எதிரியை தூக்கிப்போட்டு பந்தாட ஆசைப்படுகிறீர்களா? இதோ உங்களுக்கான எளிமையான வழிபாடுகள்.

sivan
- Advertisement -

உங்களுடைய எதிரிகளுக்கு நீங்கள் சிம்ம சொப்பனமாக இருக்க வேண்டுமா. உங்களை கனவில் பார்த்தாலும் அவர்கள் நடுங்க, எதிரிகளை நம் வசப்படுத்திக் கொள்ள என்ன செய்வது. சில தந்திரமான வேலைகளை செய்தால் தானே எதிரிகள் நம் வசப்படுவார்கள். அப்போதுதான் வாழ்க்கையில் சுலபமாக ஜெயிக்க முடியும். பள்ளிக்கூடம் படிப்பவர்கள் முதல், வேலை செய்பவர்கள், சொந்த தொழில் செய்பவர்கள் என்று நிச்சயமாக ஒருவருக்கு எதிரிகள் இல்லாமல் இருக்க முடியாது. அந்த எதிரிகளுக்கு முன்பு நாம் நன்றாக வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற வைராக்கியத்தோடு வாழ்ந்தால் தான், வாழ்க்கையில் ஒரு சுவாரசியமும் இருக்கும். எதிரிகளை வீழ்த்த வேண்டும் அதேசமயம் எதிரிகளை கண்டு பயப்படக்கூடாது. எதிரிகளை நம்மை கண்டு அஞ்ச வைக்க, ஆன்மீகத்தில் ஒரு சில வழிபாட்டு முறைகள் சொல்லப்பட்டுள்ளது. அதை தொடர்ச்சியாக பின்பற்றி வந்தாலே நீங்கள் எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழலாம்.

எதிரிகளை வீழ்த்த வழிபாடு:
பொதுவாகவே சிவனை வழிபாடு செய்பவர்களுக்கு எதிரிகள் இருக்க மாட்டார்கள். ருத்ராட்சத்தை கழுத்தில் மாட்டிக்கொண்டால் நீங்கள் சிவனின் சொத்தாகி விடுவீர்கள். உங்களுக்கு யாரும் தீங்கு நினைக்க மாட்டாங்க. ஆகவே, கழுத்தில் ருத்ராட்சம் போட்டுக் கொள்ளுங்கள். தினமும் சிவன் கோவிலுக்கு சென்று சிவபெருமானை வழிபாடு செய்யுங்கள். கூடவே பைரவரையும் வழிபாடு செய்து வரும் பட்சத்தில் உங்களுக்கு எதிரிகளால் பெரிய அளவில் தொந்தரவு வராது. எதிரிகளை சீக்கிரம் வீழ்த்தி விடலாம்.

- Advertisement -

அடுத்து, எதிரிகளால் உங்கள் வீட்டில் தொடர் பிரச்சனைகள் இருக்கிறது. வீட்டில் எதிரிகளின் கண் திருஷ்டி, எதிரிகள் ஏவி விடப்பட்ட எதிர்மறை ஆற்றல், உங்கள் வீட்டை தொல்லை கொடுக்கின்றது எனும் பட்சத்தில் வீட்டில் ஒரு மண் அகல் விளக்கில் வேப்ப எண்ணெய் ஊற்றி விளக்கு ஏற்றினாலும், வீட்டில் எதிரியால் உண்டாக்கப்பட்ட பிரச்சனைகள் அழியும்.

துர்க்கை அம்மனை ராகு காலத்தில் வழிபாடு செய்தாலும் எதிரியால் தொல்லை இருக்காது. வாழ்க்கையில் பெரிய செல்வந்தர்களாக மாற இந்த துர்க்கை அம்மன் வழிபாடு வழிவகுக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக துர்க்கைக்கு ராகு கால நேரத்தில் வேப்ப எண்ணெய்யையும், இலுப்ப எண்ணெயையும் சம அளவில் கலந்து கோவிலில் தீபம் ஏற்றினால் எதிரிகளின் சூழ்ச்சி அழியும்.

- Advertisement -

ஞாயிற்றுக்கிழமை நீங்கள் தொட்டால் சிணுங்கி செடி இருக்கக்கூடிய இடத்தை தேடி போக வேண்டும். அப்படி இல்லை என்றால் உங்களுடைய வீட்டிலேயே ஒரு தொட்டியில் தொட்டால் சிணுங்கி செடி வைத்து வளர்த்து வாருங்கள். தவறு ஒன்றும் கிடையாது. எதிரி பெயரை மூன்று முறை உச்சரித்து, எதிரி என் பக்கம் வரக்கூடாது என்று சொன்னால் நீங்கள் உச்சரித்த பெயர் கொண்ட எதிரி உங்கள் பக்கம் தலை வைத்து படுக்க மாட்டான். உங்களுடைய வாழ்க்கைக்கு இடையூறு கொடுக்க மாட்டான் உங்களை விட்டு விலகி சென்று விடுவான்.

இதையும் படிக்கலாமே: 18 நாட்களில் வீட்டிற்கு கிரகப்பிரவேசம்! யார் நினைத்தாலும் வீட்டை சீக்கிரமாக கட்டி முடிக்கலாம். இந்த விசித்திர பரிகாரம் மட்டும் உங்களுக்கு தெரிந்திருந்தால்.

மேலே சொன்ன பரிகாரங்களில் உங்களுக்கு எது எளிமையாக இருக்கின்றதோ அதை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். ஏதாவது ஒரு பரிகாரத்தை செய்தாலும் நிச்சயம் பலன் உண்டு. நம்பிக்கை உள்ளவர்கள் இதை பின்பற்றி பலன் பெரலாம் என்ற தகவலோடு இந்த ஆன்மீகம் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -