பணத்தாலோ அல்லது வேறு வகையிலோ நிம்மதியே இல்லாமல் வாடுகிறீர்களா? குருவின் அருளை பெற்று சௌபாக்கியதோடும், சகல நிம்மதியோடு வாழ இதை செய்யுங்கள்.

Guru pariharam Tamil
- Advertisement -

ஒருவருடைய வாழ்க்கையில் நிம்மதி என்பது மிகப்பெரிய விஷயமாக கருதப்படுகிறது. அதிலும் தற்காலத்தில் நிம்மதி என்பதை பணத்தோடு அதிக தொடர்புடையதாக இருக்கிறது. பணம் சமந்தமாகவோ அல்லது பணத்தோடு தொடர்பில்லாத வேறு விடயத்திற்காகவோ ஒருவர் நிம்மதியை இழந்திருந்தால், அந்த சங்கடங்கள் நீங்கி நிம்மதியான வாழ்வு பெற உதவும் குரு பரிகாரம் குறித்து இங்கு பார்ப்போம்.

ஒருவருடைய வாழ்க்கையில் நன்மைகள் நடைபெற வேண்டுமென்றால் குருவின் அருள் கண்டிப்பாக இருக்க வேண்டும். அவரின் அருள் இல்லை என்றாலும் அவரின் கடைக்கண் பார்வை நம் மேல் பட்டாலேயே நமக்கு பல நன்மைகள் ஏற்படுகின்றன. நமக்கு கிடைக்கும் ஒவ்வொரு நன்மையில் இருந்தும் நம்முடைய நிம்மதி அதிகரித்து வருகிறது என்பது அனைவரும் உணர்ந்த உண்மையே. அவ்வாறு குருவின் அருளை பெறுவதற்கு மிகவும் எளிய பரிகாரத்தை இப்போது பார்ப்போம்.

- Advertisement -

ஒரு கிரகத்தின் ஆதிக்கம் என்பது அதற்குரிய தானியத்திலும், அதற்குரிய ரத்தினத்திலும் இருக்கிறது. அந்த தானியத்தையும் ரத்தினத்தையும் வைத்து தான் இன்று நாம் குருவின் பரிகாரத்தை பார்க்க போகிறோம். குருவின் தானியமாக வெள்ளை கொண்டை கடலை மற்றும் கருப்பு கொண்டை கடலை கருதப்படுகிறது. மேலும் குருவிற்குரிய ரத்தினமாக கருதப்படுவது கனக புஷ்ப ராகம் ஆகும்.

குருவிற்கு உரிய கிழமையாக கருதப்படுவது வியாழக்கிழமை. இந்த வியாழக்கிழமையில் குரு ஹோரையில் கருப்பு கொண்டை கடலை மற்றும் வெள்ளை கொண்டை கடலை இவை இரண்டையும் சரிசமமாக எடுத்துக்கொண்டு அருகில் இருக்கும் சிவாலயத்திற்கு சென்று, அங்கு நவகிரகங்களில் வீற்றிருக்கும் குரு பகவானிடமோ அல்லது தட்சிணாமூர்த்திடமோ அல்லது முருகனிடமோ இந்த கொண்டக்கடலையை வைத்து மனதார வேண்டிக் கொண்டு வீட்டிற்கு கொண்டு வரவேண்டும்.

- Advertisement -

பிறகு இந்த கொண்டைக்கடலையை ஒரு பாத்திரத்தில் கொட்டி அது மூழ்கும் அளவு நீரை ஊற்ற வேண்டும். பிறகு அந்த நீரில் நம்முடைய கைகளை வைத்து “ஓம் குருவே நமஹ” என்னும் மந்திரத்தை 108 முறை சொல்லி ஜெபிக்க வேண்டும். பிறகு அந்த தண்ணீரை எடுத்து தலையில் தெளித்துக் கொள்ள வேண்டும். மீதம் இருக்கும் தண்ணீரை செடிகளில் ஊற்றி விடலாம்.

அந்த கொண்டைக்கடலையை உலர வைத்து ஒரு மூட்டையாக கட்டி வைத்துக் கொள்ள வேண்டும். மறுநாள் மறுபடியும் அதே கொண்டக்கடலையை தண்ணீர் ஊற்றி கைகளை வைத்து 108 முறை “ஓம் குருவே நமஹ” என்று கூற வேண்டும். இவ்வாறு தினமும் நாம் செய்ய வேண்டும். 11 நாட்களுக்கு ஒரு முறை இந்த கொண்டைக்கடலையை நாம் மாற்றி விடலாம்.

- Advertisement -

கனக புஷ்பராகத்தை நாம் கடையிலிருந்து குரு ஹோரையில் வாங்கி வந்து, அதை எடுத்துக்கொண்டு கோவிலுக்கு சென்று நவகிரகங்களில் இருக்கும் குரு பகவானிடமோ அல்லது தக்ஷிணாமூர்த்தி இடமோ அல்லது முருகனிடமோ வைத்து வாங்கி வந்து அதையும் மேல கூறியது போல பாத்திர நீரில் போடு மந்திரத்தை கூறிய பிறகு அதை வீட்டில் இருக்கும் சிவபெருமானின் புகைப்படத்திற்கு பாதத்தின் கீழ் அல்லது முருகனின் பாதத்தின் கீழோ வைத்துவிடலாம்.

மறுநாள் மறுபடியும் இதே போல் செய்ய வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்துவர நம் வாழ்வில் குருவின் அனுக்கிரகம் கிடைத்து, நமக்கு நன்மைகள் பல ஏற்பட்டு, நிம்மதி பெருகும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை. குரு அருள் கிடைக்கப்பெற்ற அனைவரும் வாழ்க்கையில் பல வெற்றிகளை அடைந்து மகிழ்ச்சியுடனும், நிம்மதியுடனும் வாழ்கிறார்கள் என்பது நம் கண்கூடாக கண்ட உண்மையாகும்.

இதையும் படிக்கலாமே: நிரந்தரமான வேலை, வருமானம் உயர, தாராளமான பணவரவு, கடன் தீர்க்க, என உங்க வாழ்க்கையை புரட்டி போடும் அனைத்து இன்னல்களும் தீர அரச மரத்தடியில் இந்த தண்ணீரை ஊற்றினால் போதும்.

இந்த எளிய பரிகாரத்தை நாம் தினமும் மேற்கொண்டு நாமும் மகிழ்ச்சியுடனும் நிம்மதியுடனும் வாழலாம். குறிப்பு நாம் ஏற்கனவே உபயோகப்படுத்திய கனக புஷ்பராகத்தை இந்த பூஜைக்காக உபயோகப்படுத்த கூடாது. புதிதாக வாங்கி மட்டுமே உபயோகப்படுத்த வேண்டும்.

- Advertisement -