துர்க்கை அம்மனுக்கு ஏற்றும் எழுமிச்சை தீபத்தில் இதை மட்டும் சேர்த்து ஏற்றினால் போதும் நீங்கள் எதிர்பார்த்த பணம் உடனே உங்களைத் தேடி வரும் அதிசயம் நடக்கும்.

- Advertisement -

நம்முடைய தேவைக்கு பணத்தை ஓரளவிற்கு சம்பாதித்து கொள்ளலாம். ஆனால் திடீரென ஏதோ ஒரு அவசர தேவைக்கு நமக்கு பணம் தேவைப்பட்டால் அது நமக்கு உடனே கிடைக்க இந்த ஒரு எளிய பரிகாரத்தை செய்வதன் மூலம் அது நடக்கும் என்று சொல்லப்படுகிறது. அது என்ன பரிகாரம் எப்படி செய்வது என்பது எல்லாம் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.

திடீர் பண வரவிற்கு ஏற்ற வேண்டும் தீபம்
துர்க்கை அம்மனை நாம் இது வரை துன்பத்திலிருந்து மீளவும் தைரியத்தை பெறவும் கடன் தொல்லையிலிருந்து விடுபட, கிரகங்களின் கோளாறு என பல்வேறு காரணங்களுக்காக அவர்களை வழிப்பட்டு இருக்கிறோம். ஆனால் நாம் நினைத்த மாத்திரத்தில் பணம் நம்மை வந்து அடையவும் அம்மனை வழிபடலாம் என்ற தகவலை தான் இப்போது நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

- Advertisement -

இந்த பரிகாரத்தை செவ்வாய்க் கிழமையில் ராகு காலத்தில் தான் செய்ய வேண்டும். ஏனெனில் துர்க்கை அம்மனுக்கு உகந்த நேரமும் உகந்த நாளும் இதுவே. இத்துடன் இந்த பரிகாரத்திற்கு 9 முழு கிராம்பு, சிகப்பு திரி, நல்லெண்ணெய், எலுமிச்சை தீபம் ஏற்ற தேவையான எலுமிச்சை பழம் இவையெல்லாம் தான் இந்த பரிகாரத்திற்கு தேவைப்படும். கிராம்பு எலுமிச்சை எண்ணெய் போன்றவை எல்லாம் தீபம் ஏற்றும் நாளன்று புதிதாக வாங்கிக் தான் ஏற்ற வேண்டும்.

செவ்வாய் கிழமையில் ராகு கால வேளையில் உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் துர்க்கை அம்மன் ஆலயத்திற்கு சென்று அவர்களுக்கு முன்பாக இந்த எலுமிச்சை பழங்களை இரண்டாக நறுக்கி சாறு பிழிந்த பிறகு 9 விளக்கு வரும்படி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் நல்லெண்ணெய் ஊற்றி சிகப்பு நிற திரியை போட்ட பிறகு ஒவ்வொரு விளக்கிலும் ஒவ்வொரு கிராம்பை போட்டு விடுங்கள். அதன் பிறகு இந்த தீபத்தை ஏற்றி அம்மனிடம் ந உங்களுக்கு என்ன அவசர தேவையோ அதற்கு எவ்வளவு பணம் தேவை என்பதை மனதார அவர்களை வணங்கி ஆலயத்தை சென்று வலம் வர வேண்டும்.

- Advertisement -

இந்த தீபத்தை ஏற்றி வணங்கிய உடனே உங்களின் தேவைக்கான பணம் உங்களுக்கு கிடைப்பதற்கான வழி பிறந்து விடும். அதாவது உங்களுக்கு ஏதோ ஒரு அவசர தேவை யாரிடமோ பணம் கேட்கப் போகிறீர்கள் என்றால் இந்த முறையில் தீபம் விட்டு சென்றால் நிச்சயம் பணம் கிடைக்கும். அதே போல் ஏதோ ஒரு நல்ல காரியத்திற்காக நீங்கள் போகிறீர்கள் என்றாலும் இந்த தீபத்தை ஏற்றி வணங்கிய பிறகு சென்ற நிச்சயம் அதற்கான வழி கிடைத்து விடும்.

இதையும் படிக்கலாமே: உங்களை முன்னேறவே விடாமல் தடுக்கும் எந்த தடையையும் தகர்த்தெறிய வியாழக்கிழமையில் குருபகவானை இப்படி வழிபாடு செய்யுங்கள். குருவின் கடைக்கண் பார்வை கிடைத்து செல்வதிபதியாக வாழ வழிபாடு.

இந்த பரிகாரத்தை 16 செவ்வாய் கிழமைகள் தொடர்ந்து செய்ய வேண்டும் இப்படி செய்யும் பொழுது உங்களுக்கு வர வேண்டிய தடைப்பட்ட பணம் அனைத்தும் வந்து சேரும் என்பதோடு, பண வரவும் தடை இல்லாமல் தாராளமாக வந்து கொண்டே இருக்கும். நீங்கள் தேவை என நினைக்கும் பணம் உங்களுக்கு நிச்சயமாக கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.

- Advertisement -