இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி இன்று வெலிங்டனில் துவங்கியது. டாஸ் வென்று முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தார் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா.அதன்படி நியூசிலாந்து பேட்டிங் செய்ய துவங்கியது.
அதன்படி முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 219 ரன்களை குவித்தது. இதனால், இந்திய அணிக்கு 220 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. நியூசிலாந்து தரப்பில் மொத்தம் 14 சிக்ஸர்கள் மற்றும் 14 பவுன்டரிகள் அடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த போட்டியில் 15 ஆவது ஓவரை வீசிய பாண்டியா அந்த ஓவரின் கடைசி பந்தை மிட்சல் தூக்கி அடித்தார். அந்த பந்து சிக்ஸர் லைனில் பறந்தது. அப்போது அங்கு நின்று கொண்டிருந்த கார்த்திக் அந்த பந்தை கேட்ச் பிடித்தார். இதோ அந்த வீடியோ இணைப்பு :
Karthik’s catch pic.twitter.com/HHGYdv62Si
— Videos Shots (@videos_shots) February 6, 2019
இந்த கேட்ச் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த போட்டியில் எளிதான இரண்டு கேட்ச்களை விட்டதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்கலாமே :
மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்