இழந்த பணம் திரும்ப கிடைக்க ஆஞ்சநேயர் வழிபாடு

anjaneyar prayer
- Advertisement -

பணம் பத்தும் செய்யும் என்று கூறுவார்கள். ஒருவரிடம் பணம் இல்லாத பட்சத்தில் அவரின் நடவடிக்கை ஒரு மாதிரி இருக்கும். இதே அவரிடம் பணம் வந்து விட்டால் அவரின் நடவடிக்கை வேறொரு மாதிரி இருக்கும். இதற்கு காரணம் அவரிடம் வந்த பணமே. பணம் வந்ததும் பலரின் மன நிலையும் மாறிவிடும் என்பதால் தான் பணம் பத்தும் செய்யும் என்று கூறினார்கள். அப்படிப்பட்ட பணத்தை பிறருடைய நன்மைக்காக அவர்கள் கேட்கும் பொழுது உதவி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் கொடுத்துவிட்டு திரும்பப் பெற முடியாமல் கஷ்டப்படுபவர்கள் ஆஞ்சநேயரை எந்த முறையில் வழிபட கொடுத்த பணம் திரும்ப கிடைக்கும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

ஆபத் பாண்டவன், அனாத ரட்சகன் என்று போற்றப்படுபவர் ஆஞ்சநேயர் பகவான். மிகவும் வலிமை பொருந்தியவர் ஆக திகழக்கூடிய. இவரை நாம் ராமா என்ற இரண்டு எழுத்து சொல்லால் கூப்பிட்ட உடனேயே ஓடி வந்து நமக்கு உதவி செய்யக்கூடிய தெய்வமாக திகழ்கிறார். இந்த தெய்வத்தை நாம் பல வழிகளில் வழிபடலாம். ஒவ்வொரு தேவைகளுக்கும் ஒவ்வொரு விதமாக நாம் வழிபடும் பொழுது நம்முடைய தேவைகள் அனைத்தும் பூர்த்தியடையும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் இன்று நாம் கொடுத்த பணத்தை திரும்ப பெறுவதற்கு செய்யக்கூடிய வழிபாட்டை பற்றி பார்ப்போம்.

- Advertisement -

இந்த வழிபாட்டை செவ்வாய்க்கிழமை அன்று தான் செய்ய வேண்டும். அருகில் இருக்கக்கூடிய ஆஞ்சநேயர் கோவிலுக்கு செல்ல வேண்டும். அவ்வாறு செல்வதற்கு முன்பாக அன்றைய தினம் அரச மரத்தில் இருந்து 21 இலைகளை பறிக்க வேண்டும். பிறகு அந்த இலைகளை பன்னீரால் சுத்தம் செய்ய வேண்டும். பிறகு சுத்தமான துணியை வைத்து ஈரம் இல்லாமல் துடைத்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக ஆஞ்சநேயருக்கு மிகவும் உகந்த திலகமாக திகழக்கூடிய செந்தூரத்தை நம்முடைய மோதிர விரலில் எடுத்து ஒவ்வொரு இலையிலும் ராமா என்று எழுத வேண்டும்.

இப்படி எழுதிய பிறகு இந்த இலைகளை மாலையாக தொடுக்க வேண்டும். இப்படி நாம் மாலையை தயார் செய்த பிறகு இந்த மாலையை அருகில் இருக்கும் ஆஞ்சநேயர் கோவிலுக்கு எடுத்துச் சென்று ஆஞ்சநேயருக்கு கொடுத்துவிட்டு அவருக்கு இரண்டு நெய் தீபங்களை ஏற்றி வழிபட வேண்டும். இந்த முறையில் தொடர்ந்து எட்டு வாரங்கள் செவ்வாய்க்கிழமை தோறும் நாம் ஆஞ்சநேயரை வழிபட வேண்டும்.

- Advertisement -

எட்டாவது வாரம் ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் காப்பு சாற்றி தயிர் சாதத்தை நெய்வேத்தியமாக படைத்து வழிபாடு செய்ய வேண்டும். நெய்வேத்தியமாக படைத்த தயிர் சாதத்தை அங்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கி விட வேண்டும்.

இதையும் படிக்கலாமே: குபேர பஞ்சமி வழிபாடு

நம்பிக்கையுடன் ஆஞ்சநேயரை இந்த முறையில் நாம் வழிபட நமக்கு வரவே வராது என்று நினைத்த பணமும் வந்து சேரும்.

- Advertisement -