உங்களை வீழ்த்த வேண்டும் என்று நினைப்பவர்களின் சதியை முறியடிக்க, இந்தப் பொருளை நனைத்து ஏரிய விடுங்கள் போதும். இதன் பிறகு எதிரிகள் என்ற வார்த்தை கூட நீங்கள் சொல்ல வேண்டிய அவசியம் இருக்காது.

ethiri thollai neenga
- Advertisement -

நம்முடன் பழகுபவர்களிலே யார் நல்லவர், தீயவர் என்பதை நம்மால் கணிக்கவே முடியாது. அவரால் தீங்கு ஏற்பட்டு நாம் முடிந்த பிறகு தான், இவரா நமக்கு இதை செய்தார் என்று யோசிப்போம். அந்த அளவிற்கு இன்றைய காலக்கட்டம் மோசமாக உள்ளது. ஒரு சிலருடைய தாக்குதலானது நேரடியாகவே இருக்கும். நம் முன்னேற்றத்திற்கு தடையாக, எதையாவது செய்வது, நமக்கு எதுவும் கிடைத்து விட கூடாது என்று அதை தடுப்பதற்கான காரியங்களை எல்லாம் முனைப்புடன் செய்வார்கள். இது நாம் பணிபுரியும் இடத்திலும் சரி, அலுவலகத்திலும் சரி, வியாபாரத்திலும் சரி, சாதாரணமாக வீட்டில் இருப்பவர்களுக்கு கூட அக்கம் பக்கத்தினரால் இது போன்ற தொல்லைகள் இருக்கத் தான் செய்கிறது. இப்படி கண்ணுக்குத் தெரிந்த தெரியாதவர்களின் தீய எண்ணங்கள், தீய செயல்களில் இருந்து நம்மை காத்துக் கொள்ள வேண்டிய பரிகார முறை தான் இது.

இந்த பரிகாரத்திற்கு வெள்ளை எருக்கன் செடியின் இலை, பஞ்சு திரி, நல்லெண்ணெய், ஒரு அகல் விளக்கு இவ்வளவு தான் இந்த பரிகாரத்திற்கு தேவையானது.

- Advertisement -

இந்தப் பரிகாரம் செய்வதற்கு முன் நாம் அதற்கான திரியை தயார் செய்ய வேண்டும். அதற்கு ஒரு சிறிய கிண்ணத்தில் கொஞ்சம் தண்ணீர் எடுத்துக் கொண்டு வெள்ளை எருக்கன் (வெள்ளை எருக்கன் இல்லை என்றால் சாதாரண எருக்கன் இலையை கூட எடுத்து கொள்ளலாம்) செடியின் இலையை கசக்கி அதன் சாறை அந்த தண்ணீரில் கலக்க வேண்டும். அதன் பிறகு அந்த தண்ணீரில் பஞ்சு திரியை நனைத்து காய வைக்க வேண்டும். (ஒருமுறை நனைத்து காய வைத்து அதே போல ஒன்பது முறை) இப்படி ஒன்பது முறை நனைத்து காய வைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

இந்தப் பரிகாரத்திற்கு ஞாயிற்றுக்கிழமை மிகவும் உகந்த நாள். ஞாயிற்றுக்கிழமை அன்று உங்கள் வீட்டில் பூஜை அறை தவிர்த்து மற்ற எந்த இடமாக இருந்தாலும் சரி, அங்கு இந்த பரிகாரத்தை செய்யலாம். விளக்கை கிழக்கு நோக்கி ஏற்றி வைத்து இந்த எருக்கஞ்சாறில் நனைத்த பஞ்ச திரியை போட்டு நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி அதன் முன் அமர்ந்து கொள்ளுங்கள். விளக்கு கிழக்கு முகமாக எரிய வேண்டும் நீங்கள் அந்த தீபத்திற்கு முன் அமர்ந்திருக்க வேண்டும். உங்களுக்குத் தெரிந்த எதிரியாக இருந்தால் அவர்களின் பெயரைச் சொல்லி இவர்களால் நான் இந்த துன்பத்திற்கு ஆளாகிறேன் இதிலிருந்து என்னை காக்க வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ளுங்கள். எதிரி தெரியாதவர்களாக இருந்தால் எனக்கு இத்தகைய துன்பங்கள் இருக்கிறது இது யாரால் என்று தெரியவில்லை இதிலிருந்து என்னை காக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள் இதை மட்டும் தான் நீங்கள் செய்ய வேண்டியது. இந்த பரிகாரம் செய்யும் போது எருக்கம் இலை மாலையை விநாயகருக்கு போட்டு வழி பட்டும் வரலாம்.

- Advertisement -

ஒரு முறை ஏற்றி முடித்த பிறகு மீதம் இருக்கும் எண்ணெய்யும், திரியும் கால் படாத இடத்தில் ஊற்றி விடுங்கள். அடுத்த முறை ஏற்றும் போது புது திரி, புது எண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள். ஒரு முறை நீங்கள் தீபம் ஏற்றி பார்த்த விளக்கை மற்றொருவர் ஏற்றக் கூடாது. அந்த விளக்கை மற்ற எதற்கும் பயன்படுத்தவும் கூடாது.

இந்த விளக்கை உங்களுக்கு எப்போதெல்லாம் இந்த பிரச்சனைகள் இருப்பதாக தோன்றுகிறதோ அப்போதெல்லாம் ஏற்றலாம். இதற்கு நாள் கணக்கு எதுவும் கிடையாது.

இதையும் படிக்கலாமே: அதிகாலையிலேயே திடீரென முழிப்பு வருகிறதா? இரவில் உறக்கம் திடீரென கலைவது அதிர்ஷ்டமாம் இது உங்களுக்கு தெரியுமா?

இந்தப் பரிகாரத்தை நீங்கள் தொடர்ந்து செய்து வர உங்களுக்கு தெரிந்த, தெரியாதவர்களின் தீய எண்ணங்களோ அல்லது வேறு ஏதாவது தீய செயல்களோ, திருஷ்டி எதுவாக இருந்தாலும் உங்களை நெருங்காது. உங்களை வீழ்த்த வேண்டும் என அவர்கள் நினைக்கும் போதே அந்த எண்ணத்தை உடைக்கும் ஆற்றல் இந்த தீபத்திற்கு உண்டு. நம்பிக்கையுடன் இந்த பரிகாரத்தை செய்து பார்த்து பலனடையுங்கள்.

- Advertisement -