நல்ல மாற்றங்கள் ஏற்பட முருகன் மந்திரம்

murugan manthiram
- Advertisement -

நம்முடைய ஒவ்வொரு முயற்சிக்கு பின்னால் இருக்கக்கூடியது ஏதாவது ஒரு நல்லது நம் வாழ்வில் நடக்காதா? என்பதுதான். அப்படி நம் வாழ்வில் நல்லது நடக்க வேண்டும் என்றால் நம்முடைய முயற்சியோடு முருகப்பெருமானின் அருளும் நமக்கு பரிபூரணமாக வேண்டும். அப்படி முருகப்பெருமானின் அருளை பெற்று நல்ல ஒரு மாற்றம் நம்முடைய வாழ்க்கையில் ஏற்படுவதற்கு எந்த மந்திரத்தை கூறி வழிபட வேண்டும் என்று தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் ஏற்பட மந்திரம்

நினைத்தது நிறைவேற வேண்டும் என்றாலோ, நல்ல மாற்றங்கள் நம்முடைய வாழ்க்கையில் ஏற்பட வேண்டும் என்றாலோ நாம் முருகப்பெருமானை வழிபட வேண்டும். முருகப்பெருமானை பல வழிகளில் நாம் வழிபட்டாலும் அவருடைய மந்திரத்தை கூறி வழிபடுவது என்பது மிகவும் சிறப்பு. அப்படிப்பட்ட ஒரு மந்திரத்தை பற்றி தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

பிரச்சினைக்கும் மேல் பிரச்சினையாகவே வந்து கொண்டிருக்கிறது, எதற்கெடுத்தாலும் தோல்விகளையே அடைகிறோம், எந்த முயற்சியிலும் வெற்றிகள் ஏற்படுவதில்லை, நினைப்பது நடக்கவில்லை என்று பல மன போராட்டங்களில் மாட்டிக்கொண்டு தவிப்பார்கள் முருகப் பெருமானுக்குரிய இந்த ஒரு மந்திரத்தை கூறி வழிபட அவர்களுடைய வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் ஏற்படும்.

இந்த மந்திரத்தை தினமும் உச்சரிக்கலாம். அப்படி தினமும் உச்சரிக்க முடியாது என்று நினைப்பவர்கள் செவ்வாய்க்கிழமை மட்டுமாவது இந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். இந்த மந்திரத்திற்கு சத்ர பந்த மந்திரம் என்று பெயர். செவ்வாய்க்கிழமை அன்று காலையிலேயே எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு வீட்டு பூஜை அறையில் இருக்கக்கூடிய முருகப் பெருமானின் படத்தை சுத்தம் செய்து அவருக்கு சந்தனம் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

பிறகு அவருக்கு செவ்வரளி பூக்களால் மாலை சூட்டி ஒரு நெய் தீபத்தை ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள். இப்படி செய்து முடித்த பிறகு முருகப்பெருமானுக்கு ஏதாவது ஒரு நெய்வேத்தியத்தை வைக்க வேண்டும். வாழைப்பழத்தை மட்டுமாவது நெய்வேத்தியமாக வைக்க வேண்டும். பிறகு அவருக்கு முன்பாக அமர்ந்து இந்த மந்திரத்தை கூற வேண்டும்.

மந்திரம்
வாலவே தாந்தபா வாசம்போ கத்தன்பா
மாலைபூ ணேமதிற மால் வலர்தே – சாலவ
மாபாசம் போக மதி தேசார் மாபூதம்
வா பாதந் தாவேல வா.

- Advertisement -

இந்த மந்திரத்தின் பொருள் தூயவனே, வேதாந்த விலாசக் கடவுளே பேரின்பம் என்னும் அனுபவத்திற்கு நாயகனே மாலைகளை அணியும் செம்பொன்னெனத் திகழ்பவனே, வன்மை சான்ற திருமாலுக்கும் வல்லவர்களுக்கும் கடவுளானவனே என்னகத்தே மிகுந்துள்ள பயனின்மையும், பெரிய ஆணவாதி பந்தங்களும் ஒழிய, ஞானமும் புகழும் உள்ள பரமான்மாவே வந்தருள்க திருவடிச் செல்வத்தை தந்தருள்க.

இயன்றவர்கள் இந்த மந்திரத்தை தினமும் 27 முறை உச்சரிக்க சிறந்த பலன் கிடைக்கும். இயலாத பட்சத்தில் செவ்வாய்க்கிழமை மட்டுமாவது 27 முறை உச்சரித்து வழிபட முருகப்பெருமானின் அருளால் வாழ்க்கையில் நடக்கக்கூடிய அனைத்தும் நல்லவையாகவே நடைபெறும்.

இதையும் படிக்கலாமே: சுபகாரிய தடை நீங்க தீபம் ஏற்றும் முறை

இந்த மந்திர வழிபாட்டை முழு நம்பிக்கையுடன் மேற்கொள்பவர்களுடைய வாழ்க்கையில் நடக்கும் அனைத்து விஷயங்களும் நல்லவையாகவே வந்தடையும்.

- Advertisement -