வேண்டிய வரங்களை பெற, கடன் தொல்லையிலிருந்து விடுபட, கருடாழ்வாரை முறைப்படி எந்த மந்திரத்தை சொல்லி எப்படி வழிபட வேண்டும்.

garudan-mantra
- Advertisement -

பொதுவாகவே எந்த கோவிலுக்கு சென்றாலும் விநாயகரை தான் முதலில் வழிபட வேண்டும். அதேபோல் பெருமாள் கோவிலுக்கு சென்றோம் என்றால் முதலில் கருட பகவானை வணங்க வேண்டும் என்பது பலருக்கும் தெரிவதில்லை. பெருமாளை தரிசனம் செய்வதற்கு முன்னர் கருடாழ்வாரை தரிசித்து வணங்கி விட்டு பின்னர் தான் திருமாலை வணங்க வேண்டும் என்று சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ளன. கருடாழ்வாரை வணங்குவதால் தீராத கஷ்டங்கள் தீர்ந்து நல்ல பலன்கள் கிடைக்கும். இவ்வாறான கருட பகவானை எந்த கிழமைகளில் வணங்கினால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப்போகின்றோம்.

பெரும்பாலும் கோவில்களில் கும்பாபிஷேகம் நடைபெறும் தினங்களில் முதலில் கருட பகவானின் அருளை எதிர் பார்த்தே அனைவரும் காத்திருப்பார்கள். சரியாக கருடபகவான் கோபுரத்தின் உச்சியின் நேரே வந்து நமக்கு காட்சி அளித்து ஆசீர்வதித்து செல்வார். அதன் பின்னரே பூஜைகள் நடைபெறும். அதே போல் வானத்தில் வட்டமடிக்கும் கருட பகவானை நாம் தரிசிக்க நேர்ந்தால் நமக்கு பலவிதமான நன்மைகள் உண்டாகும். இத்தனை சிறப்பு மிக்க கருட பகவானை கருட மந்திரம் சொல்லி பூஜித்து வர பல பலன்கள் கிடைக்கும்.

- Advertisement -

கருட மந்திரம்:
“ஓம் ஸ்ரீ காருண்யாய கருடாய வேத ரூபாய
ஈனாத புத்ராய விஷ்ணு பக்தி பிரியா ய அம்ருத
கலச ஹஸ்தாய ஹூ பராக்ரமாய பசி ராஜாய
சர்வ வக்கிர நாச நாய சர்வ தோஷ சர்ப்ப தோஷ
விஷ சர்ப்ப விநாசநாய ஸ்வாஹா”

garuda-bagavan

எப்பொழுதும் கருடனை பூஜிக்கும் பொழுது இந்த மந்திரத்தை சொல்லி பூஜிக்க வேண்டும். தினமும் காலை 11 முறை, மதியம் 11 முறை, இரவு 11 முறை என்று முப்பத்து மூன்று முறைகள் சொல்லி வர உங்களுக்கு வேண்டிய பலன்கள் கிடைக்கும்.

- Advertisement -

கருட பூஜை பலன்:
ஒருவருக்கு இருக்கும் தீராத உடல் உபாதைகள் தீர வேண்டுமென்றால் ஞாயிற்றுக்கிழமைகளில் கருட பகவானை வழிபட வேண்டும்.

garuda-bagavan1

குடும்பத்திலுள்ள சண்டை சச்சரவுகள் தீர்ந்து சந்தோஷம் நிலைக்க வேண்டுமென்றால் திங்கட்கிழமை தினத்தில் கருடாழ்வாரை வணங்குவதென்பது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும்.

- Advertisement -

உடல் உறுதியும், பிரச்சினைகளை சமாளிக்கும் மன உறுதியும் வேண்டும் என்றால் செவ்வாய்க்கிழமையில் கருட பகவானை வழிபட்டு வருதல் நல்ல பலன்களைக் கொடுக்கும்.

garudan

எதிரிகளின் தொல்லைகளிலிருந்து விடுபடவும், பயத்தின் பிடியில் இருந்து விடுபடவும் புதன்கிழமை தினத்தில் கருடாழ்வாரை வணங்குவது மிகவும் சிறந்ததாக அமையும்.

ஆயுள் தோஷம் உள்ளவர்களும் நீண்ட ஆயுளை பெறுவதற்கு வியாழக்கிழமை தோறும் கருட பகவானை வழிபட்டு வருவதன் மூலம் நல்ல பலனை உண்டாகும்.

Garudan

வீட்டில் இருக்கும் கடன் பிரச்சனைகள் தீர்ந்து பண வரவு உண்டாக வெள்ளிக்கிழமை தோறும் கருடாழ்வாரை வணங்கி வருதல் நல்ல பலனை உங்களுக்கு கொடுக்கும்.

மோட்சம் பெற்று சொர்க்கத்தை அடைய வேண்டுமென்று எண்ணுபவர்கள் சனிக்கிழமை தோறும் தவறாமல் கருட மந்திரம் சொல்லி கருடனை பூஜித்து வந்தால் உங்கள் எண்ணம் நிச்சயம் நிறைவேறும்.

Garudan

இப்படியாக உங்களுக்கு இருக்கக் கூடிய பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும் கருட பகவானை வழிபடலாம். தினமும் கருட மந்திரம் சொல்லி கருட பகவானை வழிபட்டு வந்தீர்கள் என்றால் எப்பேர்பட்ட பிரச்சனையாக இருந்தாலும் அது ஒரு துரும்பு போல உங்களை விட்டு விலகி விடும்.

- Advertisement -