எவ்வளவு செலவு பண்ணியும் முடி எலி வால் மாதிரியே தான் இருக்கிறதா? 10 பைசா செலவில்லாமல் இப்படி செய்யுங்கள், முடி காடு போல அடர்த்தியாக வளரும்!

hair-fall-oil
- Advertisement -

எவ்வளவு செலவு பண்ணியும் முடி பிரச்சனையை தீர்க்க முடியாதவர்கள் கடைசியாக இதை ட்ரை பண்ணி பார்க்கலாம். ரொம்பவே பாரம்பரியமாக பின்பற்றி பயன்படுத்தப்பட்டு வரும் இந்த ஒரு குறிப்பு, இன்று பலரும் மறந்து விட்ட நிலையில் இருக்கிறோம். வீட்டிலேயே தயாரிக்க கூடிய எந்த ஒரு எண்ணெய் மிகவும் விலை மலிவானது. இதை தினமும் இந்த முறையில் நீங்கள் தடவி வந்தால், எலி வால் மாதிரி இருக்கிற உங்க முடி நல்ல காடு போல அடர்த்தியாக கருகருன்னு நீளமாக வளரும். முடி வளர பாரம்பரியமாக தேய்க்கும் எண்ணெய் என்ன எண்ணெய்? என்பதைத் தான் இந்த அழகு குறிப்பு சார்ந்த பகுதியின் மூலம் இனி தொடர்ந்து நாம் அறிந்து கொள்ள இருக்கிறோம்.

முடி வளர்வதற்கு பெரும்பாலும் கண்ட கண்ட எண்ணெய்களை பயன்படுத்தக் கூடாது. பாரம்பரியமாக செக்கில் ஆட்டிய இந்த எண்ணெய்களை நீங்கள் பயன்படுத்தும் பொழுது முடியின் தரமானது அதிகரிக்க துவங்கும். தலைமுடி ரொம்ப மென்மையானது. அதை நீங்கள் செயற்கை முறையில் பராமரித்தால் உடைந்து விடும் அபாயம் உண்டு. எனவே முடி அடர்த்தியாகவும், நல்ல வலுவாகவும் இருப்பதற்கு இயற்கையை நாடுங்கள்.

- Advertisement -

செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய் மற்றும் சுத்தமான விளக்கெண்ணெய் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். இதனுடன் வைட்டமின் ஈ கேப்ஸ்யூல் மலிவான விலையில் கடைகளில் கிடைக்கும். இதையும் வாங்கி வையுங்கள். இந்த மூன்று எண்ணெய்களையும் இந்த முறையில் நீங்கள் கலந்து பயன்படுத்தும் பொழுது ரிசல்ட் வேற லெவலில் இருக்கும்.

முதலில் 4 டேபிள்ஸ்பூன் அளவிற்கு தேங்காய் எண்ணெய் ஒரு பவுலில் சேர்த்துக் கொள்ளுங்கள். இதனுடன் ரெண்டு டேபிள் ஸ்பூன் அளவிற்கு விளக்கெண்ணெய் சேர்க்க வேண்டும். மூன்று வைட்டமின் ஈ கேப்ஸ்யூல் கத்தரித்து அதில் இருக்கும் எண்ணெயை சேருங்கள். இந்த மூன்று எண்ணெய்களையும் ஒன்றாக நன்கு கலந்து வைத்துக் கொள்ளுங்கள். இதை ஒரு பாட்டிலில் நீங்கள் ஸ்டோர் செய்து வைத்துக் கொண்டால் அவ்வப்பொழுது எடுத்து பயன்படுத்துவதற்கு ஈசியாக இருக்கும்.

- Advertisement -

இப்போது அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் பாதி அளவிற்கு தண்ணீர் ஊற்றி கொதிக்க வையுங்கள். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் நீங்கள் கலந்து வைத்துள்ள எண்ணெய் பாத்திரத்தை அதில் கொண்டு போய் வையுங்கள். தண்ணீர் கொதித்து பாத்திரத்தில் இருக்கக்கூடிய எண்ணெயும் கொதிக்க வேண்டும். இதை டபுள் பாய்லிங் முறை என்று கூறுவார்கள். நேரடியாக கொதிக்க வைக்காமல் இது போல டபுள் பாய்லிங் முறையில் கொதிக்க வைத்து பின்னர் மிதமான சூட்டில் இந்த எண்ணெயை நீங்கள் இரவு தூங்கும் முன்பு மசாஜ் செய்து விட்டு தூங்க வேண்டும். மறுநாள் தலைக்கு எப்பொழுதும் போல நீங்கள் குளித்துக் கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே:
முன்நெற்றியில் முடிகள் உதிர்ந்து தலையில் எட்டி பார்க்கும் வழுக்கையை கூட மறைய செய்து அசுர வேகத்தில் வளர வைக்க வல்லாரையுடன் இதை சேர்த்து போடுங்கள். இனி ஒரு முடி கூட உதிராது.

அது மட்டுமல்லாமல் இந்த எண்ணெயை நீங்கள் சாதாரணமாக தலைக்கு தேய்க்கும் எண்ணெயாகவும் பயன்படுத்தலாம். இப்படி மசாஜ் செய்யவும், தலைக்கு தேய்த்தும் இந்த எண்ணெயை தொடர்ந்து நீங்கள் பயன்படுத்தி வரும் பொழுது வேர்களில் இருந்து நல்ல வலுவான கேசம் வளர துவங்கும். இழந்த முடியும் மீண்டும் முளைக்க நல்ல ஒரு ஊட்டச்சத்து கிடைக்கும். இனி முடி உடையும் பிரச்சனை இல்லை. அடர்த்தியாகவும், நீளமாகவும் முடி வளரும். இனி உங்க முடி எலி மாதிரி இல்லாமல் காடு போல கரு கருன்னு வளரும்.

- Advertisement -