கர்பரக்ஷாம்பிகை 108 போற்றி

aadi-amman-1
- Advertisement -

குழந்தையை பெற்றெடுத்த பின்பு தான் எல்லா பெண்களும் தாங்கள் இறைவனால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாக உணர்கின்றனர். பழங்காலத்தில் அமைதியான வாழ்க்கை, நல்ல சத்தான உணவுகளை உண்ட நம் நாட்டு பெண்கள் ஆரோக்கியமான குழந்தைகளை பெற்றெடுத்தனர். ஆனால் இக்காலங்களில் பெண்கள் பலருக்கு குழந்தை பிறக்காத நிலை ஏற்படுகிறது. அதிலும் சில பெண்களுக்கு உடல் நல குறைபாடுகளாலும், எதிர்பாராத நிகழ்வுகளாலும் கருச்சிதைவு உண்டாகிறது. இப்படிப்பட்டவர்கள் வழிபட வேண்டிய ஸ்ரீ கர்பரக்ஷாம்பிகை போற்றி மந்திரம் இது.

amman

திருக்கருகாவூர் கர்ப்பரக்ஷாம்பிகை 108 போற்றி

ஓம் கருகாக்கும் நாயகியே போற்றி
ஓம் கர்ப்ப ரக்ஷாம்பிகையே போற்றி
ஓம் கருகாவூர் தேவியே போற்றி
ஓம் கஷ்டங்கள் தீர்ப்பாய் போற்றி
ஓம் ஈஸ்வரனின் இதயக்கனியே போற்றி
ஓம் கருகாவூர் எந்தையின் கண்மணியே போற்றி
ஓம் முல்லைவனநாதரின் சுந்தரியே போற்றி
ஓம் மூவுலகும் காக்கும் அன்னையே போற்றி

- Advertisement -

ஓம் மைந்தன் வேண்ட வரம் தருவாய் போற்றி
ஓம் மாதர் மனம் மகிழ்ச் செய்வாய் போற்றி
ஓம் எங்கும் தீராத குறை தீர்ப்பவளே போற்றி
ஓம் எங்களை என்றும் காப்பவளே போற்றி
ஓம் பிள்ளைக் கலி தீர்க்கும்பேரொளியே போற்றி
ஓம் பிறவிப் பயன் தந்து அருள்வாய் போற்றி
ஓம் பிண்டமாய் இருக்கும் கருவளர்ப்பாய் போற்றி
ஓம் பிரம்மனின் படைப்புக்கு உயிர் தருவாய் போற்றி

vekkali amman

ஓம் முல்லைவனத்தில் அரசாள்வாய் போற்றி
ஓம் நித்திருவர் தொழுத நித்திலமே போற்றி
ஓம் நற்றவத்திற்கு அருளும் நாயகியே போற்றி
ஓம் நாடிவரும் பக்தர் துயர்களைவாய் போற்றி
ஓம் சர்வ வல்லமை பெற்ற ஈஸ்வரியே போற்றி
ஓம் சர்வேஸ்வரனின் சரிபாதியே போற்றி
ஓம் சங்கடங்கள் தீர்க்கும் சங்கரியே போற்றி
ஓம் சார்ந்து நிற்போரை ரஷிப்பாய் போற்றி
ஓம் பெண்கள் கருவறையை காப்பவளே போற்றி
ஓம் பிரியமுடன் எங்களை வாழ்த்துவாய் போற்றி
ஓம் பாதியில் கலையாத கரு தந்தாய் போற்றி
ஓம் பாரினில் மகிழ்வான் வாழ்வளிப்பாய் போற்றி

- Advertisement -

ஓம் நெய்யாலே படிமெழுக நீ மகிழ்வாய் போற்றி
ஓம் மெய்யான பக்திக்கு உருகிடுவாய் போற்றி
ஓம் தூய்மையுடன் வணங்குவோர் துயர்துடைப்பாய் போற்றி
ஓம் வாய்மையுடன் வரம் தந்து வளம் தருவாய் போற்றி
ஓம் வேதிகைக்கு அருள் சுரந்த அன்னையே போற்றி
ஓம் வேண்டுபவர் அருகினில் வந்திடுவாய் போற்றி
ஓம் வனிதையரின் வாழ்விற்கு வரமாளாய் போற்றி
ஓம் வாழ்நாளில் வழிகாட்டும் வடிவழகே போற்றி
ஓம் கலைந்த கர்ப்பம் உருவாக்கி உயிர் கொடுத்தாய் போற்றி
ஓம் காமதேனு அழைத்து தாய்ப்பால் தந்தாய் போற்றி
ஓம் தம்பதியாய் வருவோர்க்கு தஞ்சமளிப்பாய் போற்றி
ஓம் தாயே உன் அருள் என்றும் தர வேண்டும் போற்றி

ஓம் வலக்கரத்தால் அபயமளிக்கும் வனிதாமணியே போற்றி
ஓம் இடக்கரத்தால் கர்ப்பத்தைக் காத்து நிற்ப்பாய் போற்றி
ஓம் பத்ம பீடத்தில் அமர்ந்திருக்கும் பார்வதியே போற்றி
ஓம் பிரசவத்தில் துணையிருக்கும் பெரிய நாயகியே போற்றி
ஓம் கருகாமல் கருகாக்கும் கண்மணியே போற்றி
ஓம் கர்ப்புரியில் வசிக்கும் கற்பகமே போற்றி
ஓம் அகில உலகம் காக்கும் லோகநாயகியே போற்றி
ஓம் அன்னை என்ற அருள் தந்து துயர்தீர்ப்பாய் போற்றி
ஓம் மாதவிவநேச்வரரின் மாதரசியே போற்றி
ஓம் முல்லைக் கொடி இடையே வந்த மெல்லியனே போற்றி
ஓம் ஈஸ்வரனின் இதயத்தில் வீற்றிருப்பாய் போற்றி
ஓம் ஈரேழு லோகத்தையும் என்றும் காப்பாய் போற்றி

- Advertisement -

ஓம் கடம்பவன சுந்தரியே கற்புக்கரசியே போற்றி
ஓம் காலம் பூராவும் கர்ப்பை காப்பவளே போற்றி
ஓம் கல்லாக நின்று கருணைபொழிவாய் போற்றி
ஓம் கதிரொளியே கனகமே கண்மணியே போற்றி
ஓம் மலடி என்ற பெயர் நீக்கும் மங்களமே போற்றி
ஓம் மங்கையர்க்கு அருகிலிருக்கும் மந்திரமே போற்றி
ஓம் மருத்துவர்க்கும் சக்தி தரும் மாதவியே போற்றி
ஓம் மறுமையிலும் உடனிருந்தும் மகிழ்விப்பாய் போற்றி
ஓம் அசையும் கருவை அலுங்காமல் காப்பாய் போற்றி
ஓம் அகிலத்தின் இயக்கத்தில் ஆனந்திப்பாய் போற்றி
ஓம் அம்மா என்றுன்னை ஆராதிப்பேன் போற்றி
ஓம் அம்மாவாய் என்னை ஆக்கினாய் போற்றி

anuman-amman

ஓம் மகேஸ்வரி உலகையே ஆள்கிறாய் போற்றி
ஓம் மங்கலங்கள் பல தரும் மாதாவே போற்றி
ஓம் ஸ்ரீ சக்ர வாசினி ஸ்திரீ தனமே போற்றி
ஓம் சத்ரு பயம் நீங்க சரண்டைந்தேன் போற்றி
ஓம் பிள்ளையில்லா தவிப்புக்கு பிரசாதமளிப்பாய் போற்றி
ஓம் பிரபஞ்சத்தில் பெண்களை காப்பவளே போற்றி
ஓம் பகவானின் ப்ரீதியே பரதேவதையே போற்றி
ஓம் லிரத்யனாமாய் என்னுடன் இருப்பவளே போற்றி
ஓம் உற்சாகமாய் தோன்றும் கர்ப்பம் காப்பாய் போற்றி
ஓம் ஓழுங்காய் என் பிள்ளை பிறக்கச் செய்வாய் போற்றி
ஓம் உன்னையன்றி யாருமில்லை சரணடைந்தேன் போற்றி
ஓம் ஊரார் மெச்ச நான் வாழ வாழ்த்துவாய் போற்றி
ஓம் காந்த கண்ணழகி முத்துப்போல் பல்லழகியே போற்றி
ஓம் மின்னும் மூக்கழகி புன் முறுவற் சிரிப்பழகி போற்றி
ஓம் சொர்ணமும், வைரமும் மின்ன ஜொலிக்கும் அழகியே போற்றி
ஓம் ஒய்யார வடிவழகி அருள் மணக்கும் பேரழகியே போற்றி
ஓம் துக்கங்கள் தீர்க்கும் துணையே போற்றி
ஓம் துன்பமில்லாத வாழ்வருளும் தேவியே போற்றி
ஓம் சங்கடம் தீர்க்கும் சங்கரியே போற்றி
ஓம் சலனமில்லா வாழ்வருளும் சாம்பவியே போற்றி

ஓம் மழலைச் செல்வம் தர மனமிரங்குவாய் போற்றி
ஓம் மாதர்க்கு நீ என்றும் அரணாவாய் போற்றி
ஓம் கதியென்று நம்பினவருக்கு கருணைசெய்வாய் போற்றி
ஓம் கண்டவுடன் கஷ்டம் தீர்க்கும் கெளரியே போற்றி
ஓம் நெஞ்சிற் கவலைகள் நீக்குவாய் போற்றி
ஓம் செஞ்சுடர் குங்குமம் தரித்தாய் போற்றி
ஓம் அஞ்சுமென் மனத்துக்கு ஆறுதலே போற்றி
ஓம் தஞ்சம் நீயே தாமரையே போற்றி
ஓம் சக்தியின் வடிவமே போற்றி
ஓம் பக்தியுடன் தொழுவோரின் பரதேவி போற்றி
ஓம் நித்தமுன் அருள்வேண்டி நமஸ்கரித்தேன் போற்றி
ஓம் நீயிருக்க பூவுலகில் பயமில்லை போற்றி

amman

ஓம் மனமெல்லாம் நீ நிறைந்தாய் மகேஸ்வரி போற்றி
ஓம் மங்கள வாழ்வுதந்து மகிழ்விப்பாய் போற்றி
ஓம் மங்கையரின் கர்ப்பை காக்கின்றாய் போற்றி
ஓம் கருகாவூர் அரசியே கருணாரசமே போற்றி
ஓம் தலைமுறை தழைக்கச் செய்யும் தாயே போற்றி
ஓம் குலம் வாழ மகருளும் மாதே போற்றி
ஓம் சகலரும் உன் சக்தி சார்ந்தோம் போற்றி
ஓம் சோர்வு நீங்க உன் பாதம் சரணடைந்தோம் போற்றி
ஓம் ஜயம் வேண்டும் ஜயம் வேண்டும் போற்றி
ஓம் ஜகத்தினில் எங்கள் சக்தி ஓங்க வேண்டும் போற்றி
ஓம் ஜீவனை ஜனிக்க வைக்கும் ஜகன்மாதா போற்றி
ஓம் ஜயமங்களம் ஜயமங்களம் ஜனனியே போற்றி

கருவில் இருக்கும் குழந்தையை காக்கும் “ஸ்ரீ கர்பரக்ஷாம்பிகையின்” 108 போற்றி துதிகளை கருவுற்றிருக்கும் பெண்கள் மற்றும் குழந்தை பிறக்க வேண்டுகிற பெண்கள் வெள்ளிக்கிழமைகளில் காலை மற்றும் மாலை வேளைகளில் பூஜையறையில் நெய்தீபங்கள் ஏற்றி, கர்பரக்ஷாம்பிகையை மனதில் தியானித்து இந்த 108 போற்றி துதிகளை கூறி வந்தால் பெண்களுக்கு கருச்சிதைவு, பிரசவ கால வேதனைகள், அறுவை சிகிச்சை பிரசவம் போன்றவை இல்லாமல் சுகப்பிரசவம் ஏற்படும். அதே நேரத்தில் ஆரோக்கியமான, உடல் குறைபாடுகள் இல்லாத மற்றும் நோய்,நொடிகளற்ற குழந்தைகள் அப்பெண்களுக்கு அம்பிகையின் அருளால் பிறக்கும். இந்த 108 துதிகளை திருமணமான பெண்களின் கணவர்கள், அப்பெண்களின் தாய் – தந்தையர், மாமனார் – மாமியார் போன்றோரும் துதிப்பது இன்னும் சிறந்த பலனை தரும்.

Amman

எந்த ஒரு கணவன் மனைவிக்கும் குழந்தை பேறு எனும் மிக சிறந்த வரம் அவர்களின் முன்வினை பயன்களுக்கு ஏற்றவாறே அமைகிறது என்பது சமய பெரியோர்களின் கருத்தாக உள்ளது. தன் வயிற்றில் கருவை சுமந்து, பத்து மாதங்கள் கழித்து குழந்தையாக பெற்றடுப்பது என்பது பெண்களுக்கென்றே இறைவன் கொடுத்த வரமாகும். ஆனால் இன்று பல தம்பதிக்கும் குழந்தை பேறு இல்லாத நிலை இருக்கிறது. கருச்சிதைவு, அறுவை சிகிச்சையின் மூலம் பிரசவம், குறைபாடுகளுடன் குழந்தைகள் பிறத்தல் போன்றவை கர்பரக்ஷாம்பிகையின் இந்த மந்திர துதியை படிப்பதால் நீங்கும்.

இதையும் படிக்கலாமே:
பைரவர் துதி

இது போன்ற மேலும் பல சுவாரஸ்யமான மந்திரங்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்.

English overview:
Here we have Garbarakshambigai 108 potri in Tamil or 108 Garbarakshambigai potri in Tamil. It is also called as Garbarakshambigai potri lyrics in Tamil or Garbarakshambigai mantra in Tamil or Garbarakshambigai slogam in Tamil

- Advertisement -