண்ணிவிடும்.

உடல் சோர்வு, மனச்சோர்வு, சிலபேருக்கு பேய் பிடித்துவிட்டது பிசாசு பிடித்துவிட்டது என்று கூட சொல்லி நாம் கேள்விப்பட்டிருப்போம். இவை அனைத்துமே துர்சக்திகளின் வேலைதான். இது ஒரு பக்கமிருக்க இந்த கால சூழ்நிலையில் பொறாமை எண்ணம் கொண்டவர்களின் கண் பார்வையில் இருந்து தப்பிப்பது மிகவும் கடினமாக உள்ளது. கெட்ட எண்ணம் கொண்டவர்களிடம் நேருக்கு நேர் நின்று பேசினால் கூட அவர்களுடைய எதிர்மறையான எண்ணங்கள் நம்மை தாக்கி விடுகின்றது. இதுவும் ஒருவகையான துர்சக்தி தான். இப்படிப்பட்ட எல்லா வகையான துர் சக்திகளிடம் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள இப்படிப்பட்ட பிரச்சினைகளில் இருந்து தப்பிக்க ஒரு சுலபமான வழியை பற்றித் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -

அன்றாடம் நாம் குளிக்கும்போது இந்த பரிகாரத்தை செய்து கொள்ளவேண்டும். குளிக்கின்ற தண்ணீரில் ஒரு சிட்டிகை மஞ்சள் பொடி, 1 ஸ்பூன் கல்லுப்பு, 1 ஸ்பூன் வெண்கடுகு, ஒரே சிறிய துண்டு படிகாரம், இந்த பொருட்களை போட்டு தண்ணீரில் கரைத்து விட்டு அதன் பின்பு குளித்தால் உடம்பில் இருக்கும் துர் சக்திகள் விலகி விடும் என்று சொல்லப்பட்டுள்ளது.

வீடு துடைக்கும் போதும் வீடு துடைக்கும் தண்ணீரில் இந்த எல்லாப் பொருட்களையும் போட்டு கரைத்து வீடு துடைத்துக் கொள்ளுங்கள். இரவு நேரங்களில் வீட்டிற்கு வந்த பின்பு குளிக்கும்  வழக்கம் சில பேருக்கு இருக்காது. முகம் கை கால்களை கழுவவும் அந்த தண்ணீரில் குறிப்பிட்ட இந்த பொருட்களை போட்டு முகம் கை கால்களைக் கழுவினால் நம்முடன் வந்த துர்சக்திகள் உடம்பை விட்டு நீங்கிவிடும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -

இதோடு மட்டும் விட்டுவிடாமல் வாரத்தில் ஒரு நாள் ஞாயிற்றுக் கிழமையில் மட்டுமாவது வீட்டில் இருக்கும் குடும்பத்தலைவி, வீட்டில் உள்ளவர்களுக்கு திருஷ்டி கழிக்கும் பழக்கத்தை வைத்துக்கொள்ள வேண்டும். உங்கள் வீட்டு வழக்கப்படி கற்பூரம் காண்பித்து அல்லது உப்பு சுற்றி போட்டு, எலுமிச்சம் பழத்தை சுற்றி போட்டு, திருஷ்டி கழிப்பது என்பது மிக மிக முக்கியமான ஒரு விஷயம்.

தினம் தினம் நாம் வெளியில் சென்று வரும் போதும் தினம்தினம் கண்ணுக்கு தெரியாத நிறைய பிரச்சனைகளை வீட்டிற்குள் கொண்டு வருகின்றோம். அந்த பிரச்சனையை நம்மோடு செல்வது கிடையாது. நம்முடன் இருப்பவர்களையும் நிச்சயம் பாதிக்கும். வீட்டில் சண்டை சச்சரவுகள் வராமல் இருக்க வேண்டுமென்றால் இப்படி சின்ன சின்ன விஷயங்களை கடைப்பிடித்த தான் ஆக வேண்டும். வாழ்வில் இன்று படிப்படியாக முன்னேற்றம் அடைந்தவர்கள் எல்லோருமே ஒரு கட்டத்தில் சாஸ்திர சம்பிரதாயங்களை பின்பற்றியவர்கள் தான்.

ஆனால் தனக்குப் பளிக்கக்கூடிய விஷயத்தை, பரிகாரத்தை யாரும் வெளியாட்களிடம் பகிரங்கமாக வெளியில் சொல்வது கிடையாது. அதனால் நமக்கும் விஷயம் புரிவதில்லை. எல்லா விஷயங்களையும் மூடநம்பிக்கை என்று ஒதுக்கி வைக்காமல், நம் முன்னோர்கள் சொல்லிவைத்து உள்ள சில விஷயங்களை பின்பற்றுவது நமக்கும் நம் குடும்பத்திற்கும் நன்மை தரும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -