இளமையாக இருக்க உதவும் கடுக்காய்

kadukkai face pack
- Advertisement -

இளமையாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படாத நபர்களை இருக்க மாட்டார்கள். இது தன்னை அறியாமலேயே ஒவ்வொரு மனிதருக்குள்ளும் இருக்கக்கூடிய ஒரு ஆசைதான். அதனால் தான் முதுமை லேசாக தென்பட்டவுடன் அதை மறைக்க வேண்டும் என்பதற்காக பல முயற்சிகளை எடுப்பார்கள். முகத்தில் தோன்றக்கூடிய முதுமையை நீக்குவதற்கும் பல வழிகளில் பல முயற்சிகளை செய்வார்கள். மிகவும் எளிமையான முறையில் முகத்தில் இருக்கக்கூடிய சுருக்கத்தையும் கருமையும் நீக்கி இளமையான பிரகாசமான முகத்தை பெறுவதற்கு எந்த பொடியை எப்படி உபயோகப்படுத்த வேண்டும் என்று தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.

நம்முடைய முகத்தில் இருக்கக்கூடிய சுருக்கங்களை நீக்குவதற்கும் அதே சமயம் முகத்தின் கருமையை நீக்கி பிரகாசமான முகத்தை பெறுவதற்கும் உதவக்கூடிய பொருளாக கருதப்படுவது தான் கடுக்காய். மேலும் இது கண் கருவளையத்தையும் நீக்கும் ஆற்றல் மிக்கது. இந்த கடுக்காய் பொடி முகத்திற்கு மட்டுமல்லாமல் நம்முடைய தலைமுடிக்கும் பெரிதும் உதவுகிறது. இதோடு மட்டுமல்லாமல் நம் உடம்பில் இருக்கக் கூடிய தேவையற்ற நச்சு கழிவுகளை நீக்குவதற்கும் கடுக்காய் உதவுகிறது என்பதால் கண்டிப்பான முறையில் அனைவரின் இல்லங்களிலும் கடுக்காய் பொடி என்பது இருக்க வேண்டும். சரி இப்பொழுது முகத்தை இளமையாக வைத்துக் கொள்ள எப்படி பேக் தயார் செய்வது என்று பார்ப்போம்.

- Advertisement -

இதற்கு முதலில் ஒரு சுத்தமான பவுலை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் மூன்று ஸ்பூன் அளவிற்கு கடுக்காய் பொடியை சேர்த்துக் கொள்ளுங்கள். பிறகு அதனுடன் இரண்டு விட்டமின் இ கேப்சூல் மாத்திரையை எடுத்து அதற்குள் இருக்கும் எண்ணெயை இந்த பொடியுடன் சேர்க்க வேண்டும். அடுத்ததாக இதில் அரை ஸ்பூன் அளவிற்கு சுத்தமான தேனை சேர்த்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது இவை அனைத்தையும் நன்றாக கலக்க வேண்டும்.

இதை நாம் ஃபேஸ் பேக்காக பயன்படுத்த வேண்டும் என்பதால் அந்த பேக் பதத்திற்கு வருவதற்கு தேவையான அளவு பன்னீரை இதில் ஊற்றி கலந்து கொள்ளலாம். வறண்ட சருமம் இருப்பவர்களாக இருந்தால் காய்ச்சாத பசும்பாலை இதில் ஊற்றி கலந்து கொள்ளலாம். இப்படி கலந்த இந்த கலவையை முகத்தை நன்றாக சுத்தம் செய்த பிறகு கீழிருந்து மேலாக தடவ வேண்டும். இதே போல் கழுத்திலும் தடவிக் கொள்ள வேண்டும். 20 நிமிடம் அப்படியே வைத்து விட வேண்டும். பிறகு குளிர்ந்த நீரினால் கழுவ வேண்டும்.

- Advertisement -

இப்படி வாரத்திற்கு மூன்று நாட்கள் என்ற வீதம் நாம் கடுக்காயை நம்முடைய முகத்தில் பயன்படுத்துவதன் மூலம் எப்பேர்ப்பட்ட கருமையாக இருந்தாலும் அந்த கருமை நீங்குவதோடு மட்டுமல்லாமல் முகத்தில் இருக்கக்கூடிய சுருக்கமும் கண்களை சுற்றி இருக்கக்கூடிய கருவளையம் நீங்கி மிகவும் இளமையான அழகான முகத்தை நம்மால் பெற முடியும்.

இதையும் படிக்கலாமே: கண் சுருக்கம் நீங்க டிப்ஸ்

பல அற்புத ஆற்றல் கொண்ட கடுக்காய் பொடியை அதன் பயனை அறிந்து உபயோகப்படுத்துவதன் மூலம் முகம் மட்டுமல்லாமல் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை இளமையாக வைத்துக் கொள்ள முடியும்

- Advertisement -