உப்பு தண்ணீரில் உங்களுடைய வீட்டு டைல்ஸை துடைத்தாலும் வெள்ளைத் திட்டுக்கள் வரவே வராது. மாப் போடும்போது 1 ஸ்பூன் இந்த லிக்விட் சேர்த்துக்கோங்க! உங்கள் டைல்ஸ் சட்டுனு பளபளப்பாக மாறிவிடும்.

mop
- Advertisement -

நம்முடைய வீட்டில் பயன்படுத்தப்படும் தண்ணீர் உப்பு தண்ணீராக இருந்தால், அதன் மூலம் நமக்கு வரக்கூடிய கஷ்டங்கள் நிறைய இருக்கும். அதாவது அந்த உப்புத் தண்ணீரை கொண்டு எந்த ஒரு பொருளை கழுவி, எடுத்தாலும் அது வெள்ளையாக, உப்பு பூத்தது போல ஒரு தோற்றத்தை உண்டு பண்ணிக் கொண்டே இருக்கும். இதேபோல் தான் உங்களுடைய வீட்டில் இருக்கும் டைல்ஸ் வெள்ளையாக இருந்தாலும் சரி, கருப்பாக இருந்தாலும் சரி, மாப் போடும்போது வெள்ளைத் திட்டுக்கள் படிந்து, வீடு துடைத்த திருப்தியே நமக்கு கிடைக்காமல் இருக்கும்.

clean

அதாவது தரையை துடைத்த பின்பு வெளிச்சத்தில் நின்று பார்த்தீர்கள் என்றால், நீங்கள் துடைத்த அடையாளங்கள் அப்படியே நிற்கும். நம்மில் நிறைய பேர் வீட்டில் இதை பார்த்து இருப்போம். இந்த வெள்ளைத் திட்டுக்கள் இல்லாமல் நம்முடைய டைல்ஸ் தரையை பளபளவென துடைப்பது எப்படி? என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -

முதலில் நீங்கள் வீடு துடைக்கும் தண்ணீரில் லைசால், போன்ற எந்த வகையான கிருமிநாசினியையும் சேர்த்துக் கொள்ளலாம். இருப்பினும் அதனோடு 10ml அளவு கம்ஃபோர்ட் (comfort fabric conditioner) சேர்க்கவேண்டும். துணிகள் வாசமாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்த லிக்விடை நாம் பயன்படுத்துவோம் அல்லவா? எந்த பிராண்டை வேண்டுமென்றாலும் நீங்கள் வாங்கிக் கொள்ளுங்கள்.

comfort

இப்போதெல்லாம் 3 ரூபாய்க்கு சிறிய சேம்பிள் பாக்கெட் கூட கிடைக்கின்றது. அதை வாங்கி 1 பாக்கெட்டை, 1/2 பக்கெட் அளவு தண்ணீரில் கலந்து கொண்டால் கூட போதுமானது. நீங்கள் வீடு துடைக்க பயன்படுத்தும் உப்பு தண்ணீரில் கம்போர்ட் மற்றும் ஏதோ ஒரு கிருமிநாசினி இவை இரண்டையும் ஒன்றாக கலந்து வீட்டை சுத்தமாக துடைத்து விடுங்கள்.

- Advertisement -

இதன் மூலம் உங்களுடைய வீடும் எப்போதும் நறுமணமாக இருக்கும். உப்பு தண்ணீரால் ஏற்படக்கூடிய கறை என்பது தரையில் பிடிக்காது. கம்போர்ட் லிக்விடை உங்களுடைய தண்ணீரில் கலந்து இருப்பதால், லேசாக கொழுப்பு தரையில் இருப்பது போல ஒரு தன்மை இருக்கும். ஆகவே, உங்களுக்கு சிரமம் என்னவென்றால் இரண்டாவது முறை சாதாரண தண்ணீரை கொண்டு உங்களது தரையை மாப் போட வேண்டியதுதான்.

mop1

இது கொஞ்சம் சிரமமான விஷயம் தான். இருப்பினும் வாரத்திற்கு ஒரு முறை இப்படி உங்களுடைய தரையைத் துடைத்து விட்டால் கூட போதும். உப்புத்தண்ணீர் தரையில் படாமல், உங்களது தரை பளபளப்பாக மெயின்டெயின் ஆகும். புரிந்தது அல்லவா? முதலில் கம்ஃபோர்ட், லைசால் கலந்த தண்ணீர். அடுத்தபடியாக வெறும் தண்ணீரில் துடைக்கவேண்டும். கொஞ்சம் சோம்பேறித்தனம் இல்லாமல் ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -

bresh

அடுத்தபடியாக உங்கள் வீட்டு குளியலறையில், நீங்கள் கைகளால் துணிகளை துவைத்து, அழுக்குத் துணி அலசிய தண்ணீரை ஊற்றினாலும் சரி, அல்லது வாஷிங் மெஷின் அலசி தண்ணீரை உங்களது குளியலறையில் வெளி விட்டாலும் சரி, குளியலறை தரை மொத்தமும் சோப்பு தண்ணீரும், உப்பும் தண்ணீரும் படிந்து கொழகொழவென்று மாறிவிடும்.

bresh1

இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், துணிகளை துவைத்து முடித்தவுடன் அல்லது உங்கள் வீட்டு வாஷிங்மெஷின் துணிகளை துவைத்து முடித்த உடனேயே, அந்த பாத்ரூம் சுத்தம் செய்ய வேண்டும். அந்தத் தண்ணீர் தரையிலேயே காய்ந்தால் தான் கறை படியும். அழுக்குத் தண்ணீர் தரையில் ஊறி உளர்வதற்கு முன்பாகவே, சுத்தம் செய்து விடுங்கள். நம் குளிக்கப் பயன்படுத்தும் கப்பில் 1/2 கப் அளவு தண்ணீர் எடுத்துக்கொள்ளுங்கள். அதில் 1/2 மூடி லைசாலை ஊற்றி, நன்றாக கலக்கி குளியலறையில் உள்ள தரையில் ஊற்றி விடுங்கள்.

bresh2

இப்போது டாய்லெட் சுத்தம் செய்யும் பிரஷ் போலவே, ஒன்றை குளியலறை தரை சுத்தம் செய்வதற்காக தனியாக வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். இந்த ப்ரஷை கொண்டு உங்களது தரையை நன்றாகத் தேய்த்து, வெறும் 5 நிமிடங்கள் மட்டும் ஊற வைத்துவிட்டு, அதன் பின்பு மீண்டும் அந்த பிரஷ் வைத்து தேய்த்து கழுவி விட்டால் உங்களது தரை எப்போதுமே உப்பு தண்ணீர் கறை படாமல், அழுக்கு படியாமல் சுத்தமாக இருக்கும் ட்ரை பண்ணி பாருங்க.

இதையும் படிக்கலாமே
மழைக்காலத்தில் துணிகளை காயப்போட இப்படியும் ஒரு வழி உள்ளதா? இவ்ளோ நாளா இது தெரியாம போச்சே!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -