இப்படி மீன்களை வளர்த்தால் போதும், நீங்கள் வேண்டாம் என்று தடுத்தாலும் செல்வம் உங்களை தேடி வந்து சேரும்

- Advertisement -

இன்றைய காலகட்டத்தில் வீட்டில் அழகிற்காக கலர் கலராக மீன்கள் வாங்கி தொட்டியில் வளர்ப்பது பெருகி விட்டது. இப்படி வளர்ப்பது அழகுக்காக மட்டும் தான் என்று நம்மில் பலரும் நினைத்துக் கொண்டு இருக்கிறோம். ஆனால் இது மட்டுமல்ல இந்த மீன்களால் நம் வீட்டிற்கு எவ்வளவு அதிர்ஷ்டம் என்று உங்களுக்கு தெரிந்தால் நீங்களும் கட்டாயம் மீன்களை வாங்கி வளர்க்க தொடங்கி விடுவீர்கள். ஆம் எந்ந வீட்டில் இப்படி வளர்க்கும் மீன்கள் துள்ளி குதித்து விளையாடி கொண்டு இருக்கிறதோ அங்கு நீங்கள் வேண்டாம், வேண்டாம் என்று தடுத்தாலும் செல்வம் உங்களை தேடி வந்து சேரும்.

சரி இத்தகைய வண்ண மீன்களை வாங்கி தொட்டியில் விட்டுவிட்டால் போதுமா, செல்வம் பெருக தொடங்கி விடுமா என்றால் அப்படியெல்லாம் நடந்து விடாது. எதை செய்வதாக இருந்தாலும் அதற்குரிய வழிமுறைகளை பின்பற்றினால் தான் அதின் பலனை நாம் அடைய முடியும். இந்த மீன் தொட்டியில் மீன்களை வாங்கி விட்டால் மட்டும் கூரையை பிடித்துக் கொண்டு செல்வம் கொட்டாது. இந்த மீன் தொட்டிகளை எந்த திசையில் வைக்க வேண்டும் எப்படி வைக்க வேண்டும் எந்த வகையான மீன்களை இதில் வளர்க்க வேண்டும், எத்தனை வளர்க்க வேண்டும் இப்படி பல முறைகள் உண்டு. அதன்படி சரியாக செய்தால் தான் நம் வீட்டில் செல்வம் அதிகரிக்கும்.

- Advertisement -

முதலில் இந்த மீன்கள் கிழக்கு, மேற்கு திசையில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும். இந்த மீன் தொட்டிகள் சமையலறை மற்றும் படுக்கை அறையில் நிச்சயமாக இருக்கக் கூடாது. முடிந்த அளவிற்கு இதை வரவேற்பு அறையில் அனைவரும் வந்து அமர்ந்து செல்லும் இடத்தில் வைத்தால் நல்லது. இதில் சிகப்பு, ஆரஞ்சு, கோல்டன் கலர் மீன்களும் மற்றும் இத்துடன் ஒரு கருப்பு கலர் மீனும் இருக்க வேண்டும். கருப்பு மீன் நம் வீட்டில் இருக்கும் திருஷ்டி, தீய சக்தி, எதிர்மறை எண்ணங்கள் ஆகியவற்றை நீக்கும் சக்தி வாய்ந்தது.  சிகப்பு நிறம் வளமையும் ஆரஞ்சு நிறம் வளத்தையும், கோல்டன் நிறம் செல்வத்தையும் தரும் திறன் கொண்டது.

அது மட்டும் இன்றி இந்த மீன்களுக்கு உணவளிக்கும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சிலர் மீன்களுக்கு பசிக்கும் என்று அளவிற்கு அதிகமாக உணவுகளை போட்டுக் கொண்டே இருப்பார்கள் அப்படி அளவுக்கு அதிகமான உணவுகளை மீன்கள் உண்ணும் போது ஒன்று மந்தநிலையில் இருக்கும் அல்லது இறக்கும் வாய்ப்பும் அதிகம். தொட்டியில் மீன்கள் எப்போதும் துள்ளி குதித்துக் கொண்டு இருக்க வேண்டுமே தவிர மந்தமாக இருக்கக் கூடாது. அப்படி இருக்கும் போது வீட்டிலும் மந்த நிலை உருவாகிவிடும்.

- Advertisement -

நாம் அதிகப்படியாக உணவளித்ததால் மீன்கள் இறந்தால் அது நம் குடும்பத்திற்கு நல்லதல்ல. அதே நேரத்தில் சரியான முறையில் பராமரித்தும் இறந்து போனால், கவலை வேண்டாம். நமக்கு ஏதேனும் துன்பம் வருவதை மீன்கள் தடுத்து அவைகள் எடுத்துக் கொண்டதாக அர்த்தம். எனவே மீன்கள் எப்போதும் தொட்டியில் சுறுசுறுப்புடன் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் அந்த இடத்திலே மகாலட்சுமி தங்கி இருப்பாள். மீன்கள் என்பது மகாவிஷ்ணுவின் ஒரு அவதாரம். எனவே அவர் இருக்கும் இடத்தில் நிச்சயமாக மகாலட்சுமி இருப்பாள் என்பது தான் மீன்கள் வளர்க்கும் இடத்தில் செல்வம் பெருகும் என்பதற்கான முன்னோர்கள் சொல்ல காரணமும் கூட.

இதில் முக்கியமான ஒன்று என்னவென்றால் எந்த நிற மீன்கள் இறக்கிறதோ, மீண்டும் அதே நிறத்தில் உள்ள மீன்களை தான் நாம் வாங்கி தொட்டியில் விட வேண்டும். வேறு நிற மீன்களை வாங்கி விடக்கூடாது, அதுமட்டுமின்றி மீன்கள் 9 எண்ணிக்கையில் இருக்க வேண்டும் அதில் ஒன்று கட்டாயம் கருப்பு நிற மீனாக இருக்க வேண்டும். இதில் தன் இனத்தையே  உண்ணும் மீன்களை வாங்கி வளர்க்கக்கூடாது.

மீன்கள் வளர்க்கும் தொட்டி எப்போதும் சுத்தமாகவும் உள்ளே நீந்தும் மீன்கள் வெளிப்புறம் இருந்து பார்க்கும்போது நன்றாக தெரியுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். தொட்டியில் பாசைகளோ, தூசோ இல்லாமல் அந்த மீன்கள் எந்த அளவிற்கு சந்தோஷமாக துள்ளி குதித்து இருக்கிறதோ அதே அளவு சந்தோஷமும் நிம்மதியும் செல்வமும் நம் குடும்பத்திலும் பெருகும் என்பது உறுதி.

- Advertisement -