சிவப்பழகு பெற ஃபேஸ் பேக்

fairness face pack
- Advertisement -

சிவப்பழகை பெற வேண்டும் என்பது பலரின் கனவாகவே திகழ்கிறது. அதற்காக கெமிக்கல் நிறைந்த கடைகளில் விற்கக் கூடிய ஃபேர்னஸ் கிரீம்களை பயன்படுத்துவார்கள். இப்படி ஃபேர்னஸ் கிரீம்களை பயன்படுத்துவதன் மூலம் பக்கவிளைவுகள் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கிறது. இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் மிகவும் எளிமையான முறையில் சிவப்பழகை எப்படி பெறுவது என்று தான் பார்க்கப் போகிறோம்.

இயற்கையிலேயே பல பொருட்கள் நம்முடைய சிவப்பழகை அதிகரிக்க கூடிய பொருட்களாக திகழ்கிறது. அப்படிப்பட்ட பொருட்களை தேர்ந்தெடுத்து நாம் உபயோகப்படுத்துவதன் மூலம் நம்முடைய சிகப்பழகை நம்மால் பெற முடியும். இந்த ஃபேஸ் பேக்கை நாம் தினமும் உபயோகப்படுத்தலாம். இதனால் எந்த வித பாதிப்பும் ஏற்படாது. ஆண்கள் பெண்கள் என்று இரு பாலரும் பயன்படுத்தலாம்.

- Advertisement -

இந்த ஃபேஸ் பேக்கிற்கு முதலில் நாம் கெட்டியான தயிரை எடுத்துக் கொள்ள வேண்டும். சில நேரங்களில் வீட்டில் செய்யக்கூடிய தயிர் தண்ணியாக இருந்தால் அதை ஒரு வடிகட்டியை பயன்படுத்தி வடிகட்டி கெட்டியான தயிரை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். பொதுவாக தயிருக்கு சிகப்பலகை அதிகரிக்க கூடிய தன்மை இருக்கிறது. அடுத்ததாக இதற்கு தேவைப்படுவது பாதாம் பருப்பு அல்லது வால்நட் இவை இரண்டில் ஏதாவது ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டும். இரண்டு பாதாம் அல்லது இரண்டு வால்நட் எடுத்து அம்மிக்கல்லில் வைத்து அரைத்துக் கொள்ள வேண்டும்.

மிக்ஸி ஜாரை பயன்படுத்துவதை தவிர்த்துக் கொள்வது நல்லது. இயலாதவர்கள் மிக்ஸி ஜாரை பயன்படுத்திக் கொள்ளுங்கள். முடிந்த அளவு கல்லில் அரைப்பதுபோல் பார்த்துக் கொள்ள வேண்டும். பிறகு இதனுடன் இரண்டு ஸ்பூன் அளவிற்கு அரிசி மாவையும் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். இவை இரண்டும் நன்றாக அரைபட்ட பிறகு நாம் கெட்டியாக எடுத்து வைத்திருக்கும் தயிரையும் இதனுடன் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

முக்கியமான குறிப்பு இதில் தண்ணீர் சேர்க்கக்கூடாது. பாதாம் மற்றும் வால்நட்டில் எண்ணெய் பசை இருப்பதால் அது மிகவும் எளிதிலேயே அரை பட்டுவிடும். இப்பொழுது நம்முடைய ஃபேஸ்பேக் தயாராகிவிட்டது. இந்த ஃபேஸ் பேக்கை நம்முடைய முகத்தில் தினமும் இரவு படுக்க செல்வதற்கு முன் தடவி விட்டு 20 நிமிடம் அப்படியே விட்டுவிட்டு சாதாரண தண்ணீரில் முகத்தை கழுவ வேண்டும்.

ஒரு முறை நாம் பயன்படுத்தினாலே நல்ல சிவப்பழகை நம்மால் பெற முடியும் என்பதால் இதைத் தொடர்ந்து நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். மிகவும் கருத்த சருமம் இருப்பவர்கள் தினமும் பயன்படுத்த வேண்டும். ஓரளவுக்கு நிறம் வந்த பிறகு வாரத்திற்கு மூன்று முறை இதை பயன்படுத்தினால் போதும். நல்ல அழகான சிவப்பழகை நம்மால் பெற முடியும்.

இதையும் படிக்கலாமே: தலை முடி பிரச்சனைகளுக்கும் தீர்வாகும் தேங்காய் எண்ணெய்

மிகவும் எளிதில் கிடைக்கக்கூடிய இயற்கையான இந்த பொருட்களை பயன்படுத்தி நம்முடைய சிவப்பழகை அதிகரித்துக் கொள்ள முடியும் என்னும் பட்சத்தில் எதற்காக கெமிக்கல் நிறைந்த ஃபேர்னெஸ் கிரீம்களை உபயோகப்படுத்த வேண்டும்? ஆரோக்கியமான பொருட்களை உபயோகப்படுத்தி ஆரோக்கியமான முறையில் அழகாக திகழ்வோம்.

- Advertisement -