உங்கள் வீட்டில் கண்ணாடியின் முன்பு இந்த 3 பொருட்களை வைத்தால் போதும். பொன், பொருள், தனம், தானியம் இவைகள் பல மடங்கு பெருகும். கடன் கண்ணை மூடிக் கொள்ளும்.

gubera
- Advertisement -

நம்முடைய வீட்டில் இருக்கும் கஷ்டங்கள் குறைய வேண்டும் என்றால் கடன் கண்ணை மூடிக்கொள்ள வேண்டும். கடன் என்ற வார்த்தையே நம் வீட்டிற்குள் நுழைய கூடாது. கடன் நம் வீட்டிற்குள் நுழையாமல் இருக்க வேண்டுமென்றால், நம்முடைய வீடு செல்வ செழிப்போடு இருக்க வேண்டும். வறுமையில் சிக்கிக் கொள்ளக் கூடாது. இதற்கு ஒரு சின்ன பரிகாரத்தை தான் இன்று நாம் பார்க்க போகிறோம்.

lakshmi-coins

ஒரு வீட்டில் செல்வவளம் நிறைவாக இருக்க வேண்டுமென்றால் பணம் அதிகரிக்க வேண்டும் என்றால் பணத்திற்கு அதிபதியான குபேரன் சிலை வீட்டில் கட்டாயம் இருக்க வேண்டும். ஒரு சிறிய கண்ணாடி கிண்ணத்தில் பச்சரிசி, அந்த பச்சரிசிக்கு மேலே 1 ரூபாய் நாணயம், அந்த நாணயத்திற்கு மேலே ஏதோ ஒரு தங்க ஆபரணம். சிறிய மூக்குத்தி அல்லது சிறிய திருகாணி இருந்தால் கூட போதும். உங்கள் வீட்டில் லக்ஷ்மி படம் பதிக்கப்பட்ட தங்க நாணயம் இருந்தால் மேலும் சிறப்பு.

- Advertisement -

இப்படி குபேர சிலைக்கு முன்பு சிறிய கண்ணாடி கிண்ணத்தில் பச்சரிசி, 1 ரூபாய் நாணயம், தங்க காசை வைத்து விட வேண்டும். இப்போது குபேரருக்கும், குபேரருக்கு முன்னால் பௌலில் வைக்கப்பட்டுள்ள பொருட்களுக்கும் முன்னால் ஒரு கண்ணாடியை வைக்க வேண்டும். அந்த கண்ணாடியில் குபேரனும் பிரகாசமாக தெரியவேண்டும். குபேரருக்கு முன்னால் பவுலும் பவுலில் உள்ள பொருட்களும் பிரகாசமாக பிரதிபலிக்க வேண்டும். அவ்வளவு தான். இந்த பொருட்கள், அந்த கண்ணாடியில் பிரதிபலித்து அதனுடைய பிம்பம் உங்களுடைய வீடு முழுவதும் பரவி இருக்கும். இந்த பிரகாசத்தின் வெளிச்சத்தை தாங்க முடியாமல் நிச்சயமாக கடன் தன்னுடைய கண்களை மூடிக் கொள்ளும்.

guberar

வீட்டில் இருக்கக் கூடிய வறுமை நீங்கும். வீட்டிற்கு பணவரவு அதிகரிக்கும். குறிப்பாக கடன் கண்களை மூடிக்கொள்ளும். கடன் வாங்க வேண்டிய அவசியம் உங்களுக்கு இருக்காது. நிம்மதியான ஒரு வாழ்க்கையை உங்களால் வாழ முடியும்.

- Advertisement -

ஆனால் இப்படி குபேரர் சிலையை உங்களுடைய வீட்டில் வைக்கும் போது திசையை மட்டும் கொஞ்சம் கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் வீட்டில் வைத்திருக்கும் குபேரரது சிலை வடக்கு திசை பார்த்தவாறு இருக்க வேண்டும். சரிங்க, எனக்கு குபேரர் சிலை மீது பரிகாரத்தின் மீது எல்லாம் நம்பிக்கை கிடையாது. கடவுள் நம்பிக்கை கிடையாது என்று நீங்கள் சொல்லுபவர்கள் ஆக இருந்தாலும் பரவாயில்லை.

ஒரு தட்டில் நிறைய சில்லறைக் காசுகளைக் கொட்டி விடுங்கள். அந்த சில்லரை காசுகள் பிரதிபலிக்கும் அளவிற்கு, அந்த சில்லரை காசுகளுக்கு எதிரே ஒரு கண்ணாடியை வைத்து விடுங்கள். இப்படி செய்தாலும் கண்ணாடியில் பிரதிபலிக்கும் சில்லரை காசுகளின் நேர்மறை ஆற்றல் உங்கள் வீடு முழுவதும் நிரம்பி இருக்கும்.

cash-box-mirror

தனியாக கிண்ணத்தில் சில்லரை காசுகளை வைத்து அதன் எதிரே கண்ணாடியை வைக்க முடியாது என்றால், டிரஸ்ஸிங் டேபிளுக்கு எதிர்ப்பக்கத்தில் ஒரு கிண்ணத்தில் சில்லரை காசுகளை நிரப்பி வைத்து விட்டால் கூட போதும். நேர்மறை ஆற்றலுக்கு உங்களுடைய வீட்டில் குறைவே இருக்காது.

guberar2

பரிகாரம் என்று நினைக்காமல் இதை ஒரு அழகுக்காக செய்தால் கூட நிச்சயமாக உங்கள் வீட்டில் நிறைய நல்ல பலன்களை பெறலாம். முயற்சி செய்து பாருங்கள். எந்த வீட்டில் சில்லரை காசுகள் கண்ணாடியில் பிரதிபலித்து, அந்த பிம்பம் வெளிப்படுகின்றதோ, அந்த வீட்டில் கடன் கண்ணை மூடிக்கொண்டு தான் இருக்கும், பொன் பொருள் தன தானியத்திற்க்கு ஒருபோதும் குறைவு வராது, என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -