உங்களை முன்னேறவே விடாமல் தடுக்கும் எந்த தடையையும் தகர்த்தெறிய வியாழக்கிழமையில் குருபகவானை இப்படி வழிபாடு செய்யுங்கள். குருவின் கடைக்கண் பார்வை கிடைத்து செல்வதிபதியாக வாழ வழிபாடு.

Guru pariharam Tamil
- Advertisement -

குரு பார்க்க கோடி நன்மை என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. குருவின் பார்வைக்கு அவ்வளவு மகத்துவம் இருக்கிறதாம். அப்படிப்பட்ட குருவை நாம் முறையாக வழிபடுவதால் நமக்கு ஏற்படக்கூடிய நன்மைகளை பற்றி தான் ஆன்மிகம் குறித்த இந்த பதிவில் பார்க்கப் போகிறோம். வியாழ பகவானை தான் நாம் குரு பகவான் என்று அழைக்கிறோம். இவரே தேவர்கள் அனைவருக்கும் குருவாக விளங்குபவர்.

பொதுவாக குரு ஒரு ராசிக்கு செல்கிறார் என்றால் 16 வருடங்கள் அந்த ராசியில் இருப்பாராம். மேலும் அவர் அப்பொழுது அந்த ராசிக்கு பல யோகங்களையும், பல நன்மைகளையும் வழங்குவாராம். மேலும் அவர் பார்க்கும் ராசிகளுக்கும் பல நன்மைகள் ஏற்படும் என்று கூறப்படுகிறது . அப்படிப்பட்ட குருவின் அருளை பெறுவதற்கு நாம் எவ்வாறு அவரை வழிபட வேண்டும் என்று பார்ப்போம்.

- Advertisement -

குருவின் அருளை பெற
குரு பகவானுக்குரிய கிழமையாக வியாழக்கிழமை திகழ்கிறது. வியாழக்கிழமை அன்று அதிகாலை எழுந்து நீராடி மஞ்சள் நிற ஆடையை அணிய வேண்டும். பிறகு அருகில் இருக்கும் ஆலயத்திற்கு சென்று நவகிரகங்களில் இருக்கும் குரு பகவானிற்கு கொண்டக்கடலை மாலையை சாற்ற வேண்டும். இந்த மாலையில் குறைந்த பட்சம் 51 கொண்டக்கடலையாவது இருக்க வேண்டும். அதிகபட்சமாக நம் வசதிக்கு ஏற்ப கோர்க்கலாம். அவருக்கு பிடித்த நிறமான மஞ்சள் நிறத்தில் மலர்களை வாங்கி சாற்ற வேண்டும். அவருக்கு அபிஷேகத்திற்கு மஞ்சள் பொடியை வழங்க வேண்டும்.

பிறகு வீடு திரும்பி அன்று முழுவதும் உபவாசம் இருந்து மாலை நேரத்தில் குருபகவானிற்குரிய ஸ்தோத்திரங்களை பாராயணம் செய்ய வேண்டும் அல்லது மிகவும் எளிமையான முறையில் “ஓம் குருவே போற்றி”, “ஓம் வியாழ பகவானே போற்றி” என்றும் 108 முறை கூறலாம். மஞ்சள் நிறத்திலான நெய்வேத்திய பொருளை அவருக்கு படைக்க வேண்டும். இரவில் உப்பு சேர்க்காத எளிமையான பலகாரத்தை உண்டு உறங்க வேண்டும்.

- Advertisement -

இந்த முறையில் நாம் தொடர்ந்து 16 வளர்பிறை வியாழக்கிழமையில் விரதம் மேற்கொள்ள வேண்டும். மேலும் அன்றைய தினம் சிவபெருமானுக்கு மஞ்சள் நிறத்தினால் ஆன லட்டுவை நெய்வேத்தியமாக கோவில்களில் வழங்குவதன் மூலம் தடைபட்டிருக்கும் காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். அன்றைய தினம் காலையில் பெருமாள் மற்றும் மகாலட்சுமி தாயாரை வணங்குவதன் மூலம் செல்வ செழிப்பு ஏற்படும்.
இந்த விரதத்தை நாம் மேற்கொள்வதன் மூலம் தொழில் மேன்மை அடையும். மங்களகரமான நிகழ்வுகள் அனைத்தும் நடைபெறும். தடைபட்டிருக்கும் காரியங்களில் உள்ள தடங்கல்கள் நீங்கும்.

இதையும் படிக்கலாமே: பூஜை அறையில் இதை மட்டும் யாருக்கும் தெரியாமல் ஒளித்து வைத்து விடுங்கள். கண்ணுக்கே தெரியாத இந்த பொருளால் கணக்கில்லாமல் பணம் குவியும்.

இத்துடன் குரு ஸ்தலமாக கருதப்படும் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்று அங்கு இருக்கும் குரு பகவானை வழிபடுவதால் நம் ஜாதகத்தில் இருக்கக்கூடிய குருவால் ஏற்பட்ட தோஷங்கள் அனைத்தும் நீங்கும். நன்மைகள் பல உண்டாகும். குரு கொடுக்க யார் தடுப்பார் என்ற கூற்றுக்கு இணங்க, குருவை வணங்கி அவர் அருளால் பல நன்மைகளை பெற்று மகிழ்ச்சியுடன் வாழ்வோம்.

- Advertisement -