இன்று நான் விடும்
மூச்சி , என்னவள் உனக்காக தான்
நாளை நான் விடப்போகும்
உயிரும், என்னவள் உனக்காக தான்.
நீ இன்றி நான் இல்லை என்பதை
எப்படி சொல்லி புரியவைப்பேன் உன்னிடம்..
இதையும் படிக்கலாமே:
உன்னை காண காத்திருந்த நொடிகள் – காதல் கவிதை
சிலர் தன் காதலை சொல்ல படும் பாடு சொல்லி மாளாது. இதை உணர்த்தும் வகையில் அந்நியன் படத்தில் ஒரு பாடல் வரி வரும். அந்த கடவுளை விடவும் பெரியவன் ஒருவன் பூமியில் உள்ளான் எவன். பெண் கண்களை பார்த்து காதலை சொல்லும் தைரியம் உள்ளவன் அவன் அவன் என்று மிகவும் அர்த்தமுள்ளதாக இருக்கும் அந்த வரிகள். ஆண்களும் சரி பெண்களும் சரி தங்கள் காதலை பல காலம் மனதில் வைத்து புழுங்கி தவிப்பர்.
இதற்கிடையில், பொதுவாக காதலுக்கு உதவுபவர்கள் நண்பர்கள் தான். ஆனால் அந்த நண்பர்கள் இருவருக்குள் காதல் மலர்ந்தால் அவ்வளவு தான். மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் சிக்கி தவிப்பர். இது போன்ற சமயங்களில் யாரேனும் ஒருவர் மனதில் தைரியத்தை வளர்த்துக்கொண்டு தங்கள் காதலை வெளிப்படுத்துவதே உசிதமான செயல் அதை செய்ய தவறுவதாலேயே பல காதல்கள் இன்று சொல்லாமலே மறைக்க படுகிறது.
அன்னையர் தின கவிதைகள், குழந்தை கவிதை, தமிழ் கட்டுரை, காதல் கவிதைகள் என பல தகவலைகள் இங்கு உள்ளன.