நாளை குபேர அமாவாசையில் செய்ய வேண்டிய தாந்திரீக பரிகாரம்

gubera
- Advertisement -

நாளை இந்த ஆங்கில வருடத்தின் முதல் அமாவாசை வரவிருக்கின்றது. மார்கழி மாதத்தில் வந்திருக்கக்கூடிய சிறப்புமிக்க அமாவாசை. இதில் இன்னும் அற்புதம் என்ன என்றால் வியாழக்கிழமையோடு இந்த அமாவாசை சேர்ந்து வந்திருப்பதால் இதை குபேர அமாவாசை என்று சொல்கின்றோம். அது மட்டும் இல்லை நாளை ஹனுமான் பிறந்த மூல நட்சத்திரமும் சேர்ந்து வந்திருக்கிறது. ஹனுமன் ஜெயந்தி.

அமாவாசை திதி என்பதால் குலதெய்வத்தின் ஆசிர்வாதத்தையும் முன்னோர்களின் ஆசிர்வாதத்தையும் ஒரு சேரவும் நம்மால் இந்த நாளில் பெற முடியும். ஆக இத்தனை நேர்மறை ஆற்றலும் நிறைந்த இந்த சிறப்பு வாய்ந்த நாளில் நாம் செய்யக்கூடிய பரிகாரங்களும் வேண்டுதலும் பல மடங்கு பலனை கொடுக்கும். இந்த நாளை நாம் தவறு விடலாமா. கடன் பிரச்சனை தீரவும், பணப்பிரச்சனையிலிருந்து வெளிவரவும் நாளை செய்ய வேண்டிய எளிமையான ஆன்மீகம் சொல்லும் ஒரு தாந்திரீக பரிகாரத்தை தெரிந்து கொள்ள போகின்றோம்.

- Advertisement -

அமாவாசை தாந்த்ரீக பரிகாரம்

பொதுவாக அமாவாசை தினம் என்றால் காலையிலேயே வீட்டில் இருக்கும் பெண்கள் சுத்தமத்தமாக குளித்துவிட்டு, சுத்த பத்தமாக சமைக்க தொடங்கி விடுவீர்கள். ஆகவே வீடு சுத்த பத்தமாகத்தான் இருக்கும். பிரச்சினை கிடையாது. காலையிலேயே சமைத்து முடித்துவிட்டு வீட்டில் இருக்கும் ஆண்கள் முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய திதி தர்ப்பண காரியங்களை முறையாக முடித்து விடுங்கள். அதன் பிறகு இந்த தாந்திரீக வழிபாட்டை மேற்கொண்டால் போதும்.

11.1.2024 வியாழக்கிழமை அன்று மாலை 5:30 மணி வரை தான் இந்த அமாவாசை திதி இருக்கிறது. ஆகவே வியாழக்கிழமை காலை முன்னோர்கள் வழிபாட்டை முடித்துவிட்டு மதியம் 12.00 மணிக்கு மேல், மாலை 5 மணிக்கு முன்பாக இந்த பரிகாரத்தை செய்து முடித்து விடுங்கள். வியாழக்கிழமை சரியாக மாலை 5.00 மணிக்கு இந்த வழிபாட்டை செய்வது சிறப்பான பலனை கொடுக்கும்.

- Advertisement -

ஏனென்றால் வியாழக்கிழமை மாலை 5.00 மணியிலிருந்து இரவு 8.00 மணி வரை குபேரருக்கு சொந்தமான நேரமாக நமக்கு சொல்லப்பட்டுள்ளது. சரியாக 5.00 மணிக்கு இந்த பரிகாரத்தை செய்ய முடியவில்லை என்பவர்கள் நாளை மாலை 5 மணியிலிருந்து 8 மணிக்குள் செய்தாலும் தவறு கிடையாது.

பரிகாரத்திற்கு சதுர வடிவில் பச்சை நிற துணி தேவை. 1 ரூபாய் நாணயம் தேவை. பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்து விடுங்கள். வீட்டில் இருக்கும் ஆண்களும் இந்த பரிகாரத்தை செய்யலாம். பெண்களும் இந்த பரிகாரத்தை செய்யலாம். 1 ரூபாய் நாணயத்தை உள்ளம் கைகளில் வைத்துக்கொண்டு நேர்மறை ஆற்றல் நிறைந்திருக்கும் இந்த பிரபஞ்சத்தோடு ஒன்றிணைந்து மனதை ஒருநிலைப்படுத்தி இந்த 1 ரூபாயை வருமானம் பெருகுவதற்கு குபேரரிடம் முதலீடு செய்வதாக நினைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

உங்களுக்கு இருக்கும் கடன் பிரச்சனை சீக்கிரம் தீர வேண்டும். வருமானம் பல மடங்கு பெருக வேண்டும். வரக்கூடிய வருமானம் வீண் விரைய செலவுக்கு போகக்கூடாது. சேமிப்பு பல மடங்கு உயர வேண்டும், என்று நினைத்து இந்த ஒரு ரூபாயை அந்த பச்சை நிற துணியில் வைத்து, முடிச்சு போட்டுக் கொள்ளுங்கள்.

குபேரருக்கு திரு உருவப்படம் இருந்தால் அந்த படத்திற்கு முன்பாக இந்த முடிச்சை வைக்கலாம். இல்லை என்பவர்கள் மகாலட்சுமியின் பாதங்களில் இந்த முடிச்சை வைத்து விட்டு, பத்து நிமிடங்கள் கண்களை மூடி, ஆழ்மனதில் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். பிறகு இந்த முடிச்சை அப்படியே கொண்டு போய் பணம் வைக்கும் பெட்டியில் வைத்து விடுங்கள். அவ்வளவுதான்.

நிச்சயம் உங்களுடைய பிரச்சனைகளை எல்லாம் தீர்க்கக் கூடிய வேலையை இந்த பிரபஞ்சம் பார்த்துக் கொள்ளும். முழு நம்பிக்கையோடு இந்த ஒரு ரூபாயை பரிகாரத்திற்கு பயன்படுத்தனும். ஏதோ போன போக்கில் பரிகாரம் செய்தால் நிச்சயம் பலிக்காது. தாந்திரீக பரிகாரங்களில் நம்பிக்கை முதல் முதலீடு என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: பண வரவிற்கு அமாவாசை மிளகு பரிகாரம்

பீரோவில் வைத்த நாணயத்தை என்ன செய்வது. அடுத்த அமாவாசைக்கு இந்த நாணயத்தை கொண்டு போய் உங்க வீட்டு பக்கத்தில் இருக்கும் கோவில் உண்டியலில் போடலாம். நம்பிக்கை உள்ளவர்கள் ஆன்மீகம் சொன்ன இந்த எளிய தாந்திரீக பரிகாரத்தை பின்பற்றி பலன் பெறவும்.

- Advertisement -