தொடர்ந்து வீட்டில் சண்டை சச்சரவுகளும், காரிய தடையும் அதனால் மன கஷ்டமும் இருந்து வருகிறதா? இதை சரியாக செய்தால் மொத்தமாக பிரச்சனைகள் அனைத்தையும் விலகச்செய்ய முடியும்.

bairavar
- Advertisement -

மனிதர்களுக்கு அன்றாட வாழ்வில் ஏதோ ஒரு பிரச்சனை இருந்துகொண்டே தான் இருக்கிறது. அதற்கு ஏற்றவாறு நாமும் ஏதாவது ஒரு வழிபாட்டு முறையையே அல்லது பிரகாரத்தையோ செய்து வருகிறோம். அந்த வகையில் பலரும் சந்திக்கக்கூடிய நான்கு பிரச்சனைகளான காரிய தடை, சண்டை சச்சரவு, மன கஷ்டம் மற்றும் எதிர்மறை ஆற்றல் போன்றவற்றில் இருந்து விடுபட தனித்தனியாக அதற்கேற்ற பரிகாரத்தை இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள்.

காரிய தடை நீங்க:
நாம் செய்கின்ற செயல்களில் தொடர்ந்து தடங்கல்கள் வரும் பொழுது, நாம் இந்த பரிகாரத்தை செய்யலாம். இதற்காக நாம் நம் வீட்டில் இருந்து சிறிது கல் உப்பையும் மிளகையும் எடுத்துக்கொண்டு அருகில் இருக்கும் அம்மன் ஆலயத்திற்கு செல்ல வேண்டும். அங்கு இருக்கும் திரிசூலத்தின் அடியில் இந்த உப்பையும் மிளகையும் போட வேண்டும். பிறகு சிறிது மஞ்சள் தூளையும் குங்குமத்தையும் அதில் போட வேண்டும்.

- Advertisement -

சிலருக்கு இவ்வாறு செய்வது பழக்கம் இல்லாமல் இருக்கும் பட்சத்தில், அவர்கள் நான்கு எலுமிச்சம் பழங்களை எடுத்துக் கொண்டு அம்மன் ஆலயத்திற்கு சென்று மஞ்சள் குங்குமத்தை திரிசூலத்திற்கு வைத்து அதில் இரண்டு பக்கத்திலும் ஓவ்வொரு எலுமிச்சையை செருகி விட்டு நடுவில் மட்டும் இரண்டு எலுமிச்சையை சொருக வேண்டும். பிறகு, காரிய தடை நீங்க வேண்டும் என்று அம்மனை மனதார வேண்டிக்கொண்டு நடுவில் இருக்கும் ஒரு எலுமிச்சம் பழத்தை மட்டும் எடுத்துக் கொண்டு வந்து வீட்டு வாசலில் கட்டிவிட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் நம்முடைய காரியங்களில் இருக்கக்கூடிய தடைகள் அனைத்தும் விலகும்.

சண்டை சச்சரவுகள் நீங்க:
வீட்டில் அடிக்கடி சண்டை சச்சரவுகள் ஏற்படுகிறது எனும்பொழுது, நாம் நம் வீட்டிற்கு அருகில் இருக்கும் ஆலயத்திற்கு சென்று அங்கு கிடைக்கக்கூடிய அபிஷேக தீர்த்தத்தை வாங்கி வந்து வீட்டில் இருக்கும் அனைத்து அறைகளிலும் அந்த தெய்வத்தின் பெயரை உச்சரித்தபடி தெளிக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து 108 நாட்கள் நாம் செய்து வர வீட்டில் சண்டை சச்சரவுகள் நீங்கி மகிழ்ச்சி பெருகும்.

- Advertisement -

எதிர்மறை ஆற்றல் அகல:
நம் வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல் அகல்வதற்கு பைரவரே உதவி புரிவார். பைரவரை நினைத்து தினமும் மாலை வேளையில் தலை வாசலுக்கு வெளியே சிவப்பு நிற திரியை போட்டு இரண்டு அகல்விளக்குகளை ஏற்ற வேண்டும். இதன் மூலம் நம் வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல்கள் அனைத்தும் விலகும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

மன கஷ்டங்கள் அகல:
மனதில் ஏதாவது ஒரு விஷயத்தை நினைத்து கலக்கம் அடைந்து கொண்டே இருப்பவர்கள், பூஜை அறையில் பஞ்ச பாத்திரத்தில் இருக்கும் தீர்த்தத்தை தன் கைகளில் ஊற்றி “ஓம் சௌபாக்கியவதியே நமஹ” என்று 11 முறை கூறி அந்த தீர்த்தத்தை குடிக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் மனதில் இருக்கக்கூடிய கஷ்டங்களும், சஞ்சலகங்களும் விலகும்.

- Advertisement -