இலை அர்ச்சனை பலன்கள்

ilai archanai
- Advertisement -

ஆதி முதல்வனாக திகழக்கூடியவர் விநாயகர் பெருமான் என்பது பலரும் அறிந்த உண்மையே. அப்படிப்பட்ட விநாயகப் பெருமானின் அருள் நமக்கு கிடைத்தால் நாம் நினைத்த காரியம் அனைத்தும் நடைபெறும் என்று கூறப்படுகிறது. எந்த ஒரு காரியத்தையும் செய்வதற்கு முன்பாகவும் விநாயகப் பெருமானை நாம் வழிபடுவோம். அது நம்முடைய மரபாகவே திகழ்கிறது. அப்படிப்பட்ட விநாயகர் பெருமானை எந்த காரியத்திற்காக வழிபடும்போது எந்த இலையை வைத்து அர்ச்சனை செய்ய வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

ஒரு குழந்தை கருவில் தங்கி தன்னுடைய இறுதி நாள் வரை நடக்கக்கூடிய அனைத்து செயல்களிலும் வெற்றி கிடைக்க வேண்டும் என்றால் விநாயகப் பெருமானை வழிபட வேண்டும். அப்படி வழிபடும் போது விநாயகப் பெருமானுக்குரிய மந்திரங்களை கூறி வழிபடுவோம். அதோடு மட்டுமல்லாமல் அவருக்கு மிகவும் பிடித்தமான மலர்களை வைத்து அர்ச்சனை செய்வோம். இப்படி மலர்களை வைத்து அர்ச்சனை செய்வதோடு நிறுத்திக் கொள்ளாமல் நம்முடைய வேண்டுதலுக்கு ஏற்றவாறு அவருக்கு உகந்த இலைகளையும் நாம் வைத்து அர்ச்சனை செய்ய வேண்டும். இப்படி செய்வதன் மூலம் நம்முடைய வேண்டுதலுக்குரிய முழு பலனையும் நம்மால் பெற முடியும்.

- Advertisement -

கருவில் இருக்கும் குழந்தை ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் எருக்கு இலையை வைத்து அர்ச்சனை செய்ய வேண்டும். சுகப்பிரசவம் நடக்க வேண்டும் என்று விரும்புபவர்கள் மருத இலையை வைத்து வழிபட வேண்டும். அறிவுத்திறன் அதிகரிக்க வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் விஷ்ணு கிராந்தி இலையை வைத்து வழிபட வேண்டும். பேரும் புகழும் கிடைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் மாதுளை இலையை வைத்து வழிபட வேண்டும்.

செய்யும் முயற்சிகள் வெற்றியடைய வேண்டும் என்று நினைப்பவர்கள் அரளி இலையை வைத்து வழிபட வேண்டும். கல்வி அறிவு சிறப்பாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இலந்தை இலையை வைத்து வழிபட வேண்டும். சகல சௌபாக்கியமும் கிடைக்க வேண்டும் என்று விரும்புபவர்கள் அருகம்புல்லை வைத்து வழிபட வேண்டும். உலகத்தில் இருக்கக்கூடிய ஆனந்தம் அனைத்தும் பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் வில்வ இலையை வைத்து வழிபட வேண்டும்.

- Advertisement -

வீரம் பெருக வேண்டும் என்று நினைப்பவர்கள் கண்டங்கத்திரி இலையை வைத்து வழிபட வேண்டும். உயர் பதவிகள் பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் அரச இலையை வைத்து வழிபட வேண்டும். சொந்தமாக வீடு நிலம் வாங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் ஜாதிமல்லி இலையை வைத்து வழிபட வேண்டும். செல்வம் பெருக வேண்டும் என்று நினைப்பவர்கள் தாளம் பூ செடியில் இருக்கும் இலையை வைத்து வழிபட வேண்டும். கடன் தீர வேண்டும் என்று நினைப்பவர்கள் அகத்தி இலையை வைத்து வழிபட வேண்டும்.

இதையும் படிக்கலாமே: சொத்து பிரச்சனை நீங்க வழிபாடு

இந்த முறையில் நம்முடைய வேண்டுதலைக்கு ஏற்றவாறு இலைகளை தேர்வு செய்து அந்த இலைகளால் விநாயகப் பெருமானுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால் நம்முடைய வேண்டுதல் நிறைவேறும். அர்ச்சனை செய்யும் அளவிற்கு இலைகள் கிடைக்காத பட்சத்தில் ஒரே ஒரு இலையை மட்டும் முழு மனதோடு நம்பிக்கையோடு அவருக்கு சமர்பித்தால் முழு பலனையும் நமக்கு வாரி வழங்குவார்.

- Advertisement -