உங்களை பாடாய்படுத்தும் எதிரிகளின் தொல்லையில் இருந்து விடுபட நிலைவாசலில் இதை மட்டும் கட்டி விடுங்கள் போதும். எதிரிகள் இனி நீங்கள் இருக்கும் திசை பக்கம் கூட தலை வைத்து படுக்க மாட்டார்கள்.

kalli maa nilai vasal
- Advertisement -

இந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொரு உயிரினத்திற்கும் எதிரி என்று ஒரு உயிரினம் கண்டிப்பாக இருக்கும். மனிதர்களான நமக்கும் இது பொருந்தும். ஒரு சின்ன வேறுபாடு, மனிதனுக்கு மனிதனே எதிரியாக இருக்கிறான். இதில் சில எதிரிகள் கண்ணு தெரியாமல் பின்னால் இருந்து கொண்டு குழிபறிப்பார்கள் . அப்படிப்பட்ட எதிரிகளின் தொல்லையில் இருந்து விடுபடுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ள போகிறோம்.

பிறருக்கு தீங்கு செய்யாமல் வாழும் மனிதனே உண்மையான மனிதன் ஆகிறான். ஆனால் இந்த கால கட்டத்தில் நான் முன்னேறா விட்டாலும் என்னுடன் இருக்கும் மற்றவர்கள் யாரும் முன்னேற கூடாது என்று பல கெடுதல்களை நினைக்கிறார்கள் சில மனிதர்கள். அப்படிப் பட்டவர்களால் ஏற்படும் பிரச்சனைகளில் இருந்தும், தொல்லைகளில் இருந்தும் விடுபடுவதற்குரிய அருமையான பரிகார முறை தான் இது.

- Advertisement -

எதிரி தொல்லை நீங்க:
இந்த பரிகாரத்தை நாம் அமாவாசை நாளில் செய்தால் நமக்கு நல்ல பலன் கிடைக்கும். அன்று காலை எழுந்து குளித்து வீட்டை சுத்தம் செய்த பிறகு 27 வேப்ப இலைகளை பறித்து சுத்தம் செய்து கொள்ள வேண்டும். இலைகள் கிழியாமலும், ஓட்டை இல்லாமலும் இருக்க வேண்டும். இந்த இலைகளை ஒரு தாம்பாலத்தில் வட்ட வடிவில் வைக்க வேண்டும். மேலும் இந்த இலைகளின் மேல் வேப்ப எண்ணெய்யை தடவ வேண்டும். பிறகு அதற்கு மேல் சிறிது கல் உப்பை தூவி விட வேண்டும். இந்த இலைகளுக்கு நடுவில் கற்பூரம் மற்றும் பச்சை கற்பூரம் இரண்டையும் வைத்து கற்பூர தீபமேற்ற வேண்டும்.

இவ்வாறு தீபம் ஏற்றி விநாயகரை வணங்கிய பிறகு நம்முடைய குலதெய்வத்தையும் நினைத்துக் கொள்ள வேண்டும். எந்த ஒரு காரியத்தை நாம் செய்வதாக இருந்தாலும் முதலில் நாம் விநாயகரையும் நம்முடைய குலதெய்வத்தையும் வணங்கி அவர்களின் அருளை பெற்ற பிறகு செய்ய வேண்டும். அப்பொழுது தான் அந்த காரியம் வெற்றி அடையும் என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இவர்கள் இருவரையும் வணங்கிய பிறகு எதிரிகளின் தொல்லையை போக்குவதற்கு நமக்கு உதவி புரியும் தெய்வமாக விளங்குபவள் ஸ்ரீ மகா காளி. அவளை மனதார நாம் நினைத்து “ஓம் ஸ்ரீ மஹா காளி காயை ஸ்வாஹா” என்று 108 முறை மனதிற்குள் சொல்ல வேண்டும். இதை சொல்லி முடித்த பிறகு நாம் பார்க்கும் போது அந்த கற்பூரம் அனைத்தும் எரிந்து முடிந்திருக்கும். இப்பொழுது ஒரு கறுப்பு நிற துணியை எடுத்துக் கொண்டு, அதில் அந்த தாம்பாளத்தில் இருக்கும் அனைத்து பொருட்களையும் போட வேண்டும். பிறகு அதை ஒரு கறுப்பு கயிற்றால் கட்டிக் கொள்ள வேண்டும். இந்த மூட்டையை நாம் நம் வீட்டு நிலை வாசலில் வெளிப்புறமோ அல்லது உட்புறமோ கட்ட வேண்டும்.

இந்த முடிச்சானது 30 நாட்கள் வரை இருக்க வேண்டும். இந்த முப்பது நாட்களிலேயே எதிரிகளால் நமக்கு ஏற்பட்ட பிரச்சனைகளில் இருந்து நாம் வெளி வருவதற்குரிய வழியை காளிதேவி நமக்கு காட்டுவாள். எதிரிகள் நம்மை விட்டு விலகுவதை நம்மால் கண்கூடாக பார்க்க முடியும். அவ்வாறு 30 நாட்களில் நடக்கவில்லை என்றால், மறுபடியும் இதே பரிகாரத்தை நாம் மேற்கொள்ள வேண்டும்.

இதையும் படிக்காலமே: நீங்கள் செல்லும் இடமெல்லாம் செல்வந்தராய் வாழ தன ஆகர்சனம் மிக்க கருமஞ்சளை இந்த இடத்தில் வைத்து விடுங்கள் போதும். பணம் உங்களை நோக்கி வந்து கொண்டே இருக்க எளிய பரிகாரம்.

இதில் முக்கியமான குறிப்பு என்னவென்றால் நாம் யாருக்கும் எந்த கெடுதலும் செய்யாமல் நன்மையை மட்டுமே செய்து நமக்கு எதிரிகளால் பாதிப்பு ஏற்பட்டால் மட்டுமே தான் இந்த பரிகாரம் நமக்கு நன்மையைத் தரும். அவ்வாறு இல்லாத பட்சத்தில் இந்த பரிகாரத்தால் நமக்கு எந்த நன்மையும் ஏற்படாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -