எதிரிகளை ஓட ஓட விரட்டி அடிக்க இந்த ஒரு விளக்கை வீட்டில் ஏற்றினாலே போதும். எதிரிகளால் உங்களுடைய வாழ்வில் தொல்லை இல்லை.

amman
- Advertisement -

எதிரிகள் இல்லாமல் ஒரு மனிதனால் நிச்சயமாக பூமியில் வாழ முடியாது. நல்ல நண்பர்களாக, நல்ல உறவினர்களாக இருப்பவர்கள் கூட ஒரு காலகட்டத்தில் எதிரிகளாக மாறிவிடுகிறார்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விருப்பம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி சுபாவம் இருக்கிறது. ஐந்து விரல்களும் ஒன்றாக இருப்பது இல்லை. ஆகவே பூமியில் வாழும் வரை எல்லா உயிரினங்களுக்கும் எதிரி நிச்சயம் இருக்கும். மனிதர்களுக்கு மட்டும் கிடையாது. வாயில்லா ஜீவராசிகளுக்கு கூட எதிரி பிரச்சனை உண்டு.

தெரியாத நாய் நம் தெருவுக்குள் வந்துவிட்டால், நம் வீட்டு வீதியில் இருக்கும் நாய் என்ன செய்கிறது. அந்த நாயை துரத்தி அனுப்புவது அல்லவா. அதே போல தான். நாம் செய்யும் தொழிலில் புதுசாக யாராவது வந்தால், நமக்கு பிடிப்பதில்லை. ஏனென்றால், புதியதாக வந்தவன் நம் இடத்தை பிடித்து விட்டால் என்ன செய்வது. எல்லாம் ஒரு சுயநலம் தான். தொழில் என்று மட்டுமல்ல, எந்த வகையில் நமக்கு ஈடாக, இன்னொருவரை அந்த இடத்தில் வைத்து பார்க்கவே முடியாது.

- Advertisement -

எதிரியை எப்போதுமே அழிக்க வேண்டும் என்று நினைக்கக் கூடாது. எதிரியோடு போராடி ஜெயிக்க வேண்டும். அதற்கு உண்டான வழிகளை பாருங்கள். சரி இப்போது எதிரி பிரச்சினையிலிருந்து தப்பிக்க என்ன செய்வது. எதிரியாக இருந்தாலும் ஒரு அளவு இருக்கிறது. எப்போது பார்த்தாலும் நம் வாழ்க்கையில் வந்து பிரச்சனை கொடுத்துக் கொண்டிருந்தால் நாம் ஏதாவது பதிலுக்கு செய்துதான் ஆக வேண்டும். குட்ட குட்ட குனிந்து போனால் பிரச்சனை தான். ஒருமுறை எதிர்த்து பேசி தான் பாருங்களேன். திரும்பவும் உங்கள் பக்கம் வர மாட்டாங்க.

எதிரியை விரட்ட தீப வழிபாடு:
ஒன்பது செவ்வாய் கிழமைகள் தொடர்ந்து இந்த விளக்கை வீட்டில் ஏற்ற வேண்டும். ஒரு மண் அகல் விளக்கை எடுத்துக் கொள்ளுங்கள். அதை ஒரு தட்டின் மேல் வைத்து விடுங்கள். அந்த விளக்கில் வேப்ப எண்ணெய் ஊற்றி, சிவப்பு திரி போட்டு, குலதெய்வத்தையும் இஷ்ட தெய்வத்தையும், ஏதாவது ஒரு உக்கிர தெய்வத்தையும் மனதார நினைத்துக் கொண்டு இந்த விளக்கை ஏற்றி, உங்களுடைய வீட்டு வடமேற்கு மூலையில் வைக்க வேண்டும்.

- Advertisement -

எண்ணெய் தீரும் வரை அந்த தீபமே எரிந்து குளிரட்டும். விளக்கு ஏற்றி வைத்துவிட்டு அந்த விளக்கத்திற்கு முன் வந்து உங்களுடைய, எதிரி பிரச்சனை தீர வேண்டும் என்று பிரார்த்தனை செய்ய வேண்டும். உங்களுடைய எதிரி உங்களுக்கு என்ன பிரச்சனை கொடுக்கிறார். எந்த ரூபத்தில் எதிர்ப்புகளை கொடுக்கிறார். அது எல்லாம் சரியாக வேண்டும் என்று நினைத்து பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். தெரியாத எதிரியாக இருந்தால், கண்ணுக்கு தெரியாத எதிரி நம் பக்கம் தலை வைத்து படுக்கக் கூடாது என்ற வேண்டுதலை வைக்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே: தப்பி தவறி கூட இந்த 4 பொருட்களை யார் கையில் இருந்தும் வாங்காதீங்க. துரதிஷ்டம் உங்கள் கையோடு ஒட்டிக் கொள்ளும்.

இந்த விளக்கை எக்காரணத்தைக் கொண்டும் தென்மேற்கு மூலையில் ஏற்றி விடக்கூடாது. அந்த தவறை செய்யாதீர்கள். பார்த்து வடமேற்கு மூலையை தேர்ந்தெடுத்து தீபத்தை ஏற்றி பலன் பெறுங்கள். ஒன்பது வாரம் இந்த பரிகார வழிபாட்டை செய்யும் போது உங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். அக்கம் பக்கம் வீட்டில் இருப்பவர்கள் ரொம்பவும் பொறாமை கண்ணோடு நம் குடும்பத்தையே நோட்டம் விட்டு, பிரச்சினை கொடுக்கின்றான் என்றால் அவர்களை கூட நம்மிடம் இருந்து தள்ளி வைக்க இந்த பரிகாரத்தை செய்யலாம். இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் எதிரி குடும்பத்திற்கோ, எதிரிக்கோ, எந்த ஒரு ஆபத்தும் நேராது. எதிரி நம்மை மறந்து விடுவான் அவ்வளவு தான்.

- Advertisement -