பண வசியம் ஏற்பட வழிபாடு

pana vasiya pariharam
- Advertisement -

ஒருவருடைய மதிப்பையும் மரியாதையையும் தீர்மானிக்கக்கூடிய ஒரு பொருளாக கருதப்படுவது தான் பணம். யாரிடம் அதிக அளவு பணம் இருக்கிறதோ அவர்களைத் தேடி மதிப்பும் மரியாதையும் வரும் என்று கூறப்படுகிறது. பணம் என்று சொன்னால் பிணம் கூட வாயை திறக்கும் என்ற ஒரு கூற்று பலருக்கும் தெரிந்த ஒன்றாக தான் இருக்கும். அந்த அளவிற்கு பணத்தின் முக்கியத்துவம் என்பது மிகவும் இன்றியமையாத ஒன்றாக திகழ்கிறது. இன்றைய காலத்தில் அனைவரும் இந்த பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் அப்படிப்பட்ட பணத்தை வசியம் செய்ய பயன்படும் பொருட்களை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

பொதுவாக ஒரு பொருளை ஈர்ப்பதை தான் நாம் வசியம் என்று கூறுகிறோம். ஒரு பெண்ணை வசியம் செய்ய வேண்டும் என்று நினைத்தால் அந்தப் பெண் நம்மிடம் வந்து நம்முடனே இருக்க வேண்டும் என்று அர்த்தம். படிப்பை வசியம் செய்ய வேண்டும் என்றால் நாம் நினைக்கும் அளவிற்கு நன்றாக படித்து நிறைய மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என்ற அர்த்தம். இதே போல் தான் பண வசியம் என்றால் பணத் நம்முடனே நிரந்தரமாக இருந்து பல மடங்கு அதிகரிக்க வேண்டும் என்பது அர்த்தம். இப்படி பண வசியம் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் மகாலட்சுமி தாயாருக்கு விருப்பமான சில பொருட்களை வைத்து எப்படி வழிபாடு செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.

- Advertisement -

இந்த வழிபாட்டை வளர்பிறையில் வரக்கூடிய வெள்ளிக்கிழமை அன்று தான் செய்ய வேண்டும். அன்றைய தினம் கரி நாளாக இருக்கக் கூடாது. அதுவும் குறிப்பாக சுக்கிர ஹோரையில் தான் செய்ய வேண்டும். அதாவது காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் செய்து முடித்து விட வேண்டும். ஒரு மஞ்சள் நிற துணியை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒன்பது வசம்பை மஞ்சள் கயிற்றால் கட்டி வைக்க வேண்டும். பிறகு சிறிதளவு வெட்டிவேரை வைக்க வேண்டும்.

அதற்கு மேல் 9 ஏலக்காய்களை வைக்க வேண்டும். அடுத்ததாக 9 கிராம்பை வைக்க வேண்டும். சிறிது பச்சை கற்பூரத்தையும் வைத்து மூட்டையாக கட்ட வேண்டும். இந்த மூட்டையின் மேல் நம்முடைய குலதெய்வத்தின் பெயரை மஞ்சளில் எழுத வேண்டும். பிறகு இந்த மூட்டையை பூஜையறையில் இருக்கும் சுவாமி படத்திற்கு முன்பாக வைத்து தூப தீப ஆராதனை காட்ட வேண்டும்.

- Advertisement -

பிறகு பூஜை அறையில் உயரமாக இருக்கும் ஒரு இடத்தில் இந்த மூட்டையை வைத்து விட வேண்டும். இதில் இருக்கக்கூடிய அனைத்து பொருட்களும் பண வசியத்தை ஏற்படுத்தக் கூடிய மகாலட்சுமியின் அம்சம் பொருந்திய பொருட்களாக திகழ்கின்றன. இந்த மூட்டை நம் வீட்டில் இருக்கும் வரை பணத்திற்கு எந்தவித தட்டுப்பாடும் ஏற்படாது. வீண் விரயம் ஏற்படாது. பொருளாதார வசதி அதிகரிக்கும். பணவரவு அதிகரிக்கும்.

இதையும் படிக்கலாமே: தோஷங்களும் பாவங்களும் நீங்க விநாயகர் வழிபாடு

மிகவும் எளிமையான இந்த பணவசிய பரிகாரத்தை நாமும் செய்து நம் வாழ்வில் இருக்கக்கூடிய பண ரீதியான பிரச்சினைகள் அனைத்திலும் இருந்து விடுபடலாம்.

- Advertisement -