வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல்கள் விலக தீப பரிகாரம்

rahu bhagavan vilaku
- Advertisement -

நெகட்டிவ் எனர்ஜி என்று அழைக்கக் கூடிய எதிர்மறை ஆற்றல்கள் என்பது ஒவ்வொரு இடத்திலும் நிறைந்து தான் இருக்கிறது. அதிகப்படியாக எதிர்மறை ஆற்றல்கள் இருக்கும் பட்சத்தில் தான் அதனுடைய தாக்கம் நமக்கு அதிகமாக தெரியும். அதிக அளவில் நேர்மறை ஆற்றல்கள் இருந்து சிறிதளவு மட்டும் எதிர்மறை ஆற்றல்கள் இருந்தால் எதிர்மறை ஆற்றல்களால் எந்த வித பாதிப்பும் ஏற்படாது. ஒரு சிலரின் இல்லத்தில் இந்த எதிர்மறை ஆற்றலானது அதிகப்படியாக இருந்து அவர்களை எந்தவித முன்னேற்றத்தையும் தரவிடாமல் பாடாய்ப் படுத்திக் கொண்டிருக்கும். அப்படிப்பட்ட எதிர்மறை ஆற்றல்களை விலக்கி நேர்மறை ஆற்றல்களை அதிகரிப்பதற்கு செய்யக்கூடிய ஒரு எளிமையான தீப பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

எதிர்மறை ஆற்றல் நீக்க 9 நாள் இதை செஞ்ச போதும்

ஒரு வீட்டில் நேர்மறை ஆற்றல்கள் அதிகம் இருந்தால் தான் அந்த வீட்டில் தெய்வ நடமாட்டம் என்பது இருக்கும். தெய்வ நடமாட்டம் இருக்கும் வீட்டில் எந்த வித குறையும் இருக்காது. செல்வ செழிப்பு நிறைவாக இருக்கும். அதோடு குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த நேர்மறை ஆற்றலை நாம் அதிகரிப்பதற்கு முதலில் நம் வீட்டில் இருக்கக் கூடிய எதிர்மறை ஆற்றலை விலக்க வேண்டும். எதிர்மறை ஆற்றல் விலகி விட்டாலே நேர்மை ஆற்றல் தானாக வந்து விடும். சரி இப்பொழுது பரிகாரத்திற்கு போகும்.

- Advertisement -

இந்த வழிபாட்டை ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் செய்வது மிகவும் சிறப்பு. வாரத்திற்கு ஒரு முறை மட்டும் செய்வதாக இருந்தால் 9 வாரங்கள் செய்ய வேண்டும். தினமும் ஏற்றுவதாக இருந்தால் தொடர்ந்து 9 நாட்கள் ஏற்றினால் போதும். இதற்கு நமக்கு 9 அகல் விளக்குகள் வேண்டும். மேலும் 9 கற்பூரவள்ளி இலைகள் வேண்டும். இதை நாம் ஓமவள்ளி இலை என்று கூட கூறுவோம்.

தினமும் இந்த வழிபாட்டை செய்வதாக இருந்தால் பிரம்ம முகூர்த்த வேளையிலோ அல்லது சூரியன் அஸ்தமனமான பிறகோ செய்ய வேண்டும். ஞாயிற்றுக்கிழமையில் செய்வதாக இருந்தால் ராகு காலத்தில் செய்ய வேண்டும். வீட்டு பூஜை அறையில் ஒரு தாம்பாள தட்டை எடுத்துக் கொள்ளுங்கள். ஒன்பது கற்பூரவள்ளி இலைகளை பறித்து வந்து அதை சுத்தமான தண்ணீரில் கழுவி அந்த தாம்பாள தட்டில் வரிசையாக வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அந்த கற்பூரவள்ளி இலைகளுக்கு சந்தனம் குங்குமம் வைத்து விட்டு அந்த இலைகளுக்கு மேலே 9 அகல் விளக்குகளை வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அந்த அகல் விளக்குகளில் வேப்பெண்ணையை ஊற்றி சிவப்பு திரிப்போட்டு தீபம் ஏற்ற வேண்டும். இப்படி நாம் தீபம் ஏற்றும் பொழுது இந்த வேப்ப எண்ணையின் மனமும் கற்பூரவள்ளியின் மனமும் நம் வீடு முழுவதும் பரவி வீட்டில் இருக்கக்கூடிய தீய சக்திகள் அனைத்தையும் விலகி ஓடவிடும்.

இதையும் படிக்கலாமே:வீண்விரயம் ஏற்படாமல் இருக்க மகாலட்சுமி வழிபாடு

மிகவும் எளிமையான இந்த தாந்திரீக பரிகாரத்தில் நம்பிக்கை இருப்பவர்கள் முழு நம்பிக்கையுடன் இந்த பரிகாரத்தை செய்து வீட்டில் இருக்கக் கூடிய எதிர்மறை ஆற்றல்களை விலக்கி நேர்மறை ஆற்றல்களை பெற்றுக் கொள்ளலாம்.

- Advertisement -