குருவின் அருள் பெற வழிபாடு

guru pray
- Advertisement -

கிரகங்களில் ராஜகிரகம் என்று சொல்லப்படுபவர் தான் இந்த குரு பகவான். இவர் கலைகள் ஆம் கலைகள் 64ன்கும் நன்கு அறிந்தவர் ஆகவும், தேவர்களின் குருவாகவும் போற்றப்படுகிறார். அது மட்டும் இன்றி சிவபெருமானை நோக்கி கடும் தவம் புரிந்து கிரகங்களிலே ராஜ கிரகம் என பெயர் பெற்றதாக சொல்வதுண்டு. இவர் மங்களகாரகன் என்றும் போற்றப்படுகிறார்.

ஒருவர் வாழ்க்கையில் நல்ல துணை, பொன், பொருள், செல்வம், குழந்தை பாக்கியம், அறிவு, தொழில், படிப்பு என அனைத்தும் சிறப்பாக அமைய வேண்டும் என்றால் அவருக்கு நிச்சயம் குருவின் அனுகிரகம் தேவை. ஆகையால் தான் குரு பகவான் பார்த்தாலே நமக்கு நன்மைகள் கோடி தேடி வரும் என்று சொல்லி வைத்திருக்கிறார்கள்.

- Advertisement -

அப்படியான குரு பகவானை வணங்குவதற்கு வியாழக்கிழமை உகந்த நாளாக சொல்லப்படுகிறது. இந்த வியாழக்கிழமையில் குருவின் பரிபூரண அருளை பெற நாம் எப்படி அவரை வணங்க வேண்டும் என்பது பற்றி ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

குருவின் அருள் பெற

வியாழக்கிழமையில் இந்த வழிபாடு செய்பவர்கள் முதலில் அன்றைய தினத்தில் அசைவத்தை தவிர்த்து விட வேண்டும். வியாழக்கிழமை குருபகவானுக்கு எப்படி உகந்ததோ அதே போல் மகாவிஷ்ணுவிற்கும் அன்றைய தினம் உகந்தது. ஆகையால் இந்த இருவரையும் மனதார நினைத்து வீட்டின் பூஜையறையில் ஒரு நெய் தீபத்தை ஏற்றும் வழக்கத்தை வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

குருபகவானை வணங்க வாழை மரத்தடியில் சுத்தமான பசு நெய்யில்விளக்கேற்ற வேண்டும். இவருக்கு பிடித்த தானியமான கொண்டக்கடலையை நெய்வேத்தியமாக வைத்து வணங்குவது சிறந்தது. அதன் பிறகு அந்த வாழை மரத்திற்கு மஞ்சள் நிற கயிறு கட்டி ஏழு முறை மரத்தை வலம் வந்து வணங்க வேண்டும்.
குரு பகவானுக்கு மஞ்சள் நிறம் உகந்தது. ஆகையால் அன்றைய தினத்தில் மஞ்சள் நிற பூக்கள் மஞ்சள் நிறத்திலான இனிப்பு வகைகளை செய்து வைக்கலாம். நாமும் அன்றைய தினத்தில் மஞ்சள் நிறத்திலான வஸ்திரங்களை அணிய வேண்டும்.

ஓம் கிரம் க்ரீம் க்ரோம் குருவே நமஹ

என்ற இந்த மந்திரத்தை 108 முறை சொல்ல வேண்டும். இந்த மந்திரத்தை காலை மாலை இரண்டு நேரமும் பூஜை அறையில் விளக்கு ஏற்றி வழிபாடு செய்த பிறகு சொல்லி பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள். அன்றைய தினத்தில் வீட்டில் சமைத்த உணவை சாப்பிடுவது தான் நல்லது.

- Advertisement -

அது மட்டும் இன்றி அன்றைய நாளில் வயதான அந்தணர்கள் அல்லது பெரியவர்களுக்கு அன்னதானம் செய்வது சிறந்ததாகும். அதே போல முடிந்தால் அன்றைய தினத்தில் வயதானவர்களுக்கு மஞ்சள் நிறத்திலான ஆடையை வாங்கி கொடுங்கள். அது குருவின் அருளை பெறுவதோடு மகா விஷ்வின் அருளையும் பெற்று தரும்.

இதையும் படிக்கலாமே: இழந்த பணம் திரும்ப கிடைக்க ஆஞ்சநேயர் வழிபாடு

வியாழக்கிழமை குருபகவானையும் மகாவிஷ்ணுவையும் இது போல வழிபடுபவர்களை எல்லா செல்வ வளமும் தானாக தேடி வரும் என்று சொல்லப்படுகிறது. இந்த வழிபாட்டு முறைகளில் நம்பிக்கை இருப்பின் நம்பிக்கையுடன் செய்து நல்ல பலன்களை பெறுங்கள்.

- Advertisement -