பெண்கள் இதை எல்லாம் தொடர்ச்சியாக செய்து வந்தாலே போதும். தாங்கள் மட்டும் அல்லாது தன் கணவன், குழந்தை என அனைவரையும் வாழ்க்கையில் முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்ல முடியும்.

good things
- Advertisement -

நாம் நல்ல செயல்களை செய்யும் பொழுது நமக்கு சுப கிரகங்களின் ஆதிக்கம் அதிகரிக்கும். அதேபோல் தீய செயல்களை செய்யும் பொழுது பாவ கிரகத்தின் ஆதிக்கம் அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது. இதில் பெண்கள் செய்யும் நல்லவையும் தீயவையும் அவர்களை மட்டும் அல்லாமல் அவர்கள் குடும்பத்தில் உள்ள அனைவரையும் சென்றைக்கிறது. அந்த வகையில் பெண்கள் சில செயல்களை செய்வதன் மூலன் தாங்கள் மட்டும் அல்லாது தங்கள் கணவன், குழந்தை என அனைவரும் சிறப்புற்று வாழ சில எளிமையான வழிமுறைகள் இதோ.

அதே போல் தான் நாம் நல்லதை பேசினால் நமக்கு நன்மையே நடக்கும். தீயதை பேசினாலோ அல்லது செய்தாலோ நமக்கு தீமையே ஏற்படும் என்றும் கூறப்படுகிறது. பெண்கள் இதை கருத்தில் கொண்டு செய்தால் தனக்கு மட்டும் நன்மை ஏற்படாமல், தன் குடும்பத்திற்கே நன்மை ஏற்படும்.

- Advertisement -

பெண்கள் தங்கள் வாழ்க்கையில் சிறந்து விளங்குவதற்கு அவர்களின் கணவன் பெருந்துணையாக இருக்கிறார். ஆனால் இன்றைய காலகட்டத்தில் கணவன் மனைவிக்கிடையில் இருக்கும் உறவுகளில் பல விரிசல்கள் ஏற்பட்டு, பிரிந்து வாழும் சூழ்நிலை ஏற்படுகிறது. இந்த சூழ்நிலைக்கு காரணம் கேது பகவானே.

கேது பகவான் உறவு முறையில் பிரிவிற்கு காரண கர்த்தாவாக அமைகிறார். அவருடைய ஆதிக்கம் இருக்கும் பொருட்களாக கருதப்படுபவை, நம் உடம்பில் இருக்கும் நரம்புகள் மற்றும் தலைமுடி ஆகும். பெண்களின் தலைமுடிக்கும், அவர்களுடைய கணவரின் மீது அவர்களுக்கு இருக்கும் ஈடுபாட்டிற்கும் பெரும் தொடர்பு இருக்கிறதாக கருதப்படுகிறது.

- Advertisement -

பெண்கள் எப்பொழுதும் தங்கள் தலைமுடியை பின்னி போட வேண்டியது மிகவும் அவசியமான ஒரு செயலாக கருதப்படுகிறது. தலைவிரி கோலமாக இருப்பது சன்னியாசியின் கோலமாகும். இந்த கோலத்தினால் எந்த உறவினும், செயலிலும் பற்றில்லாமல் போவதாகவே அர்த்தமாகிறது. ஆனால் இன்றைய காலகட்டத்தில் இது நாகரீகமாக கருதப்படுகிறது.

மேலும் பெண்கள் எப்பொழுதும் நேர்வகுடு எடுத்து தான் தலை முடியை பின்னி போட வேண்டும். நேர்வகுடி எடுத்தால் லட்சுமி கடாட்சம் செழித்தோங்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. மேலும் நேர்வகுடி எடுக்காமல் எந்த பூஜையை செய்தாலும் லட்சுமி தேவி வாசம் செய்ய மாட்டாள் என்ற கருத்தும் நிலவி வருகிறது. நேர்வகுடு எடுப்பதன் மூலம் கணவனுடன் இருக்கக் கூடிய உறவானது நீடித்திருக்கும். மேலும் கணவனுக்கு அடுத்தபடியாக விளங்கும் வாரிசுகளும் நன்றாக இருப்பார்கள்.

- Advertisement -

பெண்கள் தாங்கள் அணிந்திருக்கும் திருமாங்கல்யத்தை மஞ்சள் கயிறில் கோர்த்து போடுவதன் மூலம் அவர்களுக்கும் அவர்களின் துணையான அவர்களின் கணவருக்கும் இடையில் இருக்கும் பந்தம் அதிகரிக்கும். ஒரு வீட்டில் இருக்கும் பெண்களை பார்த்தாலேயே அவர்கள் வீட்டில் மகாலட்சுமியின் வாசம் இருக்கிறதா இல்லையா என்பதை எளிதில் கண்டறிய முடியும்.

இதையும் படிக்கலாமே: கஷ்டம் தீர ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை தீபத்தை ஏற்றும் போது இந்த தவறை செய்யாதீர்கள்.

எந்த ஒரு பெண் மஞ்சள் தேய்த்து குளித்து தலையை பின்னி பூ வைத்து நெற்றியில் குங்குமம் இட்டு அன்றாட பணிகளை செய்ய தொடங்குகிறாளோ அந்த வீட்டில் யாரும் அழைக்காமலேயே மகாலட்சுமி வாசம் செய்வாள் என்பதில் எந்த ஐயமும் இல்லை. இந்த செயல்களை தினமும் செய்து மகாலட்சுமியின் பரிபூரண அருளை பெற்று இன்பமாக வாழுங்கள்.

- Advertisement -