இந்த குரு பெயர்ச்சியில் அனைத்து ராசிக்காரர்களுமே யோகக்காரர்களாக மாற இந்த தானத்தை மறக்காமல் செய்து விட்டால் போதும். குரு பகவானின் பரிபூரண ஆசியை எளிதாக பெறலாம்.

- Advertisement -

ஒருவருடைய வாழ்க்கையில் குரு திசையானது வந்து விட்டால் அவர்கள் வாழ்க்கை மென்மேலும் உயரும் என்பது அனைவரும் அறிந்ததே. அது மட்டும் இன்றி குரு திசை அமைந்தால் பணம், வீடு, வாசல், உத்தியோகம் என அனைத்தையும் வழங்கும் யோகத்தை தந்தாலும், அதே அவர் இருக்கக் கூடாத கிரகத்திலிருந்தால் இவை அனைத்தையும் எதிர்மறையாகவும் செய்து விடுவார். இப்போது இந்த குரு பெயர்ச்சியால் யோகம் பெறும் ராசி அல்லது யோகம் பெறாத ராசி என யாராக இருந்தாலும் அனைவருமே இந்த ஒரு தானத்தை செய்யும் போது குருவின் ஆசியை பெறலாம். அது என்ன தானம் எப்படி செய்ய வேண்டும் என்பதையெல்லாம் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

குரு பெயர்ச்சியில் செய்ய வேண்டிய தானம்:
குரு பெயர்ச்சியில் வஸ்திர தானம் செய்வது மிக மிக நல்லது என்பது ஐதீகம். அதிலும் குரு பகவானுக்கு பிடித்த நிறம் மஞ்சள் அந்த நிறத்தில் வஸ்திரம் வாங்கி தானம் செய்தால் மேலும் விசேஷம். இப்போது இந்த வஸ்திர தானத்தை எப்படி செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்.

- Advertisement -

இந்த தானத்தை நம் சொந்தங்கள் உடன் பிறந்தவர்களுக்கு கொடுக்கக் கூடாது. முன் பின் அறியாத மிகவும் ஏழ்மை நிலையில் இருப்பவர்களுக்கு வஸ்திரத்தை தானமாக கொடுக்க வேண்டும். இந்த தானத்தை பெண்களுக்கு கொடுக்கும் போது புடவை ரவிக்கை என சேர்த்துக் கொடுக்க வேண்டும். இப்போதெல்லாம் புடவையிலே ரவிக்கை சேர்ந்து வருகிறது இருந்தாலும் நாம் தனியாக ஒன்று வாங்கி வைத்து தான் தர வேண்டும். அத்துடன் மங்கள் பொருட்கள் 11 ரூபாய் பணம் என அனைத்தையும் சேர்த்து தான் தர வேண்டும். அதே போல ஆண்களுக்கும் வேட்டி, சட்டை, துண்டு என்று சேர்த்து தான் கொடுக்க வேண்டும் தனியாக கொடுக்கக் கூடாது.

இந்த தானத்தை குறைந்தது மூன்று பேருக்காவது கொடுக்க வேண்டும். உங்களின் வசதிக்கேற்ப அதற்கு மேலும் செய்யலாம் இதில் தவறு கிடையாது. அதே போல் குழந்தைகளுக்கு இந்த வஸ்திர தானம் செய்தால் அது மிகப் பெரிய அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அவ்வாறு கொடுக்கும் போது குழந்தைகளுக்கு பிடித்த ஏதேனும் ஒரு இனிப்பையும் சேர்த்துக் கொடுங்கள்.

- Advertisement -

வஸ்திரம் வாங்கி கொடுக்க வசதி இல்லாதவர்கள் பெண்களாக இருந்தால் மற்ற பெண்களுக்கு நல்ல மனம் மிக்க பூக்களை வாங்கி தானமாக கொடுக்கலாம். கோவிலுக்கு பூ வாங்கி கொடுப்பது இதில் கணக்கில் வராது. வேறு பெண்களுக்கு வாங்கி கொடுப்பது தான் பரிகாரத்தில் சேரும்.

வீட்டில் ஏதேனும் இனிப்பை செய்து அதையும் பிறருக்கு தானமாக கொடுக்கலாம். இந்த பரிகாரத்திற்கு கடைகளில் வாங்கி கொடுக்கக் கூடாது. வீட்டில் நம் கைப்பட செய்த இனிப்பை தான் பிறருக்கு தானமாக வழங்க வேண்டும். அப்படி கொடுக்க முடியாதவர்கள் கோவிலுக்கு சென்று கோவிலுக்கு வருபவர்களுக்கு இனிப்பை தானமாக வழங்கலாம். இந்த இனிப்பு தானத்தை ஆண்கள் பெண்கள் என இருவருமே செய்யலாம்.

- Advertisement -

இந்த பரிகாரத்தை செய்யும் போது குரு பெயர்ச்சியினால் யோகத்தை பெறக்கூடிய ராசிக்காரர்கள் மேலும் யோகக்காரர்களாக மாறுவார்கள். இதையே அசுப யோகங்களை பெறக்கூடிய ராசிக்காரர்கள் செய்யும் போது அவர்களும் இந்த கிரகத் பாதிப்பிலிருந்து தங்களை காத்து கொள்ளலாம் என்பது தான் இந்த பரிகாரத்தின் முக்கிய அம்சமே.

இதையும் படிக்கலாமே: பெண்கள் இதை எல்லாம் தொடர்ச்சியாக செய்து வந்தாலே போதும். தாங்கள் மட்டும் அல்லாது தன் கணவன், குழந்தை என அனைவரையும் வாழ்க்கையில் முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்ல முடியும்.

இந்தப் பரிகார முறையில் நம்பிக்கை உள்ளவர்கள் வரும் குரு பெயர்ச்சியில் உங்களால் முடிந்த ஏதேனும் ஒரு பரிகாரத்தை செய்தால் இந்த குரு பெயர்ச்சியினால் உங்கள் வாழ்க்கை மேன்மேலும் உயர்ந்து யோகத்தை பெற்று நல்ல நிலைக்கு உயரலாம் என்ற தகவலோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

- Advertisement -