உங்களை வீழ்த்த வேண்டும் என நினைக்கும் எதிரிகள் விழுந்து அடித்து ஓட, வரவேற்பறையில் இதை மட்டும் வைத்து விடுங்கள். எதிரிகள் நீங்கள் இருக்கும் திசை பக்கம் கூட தலை காட்ட மாட்டார்கள்.

vinayagar erukkam poo
- Advertisement -

இன்றைய கால சூழ்நிலையில் எப்படி கடன் பிரச்சனை இல்லாமல் ஒரு மனிதன் இருக்க முடியாதோ. அதே போல் தான் எதிரிகளின் தொல்லை இல்லாத மனிதன் இருக்கவே முடியாது. இந்த தொல்லை எல்லாத் துறையில் இருப்பவர்களுக்கும் இருக்கிறது. ஏன் நாம் வீட்டிலே இருந்தாலும் வீடு தேடி வந்து தொல்லை தருபவர்களும் இருக்கத் தான் செய்கிறார்கள். இந்த எதிரி தொல்லையில் இருந்து விடுபட ஒரு எளிய பரிகாரத்தை தான் இப்போது இந்த ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ள போகிறோம்.

எதிரிகள் இல்லாத வாழ்வில் சுவாரஸ்யம் இல்லை என்று சொல்லிக் கொள்ளலாம். ஆனால் பல வழிகளில் நமக்கு அது இடைஞ்சலை தான் தரும். நாம் ஒன்று செய்ய நினைக்கும் போது அதற்கு தடையாக பல விஷயங்களை செய்வார்கள். இதனால் நாம் நினைத்ததை சரி வர செய்ய முடியாது. ஒரு வேளை எதிரி கண்ணுக்கு தெரிந்தவராக இருந்தால் நாம் எதிர்த்து போராடலாம். நம் கண்ணுக்கே தெரியாமல் நம்மை துன்பத்திற்கு ஆளாக்குபவர்களை நம்மால் என்ன செய்து விட முடியும்.

- Advertisement -

இப்படி செய்பவர்கள் பெரும்பாலும் நம்முடனே இருப்பவர்கள் ஆக தான் இருப்பார்கள்.எனவே அவர்களை நாம் ஒழிக்க வேண்டும் என்று நினைப்பதை விட அவர்களின் தொல்லையிலிருந்து நாம் விலகி இருக்க வேண்டும். அவர்கள் நம் வழிக்கு வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று யோசிப்பது சிறந்தது. அதற்கான பரிகாரம் தான் இப்பொழுது நாம் தெரிந்த பதிவில் பார்க்க போகிறோம்.

இதை பரிகார முறையாகவும் எடுத்துக் கொள்ளலாம். வாஸ்து முறையாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம். அதாவது வாஸ்துக்களிலே முக்கியமானதாக யானை பொம்மை சொல்லப்படுகிறது. இந்த பரிகாரத்திற்கும் நமக்கு யானை பொம்மை தான் தேவை அது மண்ணாளான யானை பொம்மையாக இருந்தால் சிறந்தது. அப்படி இல்லை என்ற வேறு எந்த மாதிரியான பொம்மை கிடைத்தாலும் அதை வாங்கிக் கொள்ளுங்கள். ஆனால் இரும்பு சம்பந்தப்பட்ட பொருளால் செய்தது வாங்க கூடாது.

- Advertisement -

எதிரிகளை வெல்ல எளிய பரிகாரம்
இந்த யானை பொம்மையை உங்கள் வரவேற்பு அறையின் வடக்கில் வைக்க வேண்டும். வடக்கில் வைக்கும் போது ஒரு யானை பொம்மை மேற்கு பார்த்தபடியும், ஒரு பொம்மை கிழக்கு பார்த்தவாறும் நிறுத்தி வைக்க வேண்டும். இப்படி வைத்திருக்கும் இந்த யானை பொம்மை உங்கள் வரவேற்பதில் இருக்கும் போது வெளியில் இருந்து தொல்லை தருபவர்களும், அவர்களுடைய எண்ணங்களை மாற்றி உங்கள் பக்கமே திரும்பாத அளவிற்கு செய்யும் தன்மை உண்டு. அதே நேரத்தில் உங்கள் வீடு தேடி வந்து உங்களுடனே இருந்து கொண்டு உங்களுக்கு தொல்லை தருபவர்களையும் உங்களை வீழ்த்த வேண்டும் என்ற எண்ணத்தையே மாற்ற இந்த பரிகாரம் உதவும்.

அதுமட்டுமின்றி வாஸ்துரீதியாகவும் இப்படி இந்த பொம்மைகள் வரவேற்பறையில் இருப்பது வீட்டிற்கு நல்ல ஒரு செல்வ செழிப்பையும் கொடுக்கும். இதை செய்வதுடன் உங்கள் வீட்டில் அருகில் இருக்கும் விநாயகர் ஆலயத்திற்கு சென்று நேரம் கிடைக்கும் போதெல்லாம் எருக்கன் மாலையை சாற்றி அவரிடம் எதிரி தொல்லை முற்றிலுமாக நீங்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டு வருவது கூடுதல் நன்மையை தரும்.

இதையும் படிக்கலாமே: குன்றாத செல்வ வளம் பெருக தேன் மெழுகு பரிகாரம்

நமக்கு இருக்கும் பெரும்பாலான பிரச்சனைகளை சரி செய்து அன்றாடம் வாழ்க்கையே நகர்த்துவதே போராட்டமாக இருக்கும் இந்த காலக்கட்டத்தில், இது போன்ற எதிரிகளின் தொல்லை பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்க முடியாது. எனவே இது போல சிறு சிறு தாந்திரீக பரிகாரங்களை செய்து நம் வாழ்க்கையை முன்னேற்ற பாதையில் நாம் யாரையும் துன்பப்படுத்தாமல் முன்னேறி செல்லலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

- Advertisement -