எதிரிகள் தொல்லை நீங்க வாழைப்பழ பரிகாரம்

sivan banana
- Advertisement -

ஒருவருடைய வாழ்க்கையில் முன்னேற்றம் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. அப்படிப்பட்ட முன்னேற்றம் அனைத்து வகைகளிலும் ஏற்பட்டால்தான் அவர்களுடைய வாழ்க்கை சுகமானதாக இருக்கும். ஏதாவது ஒரு காரியத்தில் முன்னேற்றம் தடைப்பட்டாலும் அதனால் அவர்கள் பல பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். முன்னேற்றத்தை தடை செய்யக்கூடிய எதிரிகளும் நம்மை சுற்றி இருப்பார்கள். அப்படிப்பட்ட எதிரிகளின் தொல்லை நீக்கவும் வாழ்க்கையில் முன்னேற்றத்தை அடையவும் செய்யக்கூடிய ஒரு எளிய பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

ஒருவர் ஏதாவது ஒரு விஷயத்தில் முன்னேற்றம் அடைந்து கொண்டு இருக்கிறார் என்றால் அவரை அறியாமலேயே அவரை சுற்றி எதிரிகள் அதிகரித்துக் கொண்டே செல்வார்கள். அப்படிப்பட்ட எதிரிகள் அவர்களின் முன்னேற்றத்தை தடை செய்வதற்காக பல வழிகளில் முயற்சி செய்வார்கள். அந்த முயற்சிகளால் முன்னேற்றம் தடைபடுவதோடு மட்டுமல்லாமல் பல கஷ்டங்களை சந்திக்க வேண்டிய சூழ்நிலையும் உண்டாக்கும். இப்படி கஷ்டத்திற்கு மேல் கஷ்டத்தை அனுபவித்து கொண்டிருப்பவர்கள் செய்யக்கூடிய ஒரு எளிய பரிகாரத்தை பற்றி பார்ப்போம்.

- Advertisement -

இந்த பரிகாரத்தை ஞாயிற்றுக்கிழமை அன்று செய்ய வேண்டும். அதுவும் காலையில் ஆறு மணிக்குள் செய்து முடித்து விட வேண்டும். இந்த பரிகாரத்திற்கு நமக்கு ஒரு வெற்றிலை ஒரு வாழைப்பழம் 15 கிராம்பு தேவைப்படும். வீட்டு பூஜை அறையில் தீபத்தை ஏற்றி வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு நம்மை பார்த்தவாறு வெற்றிலையின் காம்பு இருக்குமாறு வைத்துக் கொள்ளுங்கள்.

அதற்கு மேல் வாழைப்பழத்தின் காம்பு நம்மை பார்த்தவாறு வைத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது 15 கிராம்பையும் அதனுடன் சிறிது உதிரி பூக்களையும் வலது கையில் வைத்து அதற்கு மேல் இடது கையை வைத்து சிவபெருமானை மனதார வேண்டிக் கொள்ள வேண்டும். அப்படி வேண்டும் பொழுது “ஓம் நமசிவாய மசிவாயந சிவாயநம வாயநமசி யநமசிவா” என்று 15 முறை கூற வேண்டும்.

- Advertisement -

பிறகு ஒவ்வொரு கிராம்பாக எடுத்து அந்த வாழைப்பழத்தில் குத்த வேண்டும். அப்படி குத்தும் பொழுதும் இதே மந்திரத்தை உச்சரித்தவாறு செய்ய வேண்டும். இப்படி 15 கிராம்பையும் வாழைப்பழத்தின் குத்திய பிறகு வெற்றிலையோடு அந்த வாழைப்பழத்தை எடுத்து கையில் வைத்துக்கொண்டு “ஓம் சிவ சக்தியே நமஹ” என்றும் “ஓம் நந்திகேஸ்வரரே நமஹ” என்றும் ஐந்து முறை கூற வேண்டும்.

பிறகு ஒரு துணியில் இந்த வெற்றிலை வாழைப்பழத்தை வைத்து ஓடுகின்ற நீரில் போட்டு விட வேண்டும். இப்படி ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் செய்துவர வாழ்க்கையில் இருக்கக்கூடிய எதிரிகளின் தொல்லை நீங்கி நல்ல முன்னேற்றமான பாதையை அடைய முடியும்.

இதையும் படிக்கலாமே: பண வசியம் ஏற்பட வழிபாடு

மிகவும் எளிமையான இந்த பரிகாரத்தை முழு நம்பிக்கையுடன் செய்வதன் மூலம் சிவபெருமானின் அருளால் வாழ்வில் நல்ல முன்னேற்றத்தை அடைய முடியும்.

- Advertisement -